search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்காணல்"

    • மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 21 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். பி.எஸ்.சி. நர்சிங், துணை நர்சிங் படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.

    1 மருந்தாளுனர், 3 ஆய்வக நுட்புநர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மருந்தாளுனர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம், ஆய்வக நுட்புநர் பணிக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக வருகிற 25-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேர்காணலில் தகுதி பெற்று காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்துக்குள் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • பேரூர் நிர்வாக பணி, சமூக வலைதளப்பிரிவு, மகளிர் பிரிவு ஆகிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
    • விருப்ப மனு நேரில் கொடுத்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றார்கள்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாக பணி, சமூக வலைதளப்பிரிவு, மகளிர் பிரிவு ஆகிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் திருப்பூரில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. நேர்காணல் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை முன்னிலை வகித்தார்.

    மேற்கண்ட பொறுப்புகளுக்கு விருப்ப மனு நேரில் கொடுத்தவர்களும், இணையவழி மூலமாக விண்ணப்பித்தவர்களும் நேர்காணலில் பங்கேற்றார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணியளவில் திருப்பூர் “கலைஞர்அறி வாலயம்”, “தளபதி அரங்கில்” நடைபெறஉள்ளது.
    • விருப்பமனு நேரில் கொடுத்துள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்தவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரு மான இல.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல்தொழில்நுட்ப அணியின் தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில்நிர்வாகப் பணி, சமூக வலைதளப் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகியபொறுப்புகளுக்கான நேர்காணல் நாளை 8-ந்தேதி காலை 10மணியளவில் மாவட்ட கழக அலுவலகமான திருப்பூர் "கலைஞர்அறி வாலயம்", "தளபதி அரங்கில்" எனது (இல.பத்மநாபன்)தலைமையில், தலைமை கழக உடுமலை ப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளருமான அ.தமிழ்மறை முன்னிலை யில் நடைபெறஉள்ளது.

    மேற்கண்ட பொறுப்புக ளுக்கு விருப்ப மனு நேரி ல்கொடுத்து ள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்த வர்களும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ள வேண்டு மாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. தகவல் தொழில் நுட்ப உறுப்பினர்களுக்கு நேர்காணல் நடந்தது.
    • மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கு புதிய நிர்வாகிகளுக்கான நேர்கா ணல் திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் நேர்காணல் நடத்தினார். இதில் திருமங்கலம் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி கட்சியில் முக்கிய அணியாக உள்ளது. இந்த பிரிவு தொடங்கப்பட்டது திருமங்கலத்தில் தான். மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள். ஆனால் நாம் பதிலுக்கு கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.

    இதில் தகவல் தொழில் நுட்ப மாவட்ட அமைப்பா ளர் ஜெயசந்திரன், துணை அமைப்பாளர்கள் பாலகாமு, கார்த்தி, சூரியா, மகளிர் துணை அமைப்பாளர் தவமணி மற்றும் தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, மதன்குமார், ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டி, வழக்கறிஞரணி அமைப் பாளர் தங்கேஸ்வரன், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன்அதியமான், பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கார் பராமரிப்பு நிறுவனத்திற்கான நேர்காணல் நடந்தது.
    • 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையத்தின் சார்பில் கோவை 5கே கார் கேர் நிறுவனத்துடன் இணைந்து நேர்காணல் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கார் பராமரிப்பு நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தினேஷ் தமது நிறுவனத்தில் உள்ள பணி வாய்ப்புகள் மற்றும் பணி வாய்ப்பு பெற்ற நபர்களின் பின்னூட்ட கருத்துக்களை காணொலி காட்சியின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

    இதில் கார் பராமரிப்பு நிறுவனத்தின் முதன்மை மனிதவள மேலாளர் மணிகண்டன், பயிற்றுநர்-மனிதவள மேலாளர் ஜெயவிஜயன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்களிடம் குழு உரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நேர்காணல் நடத்தினர்.

    இதில் கல்லூரியின் பல்வேறு துறை சேர்ந்த மாணவர்கள் 560 பேர் பங்கேற்றனர். 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர். பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் குமாரபாலாஜி நன்றி கூறினார்.

    • எப்படி உடை அணிகிறீர்கள், எப்படி தோற்றம் தருகிறீர்கள் என எல்லாமே நேர்காணலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • நேர்காணலில் நீங்கள் பதில் சொல்வது போலவே, சிகை அலங்காரமும் முக்கியமானது.

    'நம்மை முதலில் பார்க்கும்போது, அடுத்தவர்களுக்குத் தோன்றும் எண்ணம் தான் நிலையானது' என்கின்றனர், உளவியல் நிபுணர்கள். வேலைவாய்ப்பு நேர்காணல்களைப் பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை.

