search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள்"

    • பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி
    • மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

    தக்கலை ;

    முளகுமூடு புனித ேஜாசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் விஜோலின் என்ற மாணவன் இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதுபோல் பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய அளவில் நடைபெறும் கபடி மற்றும் கோ-கோ போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்கள். அவர்களை பள்ளி தாளாளர் டோமினிக் கடாட்ச் தாஸ், பள்ளி முதல்வர் பின்சி செபாஸ்டின், உடற்கல்வி ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், தூய மரியன்னை பசிலிக்கா ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • கொலை நடப்பது போல் ரீல்ஸ் செய்து பதிவிட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
    • நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.

    விருதுநகர்

    சாத்தூரில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழா முடிந்த பின்னர் 6 மாணவர்கள் சேர்ந்து பார் ஊழியர் கொலை செய்யப்படுவது போல் நடித்து ரீல்ஸ் செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் மாணவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

    இதையடுத்து அம்மாபட்டி போலீசார் அந்த மாணவர்களை கைது செய்து முதல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி மாணவர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தார்.

    திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி பல்லடம் அம்பாள் புரொபஷனல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் மாணவர் பிரிவில் குண்டுஎறிதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவன் ஆர்.கோகுல் 2-ம் இடமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் பிளஸ்-1 மாணவர் பி.சந்துரு 2-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி எம்.வைஷ்ணவி முதலிடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி ஜி.ஆதியா 2-ம் இடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடமும் பிடித்தார். 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆதியா, வைஷ்ணவி, சுதீபா, சர்விகா, கார்னிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற 2 மாணவர்களும், 5 மாணவிகளும், செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர்.

    நாகர்கோவில் :

    நான் முதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லக சிறு கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத் துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

    நான் முதல்வன் திட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத் தில் உள்ள 59 அரசு மேல்நிலைப்பள்ளி ணகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர். பெற்றோரை இழந்த மாணவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் போன்றோர் கள் அழைத்து செல்லப்பட்ட னர்.

    இந்த கல்வி ஆண்டில் (2023-2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 59 அரசு மேல்நிலைப்பள்ளி களி லிருந்து குறைந்தபட்சம் பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் மொத்தம் 2,065 மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு களப்பயண மாக அழைத்து செல்ல திட்டமிடப்பட் டுள்ளது. மாணவர்கள் கல்லூரி களுக்கு வரும்போது அவர்களை பேராசிரி யர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வரவேற்று கல்லூரியில் உள்ள அனைத்து உட்கட்ட மைப்பு வசதிகள், நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்றவற்றை காண்பித்து மாணவர்க ளுக்கு ஆர்வமூட்டி அவர்களை கல்லூரியில் சேர தூண்ட வேண்டும்.

    70 மாணவர்களுக்கு 1 பஸ் வீதம் அரசு பஸ்கள் வசதி செய்யப்படும்.

    கூடுதல் பஸ்கள் தேவைப்படின் களப்ப யணம் மேற்கொள்ளப்படும் கல்லூரிகள், கல்லூரி பஸ் வசதி செய்யவும், அதற்கான செலவினம், மாணவர்க ளுக்கான உணவு வசதி போன்றவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியிலிருந்து மேற்கொள்ளவும் தெரி விக்கப்பட்டுள்ளது. தனி யார் கல்லூரிகளையும் தேர்வு செய்ய ஆலோ சிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

    கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசு
    • போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம் பாராட்டினார்

    நாகர்கோவில், 

    மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கராத்தே போட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசையும், மாணவி பிரித்தீ 2-ம் பரிசையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவிகள் சங்கீஷா கராத்தே குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும், சரணிஷா குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும் கட்டா பிரிவில் 3-ம் பரிசையும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் கட்டா, குமித்தே போட்டிகளில் மணவன் ராகவ் முதல் பரிசை வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், இயக்குனர்கள் முகிலரசு, ஆடலரசு, முதல்வர் தீபாசெல்வி, ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், ஆனிரீனா, சேவியர், வனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்தரசி, ஓசான்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர்.
    • மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பூவம் வயல் பகுதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர். இதற்காக தங்கள் வீடுகளில் இருந்து பொருட்களை கொண்டு வந்து அவர்கள் உணவு தயாரித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு சமைத்த உணவை அவர்கள் சாப்பிட்டனர். இதில் மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது
    • இந்திய அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு பிக்கிள் பந்து அசோசியேஷன் நடத்திய 2 வது மாநில அளவிலான பிக்கிள் பந்து போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று தேசிய போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    3-வது வகுப்பு படிக்கும் மாணவர் அபினித் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். மேலும் இதே பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கும் மாணவர் ஆதர்ஷ் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இவர்கள் இருவரும் மார்த்தாண்டம் சில்வர் சுரேஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் ஆவார். மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் கோவாவில் வைத்து நடைபெற்ற தேசிய போட்டியிலும், கடந்த வருடம் மும்பையில் வைத்து நடைபெற்ற பிக்கிள் பந்து உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மார்த்தாண்டம் சில்வர் சுரேஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி உரிமையாளர் சுரேஷ்குமார் மற்றும் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இருவரையும் பாராட்டினார்கள்.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • மதுரையில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை யொட்டி மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் வருகிற 14-ந்தேதி எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    13,15,17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்கள் சொந்த சைக்கிள் களை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரிக் கப்பட்ட சாதாரண கைப் பிடி கொண்ட சைக்கிள் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கியர் சைக்கிள், ரேஸ் சைக்கிள்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாது.

    மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங் கில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4 முதல் 10 வரை இடம் பிடிப்ப வர்களுக்கு ரூ.250 ஊக்கப் பரிசும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருப்பூர்:

    உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள்எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள்,உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421 – 2971183 என்ற அலுவலகத்தொலைபேசி எண் அல்லது 99405 90165 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15-12-2023-க்குள் மாவட்டத்தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம்,அறை எண்.608, 6-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் என்றமுகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
    • சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.

    திருப்பூர்:

    கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட கற்றல் இடைவெளி போக்க எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.வரும் 2025 வரை, இந்த சிலபஸ் அடிப்படையில் தான் பாடம் கையாளப்படும். 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை, அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையினராக பிரித்து பாடம் நடத்தப்படுகிறது.

    வினாத்தாள் பிரத்யேகமாக வடிவமைத்து, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்களின் கற்றல் நிலை பரிசோதிக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு வகை வினாத்தாள் திரையில் தோன்றும். இதை ஆசிரியர்கள் உதவியோடு விடையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்தேர்வு ஆசிரியர்களின் மொபைல் போன் மூலமாக நடத்தப்படுகிறது. அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வாராந்திர தேர்வு வெள்ளிக்கிழமை துவங்கி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடருகிறது.சர்வர் குளறுபடி, நெட்வொர்க் சிக்கல் இல்லாமல் இருந்தால் மட்டுமே, இருநாட்களில் அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் தேர்வை முடிக்க முடியும்.மீதமுள்ள நாட்களில் வகுப்பு கையாள்வதோடு, அதிக வகுப்பு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இரண்டாம் பருவத்தில் இருந்து இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், வாரத்தில் அதிகபட்சம் 3 நாட்கள் வரை, ஆன்லைன் தேர்வு நடத்திவிட்டு மீதமுள்ள நாட்களில் மட்டுமே பாடம் கையாள வேண்டியிருக்கிறது. ஒரே நாளில் ஆன்லைன் தேர்வு நடத்துமளவுக்கு கம்ப்யூட்டர்களோ, டேப்லெட் போன்ற எந்த உபகரணங்களும், தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.

    இதுகுறித்து தொடர்ச்சியாக ஆசிரியர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் தற்போது இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர்
    • சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி யில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி மாணாக்கர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    மேலும் முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணக்கர்கள் உடன் சென்றனர். திருவ னந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையம், சுற்றுலாத்தலங்க ளான விழிஞ்ஞம் கலங்கரை விளக்கு, பூவாறு கடற்கரை தீவு போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.

    முன்னதாக சுற்றுலா செல்லும் தலங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியரின் விளக்கவுரை யுடன் கூடிய காணொலி காட்சியும் காண்பிக்கப் பட்டது. திருவனந்தபுரம், பலவகையான ஆய்வகங் களை கொண்ட சி.எஸ்.ஐ. ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையமானது, தேசிய அள விலும், சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அதனை குறித்து மாணாக்கர்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் அமைந்திருந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
    • கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

    தாளவாடி:

    தாளவாடி சுற்று வட்டார பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தாளவாடி, சூசைபுரம், மல்லங்குழி, பனக்கள்ளி ஆகிய பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் படியில் தொங்கிய படி ஆபத்தான முறையில் தினந்தோறும் பயணம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடியில் இருந்து சூசைபுரம் வழியாக பனக்கள்ளி நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் போதிய இடம் இல்லாத காரணத்தால் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.

    இது பற்றி மாணவ- மாணவிகள் கூறும்போது,

    காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டு மென அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப் பட்டுள்ளதாகவும், இது வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டினர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

    ×