search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முளகுமூடு புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் தமிழக அணிக்கு தேர்வு
    X

    முளகுமூடு புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் தமிழக அணிக்கு தேர்வு

    • பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி
    • மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

    தக்கலை ;

    முளகுமூடு புனித ேஜாசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் விஜோலின் என்ற மாணவன் இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட கபடி அணி வீரர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதுபோல் பிளஸ்-1 பயிலும் ஆன்றோ மெர்பின் என்ற மாணவர் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட கோ-கோ போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய அளவில் நடைபெறும் கபடி மற்றும் கோ-கோ போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்கள். அவர்களை பள்ளி தாளாளர் டோமினிக் கடாட்ச் தாஸ், பள்ளி முதல்வர் பின்சி செபாஸ்டின், உடற்கல்வி ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், தூய மரியன்னை பசிலிக்கா ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×