search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உணவு விழாவில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    உணவு விழாவில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்: ஆஸ்பத்திரியில் அனுமதி

    • தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர்.
    • மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பூவம் வயல் பகுதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உணவு திருவிழா நடத்தினர். இதற்காக தங்கள் வீடுகளில் இருந்து பொருட்களை கொண்டு வந்து அவர்கள் உணவு தயாரித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு சமைத்த உணவை அவர்கள் சாப்பிட்டனர். இதில் மாணவர்கள் உள்பட 14 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×