என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடத்த உத்தரவு - ஆசிரியர்கள் நிம்மதி
- வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
- சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.
திருப்பூர்:
கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட கற்றல் இடைவெளி போக்க எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.வரும் 2025 வரை, இந்த சிலபஸ் அடிப்படையில் தான் பாடம் கையாளப்படும். 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை, அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையினராக பிரித்து பாடம் நடத்தப்படுகிறது.
வினாத்தாள் பிரத்யேகமாக வடிவமைத்து, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்களின் கற்றல் நிலை பரிசோதிக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு வகை வினாத்தாள் திரையில் தோன்றும். இதை ஆசிரியர்கள் உதவியோடு விடையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்தேர்வு ஆசிரியர்களின் மொபைல் போன் மூலமாக நடத்தப்படுகிறது. அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வாராந்திர தேர்வு வெள்ளிக்கிழமை துவங்கி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடருகிறது.சர்வர் குளறுபடி, நெட்வொர்க் சிக்கல் இல்லாமல் இருந்தால் மட்டுமே, இருநாட்களில் அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் தேர்வை முடிக்க முடியும்.மீதமுள்ள நாட்களில் வகுப்பு கையாள்வதோடு, அதிக வகுப்பு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இரண்டாம் பருவத்தில் இருந்து இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், வாரத்தில் அதிகபட்சம் 3 நாட்கள் வரை, ஆன்லைன் தேர்வு நடத்திவிட்டு மீதமுள்ள நாட்களில் மட்டுமே பாடம் கையாள வேண்டியிருக்கிறது. ஒரே நாளில் ஆன்லைன் தேர்வு நடத்துமளவுக்கு கம்ப்யூட்டர்களோ, டேப்லெட் போன்ற எந்த உபகரணங்களும், தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.
இதுகுறித்து தொடர்ச்சியாக ஆசிரியர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் தற்போது இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்