    நீங்கள் எப்படி உடை அணிகிறீர்கள், எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படி தோற்றம் தருகிறீர்கள் என எல்லாமே உங்கள் நேர்காணலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாகப் பெண்களின் கூந்தல் அலங்காரம் எப்படி அமைகிறது என்பது, வேலை வாய்ப்பு அளிக்க உள்ள நிறுவன அதிகாரி மீது மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகிறது.

    நேர்காணலில் நீங்கள் பதில் சொல்வது போலவே, சிகை அலங்காரமும் முக்கியமானது. எந்த நிறுவனமும், சரியாக பராமரிக்கப்படாத கூந்தலைக் கொண்ட ஊழியர்களை விரும்புவதில்லை என்பதால், உங்கள் கூந்தல் அலங்காரத்தில் கவனம் செலுத்துங்கள்.

    குறைவான, அழகான மேக்கப்புடன், ஆர்ப்பாட்டம் இல்லாத, முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம் நீங்கள் சிறந்த தோற்றம் பெற்று விளங்க மிகவும் முக்கியமானதாகும்.

    நீங்கள் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து கொள்ளக்கூடிய ஆனால், தொழில்முறை தன்மையோடு அழகான தோற்றத்தைப் பெற உதவும் மூன்று எளிய கூந்தல் அலங்காரங்களை உங்களுக்காகத் தேர்வு செய்து வழங்குகிறோம்.

    * கொண்டை ( ஸ்லீக் லோ பன்)

    கொண்டை, அலுவலக நோக்கிலான உடைகளுடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கூந்தல் அலங்காரம். ஏனெனில் இது சிக்கல் இல்லாதது மற்றும் காற்றில் பறக்கும் முடியையும் கட்டுப்படுத்துகிறது. கழுத்து அளவில் தாழ்வாகக் கொண்டை அமைத்துக்கொள்வது, சிக்கென, நவீனத்தன்மையோடு இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை தன்மையையும் கொண்டிருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    நல்ல சீப்பு கொண்டு தலைமுடியை வாரி, தலை முடி அனைத்தையும் ஒன்றாக்கி, உங்கள் கழுத்து அளவில் குதிரை வாலாக அமைத்துக்கொள்ளவும். இந்த குதிரை வால் பின்னலைச் சுருட்டி கொண்டையாக்கி, 'பின்' குத்திக்கொள்ளவும். சிடுக்கு உள்ள முடி எனில், செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி சீராக்கி கொள்ளவும்.

    * குதிரை வால் (போனி டெயில்)

    சரியான முறையில் அமைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு நேர்காணலுக்குக் குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காரத்திற்கு நேர்த்தியான தோற்றம் தேவை. ஆன்டி பிரிஸ் கிரீம் (anti frizz cream) அல்லது ஸ்டலிங் பொருள் மூலம் இதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை நேராக்கி, தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும். தலைமுடியை மொத்தமாக இறுகப்பற்றி குதிரை வாலாக்கி, உங்களுக்கு விருப்பமான உயரத்தில் அதை சுற்றி இறுக்கமாக்கிக் கொள்ளவும். உங்கள் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கொஞ்சம் முடி எடுத்து, அதை கூந்தல் அலங்காரத்தைச் சுற்றி அமைத்து நேர்த்தியான தோற்றத்தை உண்டாக்கிக் கொள்ளவும்.

    * முன்பக்க தலைமுடி (டிவிஸ்டட்)

    இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் நேர்த்தியாகத் தோன்றக்கூடியது, உடனடியாக தொழில்முறை தோற்றம் தரக்கூடியது. இந்த எளிதான கூந்தல் அலங்காரத்துடன், கண் அலங்காரம் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டால் இன்னும் அசத்தலாக இருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை டிரையர் கொண்டு நன்றாகக் காய வைத்து, கீழ்ப்பகுதியில் சுருள் முடியை உருவாக்கிக் கொள்ளவும். சீப்பு கொண்டு முன்பக்க முடியை அமைத்து, அதைப் பின்பக்கமாக இழுத்து, 'பின்' குத்திக்கொள்ளவும். செட்டிங் ஸ்பிரே மூலம் 'பினிஷ்' செய்யவும்.

    • துணை அமைப்பாளர்கள் பதிவகளுக்கான நேர்காணல் நடந்தது.
    • நேர்காணல் கிழக்கு மாவட்டசெயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், நடந்தது.

    கிருஷ்ணகிரி,-

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதிவகளுக்கான நேர்காணல் நடந்தது.

    கிருஷ்ணகிரி தேவராஜ் மாங்கூழ் தொழிற்சாலை வளாகத்தில், தி.மு.கவில் உள்ள 23 அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.

