search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டம்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
    • தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகம் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    இடுபொருட்கள் விபரம் தலா ஒரு நபருக்கு 10 வகையான மூலிகைச் செடிகள் ,செடி வளர்ப்பு பைகள்-10,

    தென்னை நார்க்கட்டி-10கிலோ ,மண்புழு உரம் -4 கிலோ வழங்கப்படுகிறது.

    தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தோட்டக்–கலைத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கண்ணனின் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
    • சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த கனகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது அங்கு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த ஆயிரப்பேரியை சேர்ந்த கனகராஜ் (வயது 31) மற்றும் பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்(46) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய தோட்ட உரிமையாளரான கண்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • நாம் தமிழர் தொழிற்சங்கம் கோரிக்கை
    • ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நாம் தமிழர் ஒருங்கிணைந்த தொழிற்சங்க தலைவர் ஆல்பன், குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், நிர்வாகிகள் மரிய ஜேம்ஸ், அனீஸ் ஆகியோர் இன்று நாகர்கோவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் 1,500 நிரந்தர பணியாளர்களும், 900 தற்காலிக பணியாள ர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவர். இந்த தொழிலாளர்கள் ரப்பர் தோட்ட பகுதியில் அரசு அனுமதித்த குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஆனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா மல் உள்ளது. இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனவே தொழிலா ளர்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு ரூ. 40-ஐ உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரப்பர் மரம் வெட்ட கொடுக்கப்பட்ட ஒப்பந்த த்தில் ஊழல் நடந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும்
    • அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    கன்னியாக்உமரி:

    திருவட்டார் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு விவசாய தொழில் செய்து வருகிறார். அருமனை பகுதியில் அன்னாசி பயிர் இடப்பட்டு விவசாயம் செய்துவந்தார்.

    இவரது தோட்டத்தில் 5½ கிலோ எடையில் அன்னாசி காய்த்தது. சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும். இந்த மாதிரி அன்னாசி காய்ப்பது மிக அபூர்வம். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    • நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
    • அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • போலீசார் விசாரணை செய்தனர்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த பிளாங்காலை பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். டெம்போ ஓட்டுநர் இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு சிவலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளார். அனில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

    இதனால் மன வருத்தத்தில் அனில்குமார் இருந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அனில் குமார் வீட்டை விட்டு சென்றுள்ளார் பின்னர் வீடு திரும்பவில்லை தனது கணவர் வேலைக்கு சென்று இருப்பதாக சுனிதா நினைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அழகிய நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. அங்கு சென்று சுனிதா பார்த்தபோது பிணமாக கிடந்தது தனது கணவர் அனில்குமார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனில்குமார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 27). இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமர், பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச் செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது.
    • வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    உடுமலை,

    உடுமலை நகரில் சிலர் தங்களது குடியிருப்பு ஒட்டிய நிலப்பகுதிகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். அங்கு மூலிகைச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், துளசி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்க்கின்றனர்.

    அதேநேரம் இடவசதி இல்லாத சிலர் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வகையில், ஐஸ்வர்யா நகரில் சிலர் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:-

    மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளையும், தோட்டத்தை பராமரிக்கச்செய்வதன் வாயிலாகஅவர்களும் உற்சாகம் அடைகின்றனர். தவிர மருத்துவ குணம் கொண்ட மூலிகைச்செடிகள் வளர்ப்பில் அதன் முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, உரமிடுவது போன்ற பணிகள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி விடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×