search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் அட்டவணை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.
    • கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், புதிய உத்தரவுகளை வெளியிட, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்துத் துறைகளின் செயலா்களுக்கும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தோ்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். அதிலிருந்து புதிய திட்டங்கள் அல்லது புதிய உத்தரவுகளை வெளியிடக் கூடாது. இந்த விவகாரத்தில் கடந்த காலங்களில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதாவது, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகும், முன்தேதியிட்டு சில உத்தரவுகள் வெளியிடப்பட்டதாக புகாா்கள் எழுந்தன. தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே, இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டது போன்ற தோற்றத்தை அவை வெளிப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

    எனவே, இதுபோன்ற புகாா்கள், குற்றச்சாட்டுகளை தவிா்க்க வேண்டுமென அனைத்து கூடுதல் தலைமைச் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், துறைச் செயலா்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    தோ்தல் தேதி தொடா்பான அறிவிப்பு ஊடகங்களில் வெளியானவுடன், அரசு உத்தரவுகளின் விவரங்களை பதிவிடும் பதிவேட்டில் நீளமாக ஒரு கோடு வரைந்து கொள்ள வேண்டும். அதாவது, கடைசியாக வெளியிடப்பட்ட உத்தரவின் விவரத்தைக் குறிப்பிட்டு அதற்குக் கீழே இந்த கோடு வரைந்திருக்க வேண்டும்.

    இதை நகலெடுத்து இந்தியத் தோ்தல் ஆணையத்தால், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும்.

    மேலும், அந்த நகலை தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பிட வேண்டும். இந்த நடைமுறையால், தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுவதும், மற்றவா்கள் புகாா்கள் கூறுவதும் தவிா்க்கப்படும். தோ்தல் தேதி அறிவிக்கப்படும் தருவாயில், துறைச் செயலா்கள் யாரேனும் தலைமையிடத்தை விட்டு வெளியே சென்றிருந்தால் அவா்கள் தலைமையிடத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவருக்கு இந்தப் பணியைச் செய்திட அதிகாரம் அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.

    • மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
    • மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கு பொதுத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆளும் பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கான பணிகளை ஏற்கனவே அந்த கட்சி பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 450 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளனர். குறிப்பாக மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    140 தொகுதிகள் மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு பலவீனமானதாக கருதப்படுகிறது. அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நாளை முடிந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முதல் முறை இளம் வாக்காளர்களை குறி வைத்து பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. பாரதிய ஜனதாவின் இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதில் எதிர்ககட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்களும் வேட்பாளர்கள் பணிகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் முன்பே பிரசாரத்தை தீவிரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நாடு முழுவதும் 7 லட்சம் கிராமங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். அப்போது பிரத மர் நரேந்திர மோடி தலை மையில் பா.ஜ.க. அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் தொகுதி வாரியாக பிரசாரத்தை முன்னெடுப்பார்கள்.

    8 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த 8 தொகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியின் பொதுதுக் கூட்டம், வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு தேசிய அளவிலான பிரசார பொறுப்பை ஏற்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மூத்த தலைவர் ஒருவர் தேர்தல் பிரசார பொறுப் பாளராக நியமிக்கப்படுவார்.

    உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதர மாநிலங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பெண்கள், இளைய தலைமுறையினரை ஈர்க்க புதிய உத்திகள் வகுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் விரும்பப்படும் பிரபலங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

    விவசாயிகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த கையேடுகள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும். பிரதமர் மோடி நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்வார்.

    இந்த தகவல்கள் டெல்லி பா.ஜ.க. வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளன.

    ×