search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோனி"

    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்?, சமீபத்திய டெஸ்ட் தோல்வி ஆகியவை குறித்து எம்.எஸ் தோனி பேசியுள்ளார். #MSDhoni #TeamIndia
    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டனாக தோனி இருந்த கால கட்டத்தில் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றை இந்திய அணி வென்றது. 2017-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

    மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு அணியின் முன்னேற்றத்துக்கு அவர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.

    இந்நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் பேசிய போது இதைப் பற்றி கூறியுள்ளார். "எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் விலகினேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

    “புதிய கேப்டன் சரியான நேரத்தை வழங்காமல் ஒரு வலுவான அணியை தேர்வு செய்வது சாத்தியமில்லை. நான் சரியான நேரத்தில் கேப்டனியை விட்டுவிட்டேன் என்று நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் 4-1 தோல்வி குறித்து பேசிய அவர், “இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டது. அதனால் தான் வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்தியா தற்போது தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது என்று நாம் மறந்துவிடக் கூடாது” என தோனி பேசினார். 
    இந்தியா - இங்கிலாந்து மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்ட நிலையில், கேப்டன் கோலி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். #ENGvIND #MSDhoni #Kohli

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்தார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. 

    கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் சொதப்ப,
    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சுரேஷ் ரெய்னா 45 ரன்களில் அவுட்டாகினார். 

    பெரிதும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 59 பந்துகளுக்கு 37 ரன்னில் வெளியேற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
    அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12-வது வீரர் என்ற தனிப்பட்ட சாதனையை தோனி நேற்று பெற்றிருந்தாலும், அவரது நேற்றைய ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது. இதனால், சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.

    இதற்கிடையே, தோனி மீதான விமர்சனத்துக்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார். “தோனி மீதான விமர்சனம் அணியினரை பாதிக்கவில்லை. அவர் களத்தில் நினைப்பதை செய்து முடிப்பதில் தோல்வி அடைந்தால், மீண்டும் மீண்டும் அவர் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒரு போட்டியை வைத்து ஒருவரின் செயல்திறனை முடிவு செய்வது பலரது மோசமான செயலாக உள்ளது. அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என கோலி தெரிவித்துள்ளார். 
    மகேந்திரசிங் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத், நிலவின் பின்புறத்தில் மாரே மஸ்கோவியென்ஸ் என்று அழைக்கப்படும் பகுதியில் இடம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பெயரும், புகழும் பெற்றார். தற்போது, வின்வெளி சம்பந்தப்பட்ட கதையில் தான் நடித்து வரும் ‘சந்தா மாமா தூர் கே’ என்ற படத்தை பிரபலப்படுத்துவதற்கா அல்லது தனது கனவை நிறைவேற்றுவதற்கா என தெரியவில்லை, நிலவில் அவர் இடம் வாங்கியுள்ளார்.

    பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத நிலவின் பின்பகுதி மாரே மஸ்கோவியென்ஸ் (Mare Muscoviense) என்று அழைக்கப்படும். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மேடே 14 என்ற நவீன தொலைநோக்கியை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

    ‘பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கின்ற வெவ்வேறு வழிகளே கேள்விகளுக்கான பதில்கள் என்று நம்ப விரும்புகிறேன். எனவே நாம் விளக்கங்களை வரிசைப்படுத்துகின்ற விதத்தில் உள்ள மாறுபாடுகள், நுணுக்கம் ஆகியவை எதிர்காலத்தில் வேறுபட்ட பதிப்புகளை உருவாக்கும். நான் இப்போது ஒரு நுணுக்கத்தை நிறுத்துகிறேன் மற்றும் ஏற்கனவே, நான் நிலவையும் தாண்டிவிட்டேன்’ என அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

    சர்வதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து அவர் நிலத்தை பதிவு செய்துள்ள முதல் பாலிவுட் நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். எனினும், அவர் சட்டரீதியாக அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் 2018 சீசனில் ஒவ்வொரு வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை வைத்து மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. #IPL2018

