search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery of jewellery"

    • தனியார் நிறுவன ஊழியர்.
    • மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 9-ந் தேதி இவர் தேனியில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். அப்போது ரமேஷ் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், வைர கம்மல், தங்க நாணயம் உள்பட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்க வைர நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். நள்ளிரவு வீட்டிற்கு திரும்பிய ரமேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    ×