search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்"

    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.
    • குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 5.13 1/2 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.

    • சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும்
    • அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    கன்னியாக்உமரி:

    திருவட்டார் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு விவசாய தொழில் செய்து வருகிறார். அருமனை பகுதியில் அன்னாசி பயிர் இடப்பட்டு விவசாயம் செய்துவந்தார்.

    இவரது தோட்டத்தில் 5½ கிலோ எடையில் அன்னாசி காய்த்தது. சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும். இந்த மாதிரி அன்னாசி காய்ப்பது மிக அபூர்வம். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    ×