search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் அருகே  தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 55 ஆடுகள் திருட்டு
    X

    திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 55 ஆடுகள் திருட்டு

    • ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 27). இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமர், பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச் செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×