search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"

    • கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர்அம்மாபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தமி ழரசி என்கிற தமிழ்ச்செல்வி என்ப வர், கடனுக்கு அரிசி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரி யில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ண னிடம் கேட்டுக் கொண்டார்.

    அதைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஜெபம் செய்து முடித்த பின், அந்த நபரை, அவரது வீட்டில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

    கிருஷ்ணன் வீட்டை விட்டு சென்றதும், அவரது வீட்டு பீரோவில் இருந்த செயின், வளையல், மோதிரங்கள் உட்பட 13 3/4 பவுன் தங்க நகைகளை தமிழரசி திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணனின் மனைவி மலர்விழி, கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குளிர்பானம் கொண்டு வந்து லட்சுமம்மாவுக்கு கொடுத்து அந்த குளிர்பானத்தை குடிக்குமாறு பலமுறை வற்புறுத்தியதாக தெரிகிறது.
    • அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது கணவர் நஞ்சுண்ட ரெட்டி. ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சுண்ட ரெட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் லட்சுமம்மா தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர் தனியாக வசிக்கும் லட்சுமம்மா வீட்டுக்கு சென்று தான் அக்கொண்டபள்ளி பகுதியில் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதாகவும் நிலம் பத்திரத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து தனக்கு கொடுக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

    மர்ம நபர் பேச்சை நம்பிய மூதாட்டி லட்சுமம்மா மர்மநபர் கொடுத்த பத்திரத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து அந்த பத்திரத்தை மீண்டும் அந்த மர்ம நபரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மர்ம நபர் குளிர்பானம் கொண்டு வந்து லட்சுமம்மாவுக்கு கொடுத்து அந்த குளிர்பானத்தை குடிக்குமாறு பலமுறை வற்புறுத்தியதாக தெரிகிறது.

    குளிர்பானத்தை சாப்பிட்ட லட்சுமம்மாவுக்கு மயக்கம் அடைந்த நிலையில் லட்சுமம்மா கையில் இருந்த 4 தங்க வளையல் மற்றும் 4 சவரன் தங்க சங்கிலி ஆகியவற்றை இந்த மர்ம நபர் கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து சுய நினைவிற்கு வந்த லட்சுமம்மா கழுத்தில் தங்க சங்கிலி, கையில் தங்க வளையல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து லட்சுமம்மா கெலமங்கலம் போலீசாருக்கு புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    அக்கொண்டபள்ளி கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறு வதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை விஷ்வேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் கிருஷ்ணன். ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பெற்றோரை பார்ப்பதற்காக செங்கல்பட்டுக்கு சென்றார்.

    அப்போது அரவிந்த் கிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வைர டாலர், மோதிரம், கம்மல் உள்பட 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பி அரவிந்த் கிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி. ஊழியர் வீட்டில் 13½ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். 

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி திருடு போனது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது57), இவர் துணி வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 2-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, வெள்ளி மற்றும் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாக்கியலட்சுமி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டபாளையம் ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் அன்பு சிவா. பேராசிரியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 42). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து கம்மல், செயின், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாக்கியலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • சீனிவாசன் கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார்.
    • 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). ரியஸ் எஸ்டேட் புரோக்கர்.

    கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அப்போது சீனிவாசன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    வீட்டிற்கு திரும்பிய சீனிவாசன் கதவு உடைக்க ப்பட்ட திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பட்டணம் சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). வேன் டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் அவர் தனது மகள் அணிந்து செயின் மோதிரம் உள்ள 5 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். சம்பவத்தன்று அனைவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை துணி துவைக்கும் எந்திரத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றனர்.

    இதனை நோட்ட மிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீட்டிற்கு திரும்பிய சக்திவேல் பீேராவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார்.
    • போலீசார் சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, கோடம்பாக்கம் அசோகா அவின்யூ பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் பாபு. தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவரது மனைவி எலிசபெத். இவர் சென்னை மாநகராட்சியின் 112-வது வார்டு கவுன்சிலர் ஆவார். அகஸ்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகளை சரி பார்த்தார். அப்போது ரூ.6 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் வைர நகை திடீரென மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அகஸ்டின் பாபு வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார்.
    • பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலச்சந்திரன் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இவரது மகன் முகுந்த் சந்திரா (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டை பூட்டி விட்டு தந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின் , கைசெயின் தங்க மணி உள்பட 26½ பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்க பணம், 2 போட்டோ காமராக்கள், கார் சாவி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு திரும்பிய முகுந்த் சந்திரா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    பீளமேடு அருகே உள்ள பாரதி காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 50). இவர் கத்தார் நாட்டில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடத்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவைக்கு வந்தார். அப்போது லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    • கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
    • நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி இரவு 7 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வரும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறக்க வந்தனர்.

    அப்போது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம நபர்கள் துளையிட்டு லாக்கரில் வைத்திருந்த 209 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • தனியார் நிறுவன ஊழியர்.
    • மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 9-ந் தேதி இவர் தேனியில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். அப்போது ரமேஷ் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், வைர கம்மல், தங்க நாணயம் உள்பட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்க வைர நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். நள்ளிரவு வீட்டிற்கு திரும்பிய ரமேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • திருச்சி தனியார் பஸ் நிறுவன மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
    • அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள நவல்பட்டு அய்யன் புதூர் கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 47). இவர் திருச்சியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். பிற்பகல் 3 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக தனபால் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் வைத்திருந்த 13 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு, 2 வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் என மதிப்பிட ப்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் இரும்பு ராடால் கதவை உடைத்து திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பீரோக்களை திறந்து பார்த்தனர். அந்த பீரோக்களின் சாவி அதன் அருகாமையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

    அதில் துணிமணிகளை தவிர நகை பணம் எதுவும் வைக்கவில்லை. ஆனால் சல்லடை போட்டு தேடி பூஜை அறையில் சாமி படங்களுக்கு பின்னால் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனபால் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார் தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்துள்ளார்.

    குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×