search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனரமைப்பு"

    • நரிக்குடி அருகே இருஞ்சிறை பெரிய கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும்.
    • விவசாயிகள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பள வில் பெரிய கண்மாய் உள்ளது. இது பொதுப் பணித் துறையால் பராம ரிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து இருஞ்சிறை, வடக்குமடை, செங்கமடை, தர்மம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இருஞ்சிறை கண்மாய் பகுதியில் பெரியமடை, கருதாமடை, தாழிமடை என 5 க்கும் மேற்பட்ட மடைகள் இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டு தோறும் கிருதுமால் விவசாய பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விரகனூர் அணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து உளுத்திமடை, கட்டனூர் வழியாக இருஞ்சிறை பெரிய கண்மாயை வந்தடைகிறது.

    இந்த நிலையில் கண்மாய் மடைகள், அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் பல வருடங்களாக தூர்வா ராமல் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கண்மாய் பகுதியின் சில மடைகள் சேதமடைந்தும், பெரும்பாலான மடைகளில் துடுப்புகள் இல்லாமலும் இருப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது அது வீணாக வெளியேறி அருகிலுள்ள தரிசு நிலங்க ளுக்கு செல்வதாகவும், இதனால் கண்மாய் நீர் முழுமையாக விளை நிலங்களுக்கு சென்று சேர்வதில்லை என விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.

    இது குறித்து பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது. முக்கிய பாசன ஆதார மாக உள்ள இந்த கண்மாயை தூர்வாரு வதற்கு போதிய நிதி ஆதாரமில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், வழக்கம் போல விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.

    மேலும் கடந்த முறை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீர் வெளியேறாமல் இருக்க விவசாயிகள் மணல் மூட்டைகளை மடைக ளுக்குள் அடுக்கி அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இருஞ்சிறை கண்மாய்க்கு மீண்டும் தண்ணீர் வந்தாலும் வீணாக வெளியேறி விவசாயத்திற்கு பயன்படாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    கடந்த வருடம் வைகை அணை திறக்கப்பட்டு இருஞ்சிறை கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் விவசாயம் முடிந்து 4 மாத தண்ணீர் இருந்தும் சேதமடைந்த மடைகளால் கண்மாய் நீரானது வீணாக வெளியேறி விட்டதாகவும், தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி சரிவர சீரமைக்கப்படாத காரணத்தால் புதர்மண்டி கிடப்பதாகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் இருக்கும் பகுதியானது தடம் தெரியாமல் போனதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    இருஞ்சிறை பெரிய கண்மாயை நம்பி 10 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சுமார் 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகளின் அலட்சி யத்தால் கண்மாய் பகுதி செப்பனிடப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், 1990-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டிய உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே பொதுப்பணி துறையினர் இதை கவனத்தில் எடுத்து அனைத்து மடைகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த மடைகள், கால்வாய்களை தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்து தர வேண்டும் எனவும், கண்மாயில் தண்ணீர் சீராக செல்லவும், வீணாக தண்ணீர் வெளியேறாத வகையிலும் கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.
    • இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    வெளிர் மஞ்சள் நிறம்

    அதன் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு தற்போது புதிதாக வர உள்ள இந்த பஸ்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளன. விரைவில் இயக்கத்திற்கு வர உள்ள இந்த பஸ்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப் பட்டு வருகிறது.

    இந்த பஸ்கள் சென்ைன, பெங்களூர், கரூரில் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி எட்டு கோட்டங்க ளிலும் 500 பஸ்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் சேலம் சரகத்தில் மட்டும் 100 பழைய டவுன் பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    நவீன முறையில் வடிவமைப்பு

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் 1047 பஸ்களும், தருமபுரி கோட்டத்தில் 853 பஸ்கள் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் 14 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். தினசரி சாதாரண கட்டண டவுன் பஸ்களில் 6 லட்சம் மகளிர் பயணம் செய்கிறார்கள்.

    பழைய பஸ்கள் தற்போ துள்ள பயணிகள் ரச ணைக்கு ஏற்ப நவீன முறை யில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப் பட்ட பஸ்களுக்கு கீழ் பகுதியில் வெளிர் கிரே கலரிலும், மேல் பகுதியில் நீல நிறத்திலும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

    பைபர் சீட்

    தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களில் இருக்கை கள் இரும்பு ரெக்சினால் உள்ளது . புனரமைக்கப்பட்ட டவுன் பஸ்களில் பைபர் சீட் அைமக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, கும்பகோ ணம் , திருநெல்வேலி கோட்ட டவுன் பஸ்களில் பைபர் இருக்கைகள் உள்ளன.