    இந்த நேர்காணல் கிழக்கு மாவட்டசெயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், மாநில விவசாய அணி துணை செயலாளர்கள்டேம்.வெங்கடேசன், அரியப்பன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணைசெயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர்கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பரிதாநவாப்,பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராசன், சித்ராசந்திரசேகர், அஸ்லாம், கோதண்டன்ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    இதில், வழக்கறிஞர் அணி, வர்த்தகர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, கலை இலக்கியபகுத்தறிவு பேரவை, ஆத்திராவிடர் நலக்குழு, பொறியாளர் அணி, நெசவாளர் அணி,சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, மருத்துவர் அணி, மீனவர் அணி, விவசாய தொழிலாளர்அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, தொழிலாளர் அணி, அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி,விளையாட்டு மேம்பாட்டு அணி, தொண்டரணி பதவிக்கு விண்ணப்பித்திருந்த 250 -க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர்.

    வருகிற 26ம் தேதி மதியம் 2 மணிக்கு மகளிரணி, 2.30 மணிக்கு மகளிர் தொண்டரணி, 3 மணிக்கு இளைஞரணி, 3.30 மணிக்கு மாணவரணி, 4 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணிக்கான நேர்காணல ்நடைபெறுகிறது.

    • ஒரு ரெஸ்யூம் அதிகபட்சமாக இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும்.
    • நம் ரெஸ்யூமை படிப்பவர் அதற்கு 20 முதல் 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார்.

    வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, 'ரெஸ்யூம்' அடிப்படையில்தான் உயரதிகாரிகள் உங்களை மதிப்பீடு செய்வார்கள். அப்படிப்பட்ட ரெஸ்யூமை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நட்பு வட்டத்தில் கிடைக்கும் ரெஸ்யூம் மாடல்களை கொண்டு, விண்ணப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நல்ல வேலையை வாங்கி தர இருக்கும் ரெஸ்யூம்களை பற்றி தெரிந்து கொள்வோமா...! குறிப்பாக, ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?, அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?, எப்படி தயாரிக்க வேண்டும்?, எத்தனை பக்கம் இருக்க வேண்டும்.... போன்ற தகவல்களை எல்லாம் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    * என்னென்ன வகையான ரெஸ்யூம்கள் இருக்கின்றன?

    ரெஸ்யூம்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை...

    1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூம்

    வேலைகளில் முன் அனுபவமுள்ளவர்கள் இது மாதிரியான ரெஸ்யூம்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமில் தற்போது செய்யும் வேலை விவரங்களுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.

    2. பங்ஷனல் ரெஸ்யூம்

    முதலில் கல்வி விவரம், கூடுதல் திறன், பணி அனுபவங்களை குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.

    3. ஹைபிரிட் ரெஸ்யூம்

    மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூம்களின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூம். இதன் முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாக செய்துவிடும்.

    * எத்தனை பக்கம் இருக்க வேண்டும்..?

    ஒரு ரெஸ்யூம் அதிகபட்சமாக இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அடக்கி விடுவது நல்லது. நம் ரெஸ்யூமை படிப்பவர் அதற்கு 20 முதல் 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.

    * எப்படி தயாரிப்பது..?

    ரெஸ்யூமின் முதல் பக்கத்தில் உங்களுடைய பெயர், இ-மெயில் ஐ.டி., செல்போன் நம்பர் ஆகியவை இருந்தால் போதுமானது. இதன் மூலம் நிர்வாகம் உங்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அதே சமயம், உங்களது இ-மெயில் முகவரி பேன்ஸியாக இருக்கக்கூடாது. உங்கள் பெயரை மட்டும் முன்னிறுத்தும் வகையில் இ-மெயில் ஐ.டி.யை தயார் செய்து கொள்ள வேண்டும். இதே போல், உங்களது மார்பளவு புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து அதனை, ரெஸ்யூமின் வலது அல்லது இடது ஓரத்தில் வைக்க வேண்டும்.

    இ-மெயிலுக்கு குறிப்பிட்டது போலவே, உங்களது புகைப்படமும் உங்களது தரத்தை எடுத்துரைக்க வேண்டும். போட்டோவை பார்க்கும் போதே அதில் ஒரு உத்வேகம் தென்பட வேண்டும். செல்பிக்கு போஸ் கொடுப்பது போல் இருக்கக்கூடாது. ஒரு நிர்வாகத்தில் எந்த துறைக்கு விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பதை மிகச்சுருக்கமாக இரண்டே வரியில் எழுத வேண்டும்.

    ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவர எந்த பொய்யும் சொல்லக்கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலாம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold) எழுத்துகளில் எழுதலாம்.

    முதல்முறை வேலைக்கு விண்ணப்பிப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கனவே பார்த்த வேலை விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டியது அவசியம். நாம் குறிப்பிடாவிட்டால் மனிதவள அதிகாரி அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கனவே வேலை செய்த அலுவலகங்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றன.

    ஒரு நிறுவனம் ரெஸ்யூமை எந்த பார்மெட் வழியாக (இ-மெயில், பேக்ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்ப வேண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவதே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூம் நிறுவனத்தின் பார்வைக்கு செல்ல தாமதமாகலாம்.

    * வேலைக்கு ஏற்ற மாதிரி..!

    நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்றமாதிரி நம் ரெஸ்யூம் இருப்பது அவசியம். ஒரே மாதிரியான ரெஸ்யூமை அனைத்து வேலைக்கும் பயன்படுத்துவது நல்லதல்ல. உதாரணத்திற்கு, ஏற்கனவே ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்காக தன் ரெஸ்யூமை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கனவே வேலை செய்த விவரங்களை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாப விவரங்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். அப்படி குறிப்பிடும்போது செய்வினை (Active) சொற்களை பயன்படுத்துவது நல்லது.

    * இணையதளங்கள்

    முன்பெல்லாம், ரெஸ்யூம் தயாரிப்பது, மிகவும் சவாலான வேலை. நண்பர்கள், உறவினர்கள் தயாரித்து வைத்த ரெஸ்யூம்களை வாங்கி, அதில் நம்முடைய விவரங்களை நிரப்பி, தயாரிப்போம். ஆனால் அந்த நிலைமை இன்றில்லை. கூகுளில் ரெஸ்யூம் என்று தட்டினால், பல நூறு இணையதளங்கள் வந்து நிற்கின்றன. அதில் ஏற்கனவே தயாரித்த ரெஸ்யூம் மாடல்களில் தொடங்கி, உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப தயாரித்து கொடுக்க காத்திருக்கும் இணையதளங்கள் வரை எல்லாவற்றையும் இலவசமாகவே பயன்படுத்த முடியும். இயல்பான ரெஸ்யூம்கள் இலவசமாகவும், ஒருசில ரெஸ்யூம்கள் சில நூறு ரூபாய்களிலும் கிடைக்கின்றன. இதன் மூலம், யாரும் தயாரிக்காத புதுமையான மற்றும் கற்பனை திறன் நிரம்பப்பெற்ற ரெஸ்யூம்களை, உங்களால் உருவாக்க முடியும். வேலை தேடிச் செல்லும் நிறுவன அதிகாரிகளை 'இம்பிரஸ்' செய்ய முடியும்.

    * ரெஸ்யூமே...!

    'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்றும், 'ரெஸ்யூமே' என்று உச்சரிக்கிறோம். பயோடேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூம்ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர். பயோடேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவலர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தலாம். 'கரிகுலம் விட்டே' என்பது உயர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூம் என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.

    • மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.
    • மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.

    மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் முன்னிலையில், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள்.

    நேர்காணலை தொடர்ந்து புதிய மகளிரணி நிர்வாகிகள் கட்சி தலைமை அறிவிக்க உள்ளது. மதியழகன் எம்.எல்.ஏ. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதால் கலந்து கொள்ளவில்லை.

    • மண்டல பொறுப்பாளருமான ரேகா பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.
    • கழகத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் மகளிர் தொண்டரணி பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த நேர்காணலை மாநில மகளிரணி செயலாளர்கள் ஹெலன்டேவிட்ஸன், நாமக்கல் ராணி மற்றும் மண்டல பொறுப்பாளருமான ரேகா பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.

    அப்போது நேர்காணலில் பங்கு பெற்றவர்களிடம் அவர்களது வயது, எத்தனை ஆண்டுகளாக கழகத்தில் உறுப்பினராக உள்ளீர்கள், கழகத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    இந்த நேர்காணலின் போது மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி. மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், மல்லமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • முன்னதாக விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் நேர்காணல் இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. விவசாய அணி அமைப்பாளரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான விஜயன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னதாக நடந்த விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணைச் செயலா ளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், பிராங்க்ளின், மதியழ கன், லிவிங்ஸ்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ. என். சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 75 பேர் கலந்து கொண்டனர்
    • 10-ந் தேதி வரை நடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜா, ஆற் காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, கலவை ஆகிய வருவாய் வட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் விவரம் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும்பட்டியல் மற்றும் நேரிடையாக அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தகுதியான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரப்பெற்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து இவர்களுக்கான நேர்காணல் அந் தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நேற்று நேர் காணல் தாசில்தார் நடராஜன் தலைமையில் நடந்தது. சுமார் 75 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    இந்த நேர்காணல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தாசில்தார் ரேவதி, மண்டல துணை தாசில்தார் விஜயசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×