search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
    X

    தென்காசி அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

    • கண்ணனின் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
    • சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த கனகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது அங்கு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த ஆயிரப்பேரியை சேர்ந்த கனகராஜ் (வயது 31) மற்றும் பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்(46) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய தோட்ட உரிமையாளரான கண்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×