search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல்
    X

    கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல்

    • 75 பேர் கலந்து கொண்டனர்
    • 10-ந் தேதி வரை நடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜா, ஆற் காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, கலவை ஆகிய வருவாய் வட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் விவரம் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும்பட்டியல் மற்றும் நேரிடையாக அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தகுதியான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரப்பெற்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து இவர்களுக்கான நேர்காணல் அந் தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நேற்று நேர் காணல் தாசில்தார் நடராஜன் தலைமையில் நடந்தது. சுமார் 75 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    இந்த நேர்காணல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தாசில்தார் ரேவதி, மண்டல துணை தாசில்தார் விஜயசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×