    நடந்து முடிந்த ஐபிஎல் 2018 சீசனில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வீரர்களின் ஏலத்தின் போது வயது அதிகமான வீரர்களை சென்னை எடுக்கும் போது சென்னை சீனியர் கிங்ஸ் என பலரும் கிண்டல் செய்ய, விமர்சனங்களை உடைத்து தோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    குவாலிபயர், பைனல், 2 லீக் போட்டிகள் என 4 போட்டிகளிலும் ஐதராபாத் அணி சென்னையிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிசொதப்பியது, ஆரம்பத்தில் தொடர்ந்து தோற்று பின்னர் அனைவரும் வியக்கும் வண்ணம் சில வெற்றிகளை பெற்று மீண்டும் முக்கியமான போட்டிகளில் தோல்வி என ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ரசிகர்களை ஏமாற்றியது என பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த சீசனில் நடந்தது.

    இளம் வீரர்களின் செயல்பாடும் இந்த சீசனில் சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில், வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு மற்றும் அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகையை கொண்டு மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை ஹன்சா ரிசர்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.



    குறைந்தது 1 போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு வீரர் அடித்த ரன், அரைச்சதம், சதம், விக்கெட், பிடித்த கேட்ச் ஆகியவற்றை கொண்டு அந்த வீரருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்கின் படி நட்சத்திர வீரர்கள் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்கள் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிமாக இருப்பதால் அவர்கள் பட்டியலில் பின் தங்குகின்றனர்.

    ஒரு வீரர் பெறும் ஒரு புள்ளிக்கு அணி எவ்வளவு செலவு செய்கிறது என்பதே இந்த கணக்கீடு. அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக விராட் கோலியை எடுத்துக்கொண்டால் இந்த சீசனில் அவர் நான்கு அரைச்சதங்களுடன் 530 ரன்களை அடித்தார். அவர் பிடித்த கேட்ச் ஆகியவற்றை சேர்த்ததன் மூலம் 2225 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர், நேரடியாக ஏலம் எடுக்கப்படவில்லை என்றாலும் இந்த சீசனில் அவர் ரூ.17 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு 76,404 ரூபாயை அணி செலவளித்துள்ளது.

    இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பெற்ற புள்ளிகள் 2450. அவர் இந்த சீசனில் சம்பளமாக பெற்ற தொகை ரூ.15 கோடி. எனவே, அவரின் ஒரு புள்ளிக்கு ரூ.61,224 ஆயிரம் ரூபாயை அணி அவருக்காக செலவளித்துள்ளது.

    சென்னை அணியின் மற்றொரு வீரர் அம்பாதி ராயுடு 2734 புள்ளிகள் எடுத்துள்ளார். ஆனால், அவர் பெற்ற சம்பளம் ரூ.2.2 கோடி மட்டுமே. இதன் மூலம், அவரின் ஒரு புள்ளிக்கு அணி செலவளித்த தொகை வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதன் காரணமாக தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரராக அறியப்படுகிறார்.



    இறுதிப்போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய அணி வீரர் வாட்சன் 3330 புள்ளிகளை பெற்றுள்ளார். அவர் பெற்ற ஊதியம் 4 கோடி என்பதால், அவரது ஒரு புள்ளிக்கு அணி செலவளித்துள்ள தொகை ரூ.12 ஆயிரம். பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 1706 புள்ளிகளை பெற்றுள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.

    15 கோடி ஊதியம் பெற்ற ரோகித் சர்மா எடுத்துள்ள புள்ளி 1252, அவரின் ஒரு புள்ளிக்கு செலவளிக்கப்பட்ட தொகை 1,19,808 ரூபாய். இதேபோல, பந்துவீச்சாளர்களில் டெல்லி அணியில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹர்சால் படேல் 2 கோடிக்கு எடுக்கப்பட்டு 830 புள்ளிகள் எடுத்துள்ளார். ஒரு புள்ளிக்கு அவருக்கு 860 ரூபாயை அணி செலவளித்துள்ளது. 

    இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய எல்லா வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
    ×