    சேலத்தில் பைபர் சீட் அமைப்பது இதுவே முதல் முறை. இந்த பஸ்கள் விரை வில் மக்கள் பயன்பட்டுக்கு வரும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தர்கா வரலாற்றிலேயே இது ஒரு சாதனை நிகழ்வு, இந்த சரித்திர கால நிகழ்வில் நானும் இருப்பது மகிழ்வான தருணம்.
    • நாகூர் தர்காவை உலகிலேயே முதல் சூரிய ஒளியில் இயங்கும் தர்காவாக மாற்றுவது, யாத்தீரக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றப்படும்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் உள்ள நூறு வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த மண்டபங்களை புணரமைக்க தமிழக அரசு கடந்த 2022-23ம் ஆண்டு தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி ஒரு கோடியே நாற்பது லட்சம் நாகூர் தர்கா பெயரிலேயே கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட காசோலை வழங்கியது.

    இந்த மராமத்து பணி துவங்குவதற்கான டெண்டர் விடும் பணி முறைப்படி வரும் வாரங்களில் துவங்க இருக்கிறது. புதுப்பிக்கப்பட இருக்கின்ற மண்டங்களை நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ நாகூர் தர்காவிற்கு ேநரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    நாகூர் தர்காவினுள்உள் உள்ள எல் கருங்கல் மண்டபம், சிறிய மையாத்தாகொல்லை மண்டபம், கால்மாட்டு வாசல் வாலை மண்டபம், கிழக்கு வாசல் இடப்புற மண்டபம், வலப்புற மண்டபம் ஆகிய மண்டபங்களை பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினர் உடன் நாகூர் தர்கா பிரசிடன்ட் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், பெருமராமத்து கணக்கர் ராஜேந்திரன், தர்கா அலுவலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் ஷாநாவஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    நாகூர் தர்காவுக்கு அரசு மராமத்து பெரு மானியம் பெறப்பட்டது. தர்கா வரலாற்றிலேயே இது ஒரு சாதனை நிகழ்வு, இந்த சரித்திர கால நிகழ்வில் நானும் இருப்பது மகிழ்வான தருணம். மேலும் நாகூர் தர்கா மார்கெட் பார்க்கிங் வசதியுடன் புணரமைப்பது, நாகூர் தர்கா சார்பாக கல்வி கூடங்கள் உருவாக்குவது, நாகூர் தர்கா சார்பாக மருத்துவமனை, சமத்துவ கூடம், நாகூர் தர்காவை உலகிலேயே முதல் சூரிய ஒளியில் இயங்கும் தர்காவாக மாற்றுவது, யாத்தீரக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற தர்கா நிர்வாகத்தில் உள்ள அனைத்து திட்டங்களையும் படிபடிப்யாக அரசு மற்றும் தனியார் உதவியுடன் நிறைவேற்றி தர முழு முயற்சி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் நகரி சாலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான டெலிபோன் மற்றும் இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வந்தது. 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துவந்தனர். ஆனால் தற்போது இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்போது ஒரே ஒரு பணியாளர் வாரம் ஒருமுறை மட்டும் வந்து செல்லும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பிஎஸ்என்எல் சிம்கார்டு மற்றும் இணைய இணைப்புகளை பெறுவது இப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதனால் இந்த அலுவலகத்தை மீண்டும் முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இது குறித்து ஓய்வு பெற்ற தொலைதொடர்பு துறை பணியாளர் மகாராஜன் கூறுகையில், ஆரம்பகாலங்களில் லேண்ட்லைனுக்குரிய எக்ஸ்சேன்ச் மட்டுமே செயல்பட்டு வந்தநிலையில், பின்னர் 2ஜி மற்றும் 3ஜி அலைகற்றை கூடுதல் வசதிகள் பெற்று டவர் மூலம் தொலைதொடர்பு சேவையை அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனத்தினர் மற்றும் பயனீட்டாளர்கள் என பலர் பெற்று வந்தனர். இந்த நிலையில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை உரிமம் கிடைக்காத நிலை தொடர்வதால் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்கி சோழவந்தான் பி.எஸ்.என்.எல். அலுவலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • நியாயவிலைக் கடை பொருட்களை வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்பட்டு வாங்கி வந்த நிலையில் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சாஸ்தாநகர், விஷ்ணுபுரம், விஷ்ணுபுரம் காலனி, ததேயூஸ்புரம் மற்றும் ராஜீவ்நகர் ஊர் பொதுமக்கள் பகுதி நேர நியாய விலைக் கடை திறக்க வேண்டுமென தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இதனடிப்படையில் இறச்சகுளம் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ்நகர் பகுதியில் உள்ள கட்டிடம், ஊராட்சி நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு, பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்கப்பட்டது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடையினை திறந்து வைத்து முதல் விற்பனையை யும் தொடங்கி வைத்து பேசுகையில், இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இப்பகுதி மக்கள் அரிசி, கோதுமை போன்ற நியாயவிலைக் கடை பொருட்களை வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சிரமப்பட்டு வாங்கி வந்தார்கள். இந்நிலையை மாற்றி இன்று உங்கள் நலன் கருதி இப்பகுதியிலேயே நியாயவிலைக் கடை பொருட்களை வாங்குகின்ற வகையில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது.

    இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஸ், ஒன்றியக் குழு உறுப்பினர் மகராஜபிள்ளை ஆகியோர் இப்பகுதி மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறார்கள். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். பகுதி நேர நியாயவிலைக் கடையினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.

    இறச்சகுளம் ஊராட்சித் தலைவர் நீலகண்ட ஜெகதீஸ், தோவாளை ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியம் அருளும் என்னும் நம்பிக்கை நிலவிவருகிறது.
    • மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த ஜீவ பீடத்தை புனரமைப்பு செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது.

    ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), குடும்பத்தினருக்கு ஆன்ம பலத்தை அருளும் என்னும் நம்பிக்கை நிலவி வருகிறது.

    நாகை அருகே நாகூரில் குயவர் மேட்டு தெருவில் 400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து இங்கே ஜீவ சமாதி நிலையை அடைந்த ஸ்ரீ காங்கேய சித்தர் மடம் உள்ளது.

    மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இந்த ஜீவ பீடத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் புனரமைப்பு செய்து தின, வார, மாதாந்திர பூஜையினை செய்து வருகின்றனர்.

    ஆவணி மாத பவுர்ணமி தினத்தன்று சித்தருக்கு தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி வேள்வி செய்து அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

    உபயத்தினை சிவா குடும்பத்தினர் செய்தனர்.

    இந்த வேள்வியில் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேள்வியினை காங்கேய மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் சிவாச்சாரியார் செய்தனர்.

    நிகழ்ச்சியை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்தனர்.

    • திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டது.
    • ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்து ரோடு, எம்ஜிஆர் நகர் அருகே ஒரு கோடி மதிப்பில் பிஏபி கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணியை செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலானது பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 126.100 கிலோமீட்டரிலிருந்து பிரிகிறது, கடந்த 1981 ம் ஆண்டு முதல் 1986 ம் ஆண்டு வரை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆயக்கட்டு பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது/

    இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 270.650கிலோமீட்டர் ஆகும். இந்த வாய்க்காலானது திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டதாகும்.தன் மொத்த ஆயக்கட்டு பரப்பு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு முதலாம் மண்டலத்தில் 12.108 ஏக்கர், இரண்டாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து176 ஏக்கர், மூன்றாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 91 ஏக்கர், நான்காம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 7 ஏக்கர் பாசனம் பெறப்பட்டு வருகிறது.

    திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட குறுக்கு கட்டுமானங்களான மதகுகள் மிகவும் சிதலமடைந்து இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டி இருப்பதாலும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாசன காலங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் பாசன நீர் வழங்க இடையூர் ஏற்படுவதால் ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் லட்சுமணன்.தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை உடுமலைப்பேட்டை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் வடிவேல், உதவிபொறியாளர் கோகுல சந்தானகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம்,தி.மு.க.நகர செயலாளர் கே.ஆர். முத்து குமார்,நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சபை நிர்வாகிகள்,காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×