search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Interview"

    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
    • நாளை நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க.வின் ஒன்றிய,நகர,பேரூர் இளைஞரணி அமைப்பிற்கு விண்ணபித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுவது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்ச ருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நாளை காலை 8 மணிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில்நேர்காணல் நடைபெற உள்ளது.

    எனவே ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ண ப்பித்த அனைவரும் தங்களது ஆதார் கார்டு, வயது சான்றிதழ்,கட்சி இளைஞர் அணி உறுப்பினர் கார்டு, தாங்கள் இதுவரை இளைஞர் அணியில் செயலாற்றிய தகவல்க ளுடன் நேர்காணலில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை 10 மணியளவில் திருப்பூர் “கலைஞர்அறி வாலயம்”, “தளபதி அரங்கில்” நடைபெறஉள்ளது.
    • விருப்பமனு நேரில் கொடுத்துள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்தவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரு மான இல.பத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல்தொழில்நுட்ப அணியின் தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில்நிர்வாகப் பணி, சமூக வலைதளப் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகியபொறுப்புகளுக்கான நேர்காணல் நாளை 8-ந்தேதி காலை 10மணியளவில் மாவட்ட கழக அலுவலகமான திருப்பூர் "கலைஞர்அறி வாலயம்", "தளபதி அரங்கில்" எனது (இல.பத்மநாபன்)தலைமையில், தலைமை கழக உடுமலை ப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளருமான அ.தமிழ்மறை முன்னிலை யில் நடைபெறஉள்ளது.

    மேற்கண்ட பொறுப்புக ளுக்கு விருப்ப மனு நேரி ல்கொடுத்து ள்ளவர்களும், இணையவழி மூலம் விண்ணப்பித்த வர்களும் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ள வேண்டு மாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×