search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளீஸ்வரி கல்லூரி"

    • காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய் திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி துணை முதல்வரும், கணினி பயன்பாட்டியல் துறை தலைவருமான முத்துலட்சுமி கலந்து கொண்டு இந்தியாவில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் 2-ம் ஆண்டு மாணவர் ராம்குமார் வரவேற்றார்.

    முடிவில் சிவசுப்பிர மணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் தலைமை தாங்கினார். ம முன்னாள் மாணவரும், பேராசிரியருமான கவிதா வரவேற்றார்.முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, முன்னாள் முதல்வர்கள் கண்மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், பேராசிரியருமான முத்துகுமார் அறிக்கை வாசித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. முடிவில் குலோத்துங்கப் பாண்டியன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. உதவி பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் பெமினா தலைமை தாங்கி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி ஆங்கிலத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது மகன், மகளின் படிப்பு குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது.
    • முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் வைரம் பட்டை தீட்டப்பட்டு ஜொலிப்பதை போல, ஒருவர் தன்னைத்தானே அறிந்துகொள்ளவும், மற்றவர்களை மிஞ்சி வெற்றிபெறவும் தனித்துவமாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பைப் பெறுவதை விட வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாணவி ஆகாஷ் செல்வி விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.மாணவர் பாலசங்கர் வரவேற்றார். மாணவி ஆகாஷ் செல்வி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் கணினி மென்பொருள் பயிற்சி பயிலரங்கு நடந்தது.
    • ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின், இளங்கலை வணிகவியல் துறை சார்பில் மைக்ரோசாப்ட் எக்செல் பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    துறைத் தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை வணிகவியல் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் யோகேஷ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு எக்செல் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.

    2-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். மாணவி ஐஸ்வர்ய லட்சுமி அறிமுகப்படுத்தி பேசினார். முடிவில் மாணவன் ஜெய் பிரகாஷ் குமார் நன்றி கூறினார். மாணவிகள் மு.ஜெயராசாத்தி மற்றும் வை.ஜமுனாதேவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் மேலாண்மை சொற்பொழிவு நடந்தது.
    • முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

    சிவகாசி

    காளீஸ்வரி கல்லூரியின் தமிழ் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் சார்பில் மேலாண்மை என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. துணை முதல்வர் முத்துலட்சுமி தலைைம வகித்தார்.

    முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் துறை தலைவர் அமுதா அறிமுகப்படுத்தி பேசினார். முதுகலை மாணவி சினேகா வரவேற்றார்.

    முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார். பேராசிரியை மரியசெல்வி நிகழ்ச்சிைய ஒருங்கிணைத்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பாக குழந்தை திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 2-ம் ஆண்டு மாணவர் ராகவன் வரவேற்றார். இதில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்த விளக்கமும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் 2ம் ஆண்டு மாணவர் சிவசுப்பரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார். 

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
    • இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைகள் இணைந்து ஸ்ரீவில் லிபுத்தூர் வள்ளலார் இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக் கான நிகழ்ச்சிகளை நடத்தி–யது. இதில் குழந்தைகளுக்கு யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக் கப்பட்டன.

    மேலும் சதுரங்க போட்டி, இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதையடுத்து துறையின் விரிவாக்க பணி சார்பில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகர–ணங்களான பேனா, பென் சில் மற்றும் சமைய–லுக்கு தேவையான பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மின் விசிறி, மின் விளக்கு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை கணினி பயன்பாட்டி–யல் துறை உதவி பேராசி–ரியை குருமகேஸ்வரி, சுற் றுலா மற்றும் உணவக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியை அபிநயா ஆகி–யோர் செய்திருந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் பணி வாய்ப்பு மையம் சார்பில் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் ஸ்டெனோகிராபி திறன் கொண்டவர்களுக்கு "வேலைவாய்ப்பு" எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரேசன் பேசுகையில், அரசு பள்ளிக்கு செல்வதற்குரிய தகுதிகள் தமிழகம் மற்றும் மத்திய தேர்வாணையங்களில் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். முடிவியல் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    • சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது.
    • ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது. விவாதங்கள், விளக்க காட்சி, வினாடி-வினா, இணைப்பு விளையாட்டுகள், மைம் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஸ்டார்ட் அப் திட்டமிடல் என்ற பெயரில் கருத்தரங்கு நடந்தது. ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது வெற்றிக் கதையை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி நடந்தது.
    • இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கல்வி வட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் அனுபாலா வரவேற்றார். இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், இந்தியா வளர்ந்த நாடாக மாற எதிர்கொள்ளும் சவால்கள் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 33 பள்ளிகளில் இருந்து மொத்தம் 408 மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி மாணவர்களுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். முடிவில் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ஜமுனாராணி நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை பயிலரங்கு நடந்தது.
    • அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஐபி மேலாண்மை' குறித்த பயிலரங்கு நடந்தது. ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுசார் சொத்து பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினார். காப்புரிமை, நகல் உரிமை, வர்த்தக முத்திரை, தொழில் துறை வடிவமைப்புகள், புவியியல் குறியீடுகள் போன்ற பல்வேறு வகையான அறிவுசார் சொத்துக்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

    உலகளாவிய கண்டு பிடிப்பு குறியீடு 2022-ல், அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளில் இருந்து மூன்றில் ஒரு காப்புரிமை விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்றும் இருப் பினும் இந்தியாவை காட்டிலும் சீனா 25- 30 மடங்கு அதிக காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது என்றும் தெரிவித்தார்.கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பாதுகாக்க அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வுடன் மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ×