search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் அரிசி வியாபாரி வீட்டில்  13 ¾ பவுன் நகைகள் கொள்ளை
    X

    சேலத்தில் அரிசி வியாபாரி வீட்டில் 13 ¾ பவுன் நகைகள் கொள்ளை

    • கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர்அம்மாபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தமி ழரசி என்கிற தமிழ்ச்செல்வி என்ப வர், கடனுக்கு அரிசி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசியின் உறவினர் ஒரு வருக்கு உடல்நிலை சரி யில்லை என்றும், அவருக்கு ஜெபம் செய்யும் படி கிருஷ்ண னிடம் கேட்டுக் கொண்டார்.

    அதைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஜெபம் செய்து முடித்த பின், அந்த நபரை, அவரது வீட்டில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

    கிருஷ்ணன் வீட்டை விட்டு சென்றதும், அவரது வீட்டு பீரோவில் இருந்த செயின், வளையல், மோதிரங்கள் உட்பட 13 3/4 பவுன் தங்க நகைகளை தமிழரசி திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணனின் மனைவி மலர்விழி, கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×