search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி"

    • எஸ்.எஸ்.எல்.சி. -மதுரை மாவட்டத்தில் 91.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    மதுரை

    மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யில் அவர்கள் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.

    எனவே மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ப தற்காக கூடுதல் நேரம் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற முடிந்த வரை முயற்சி எடுப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவ டைந்து பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது.

    அதனை மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களிலேயே பார்த்து தெரிந்து கொண்ட னர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவி களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் படித்த பள்ளிகளிலும் சக மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி னர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 823 பேர் மாணவி கள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.79 சதவீத தேர்ச்சி யாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    • திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்
    • கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

    திருச்சி,

    2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி துவங்கி 20-ந்தேதி வரை நடைபெற்றது. திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட 3 கல்வி மாவட்டங்களில் 449 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032 மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வினை எழுதினர். இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் 94.28 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 15,325 மாணவர்களும் 16 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 31,838 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.28 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.03 சதவீதம் அதிகமாகும்.இதில் 52 அரசு பள்ளிகள், 8 ஆதிதிராவிட நலப் பள்ளிகள், 3 பழங்குடியினர் நலப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 64 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 144 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தங்களது மொபைல் போன்களில் தங்கள் தேர்ச்சியையும், பெற்ற மதிப்பெண்களையும் பார்த்து உற்சாகமடைந்தனர்.

    • எஸ்.ஆர்.வி.வி. பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
    • 10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் முதலிடத்தை பெற்றார்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானகிரி எஸ்.ஆர்.வி.வி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

    10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் இந்த பள்ளியில் முதலிடத்தை பெற்றார். மாணவர் ஆதிஸ்குமார் 2-ம் இடத்தையும், மாணவி விலாஷினி பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் வென்றனர்.

    சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் அய்யப்பன் பாராட்டி பேசுகையில், பள்ளி ெதாடங்கிய காலம் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறோம். எஸ்.ஆர்.வி.வி.சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வியுடன் விளையாட்டு மற்றும் பிற கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

    மேலும் அவர் சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ஐஸ்வர்யா, நிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்களும் பாராட்டினர்.

    • ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 754 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 748 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளைபாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 754 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 748 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி 99.02 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் மாணவி அபிராமி 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்களும், மாணவர் புகழ்வர்மன் 589 மதிப்பெண்களும், மாணவர் அமீன் 587 மதிப்பெண்களும், மாணவி ஷெரின் 587 மதிப்பெண்களும், மாணவர் புவனேஸ்வர்குமார் 587 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும்கணித பாடத்தில் 9 பேரும், இயற்பியல் பாடத்தில் 6 பேரும், வேதியியல் பாடத்தில் 30 பேரும், உயிரியல் பாடத்தில் 5 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 5பேரும், வணிகவியல் பாடத்தில் ஒரு வரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 3 பேர் எனமொத்தம் 59 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது தவிர 590 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும்,580-589 மதிப்பெண்கள் வரை 21 பேர், 570-579 மதிப்பெண் வரை 39 பேர், 550-569 மதிப்பெண்கள் வரை 78 பேர், 500 முதல் 549 மதிப்பெண்கள் வரை 216 பேர், 450 முதல்        மதிப்பெண்கள் வரை 412 பேர், 400 முதல் 449 மதிப் பெண்கள் வரை 568 பேர் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜே ந்திரன், பள்ளிமுதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

    • சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596 மதிப்பெண் பெற்றார்.
    • அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன். விவசாயி.இவரது மனைவி தங்கம். இவர்களின் மகள் சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596மதிப்பெண் பெற்று மாநில அளவில்3-ம் இடமும், கடலூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்றுள்ளார். அவரை பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்து பாராட்டினார். அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    பின்னர்டாக்டர் ராம தாஸ் வழிகாட்டுதலின்படி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தலின் படி, மே 31-ந் தேதிக்குள் வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டி னை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர், தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட் டோர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கான படி வத்தை வழங்கி, வன்னியர் களுக்கான உள்ஒதுக்கீடு பயன் குறித்தும் எடுத்துக் கூறினார். இதில் பா.ம.க. மாவட்ட அமைப்பு துணை தலைவர் ஜெயக்குமார், என்.எல்.சி. ஊழியர் உக்கரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.
    • மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும் என சுவாதி கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டிஒன்றியம் கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில்முதலிடமும் பெற்றுள்ளார். மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும். படிப்பதை எழுதி பார்த்தால் மனதில் நன்கு பதியும். நாம் படிப்பதை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். தேர்வை நல்ல முறையில் எழுத வேண்டும். பாடத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் அதனை ஆசிரியர்களிடம் உடனே தீர்த்து கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனக்கு நன்கு ஊக்கம் அளித்தனர்.நீட் தேர்வு எழுதி உள்ளேன். அதன் பிறகு டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    • போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 584 மதிப்பெண் பெற்று திருவெண்ணெ நல்லூர் வட்டார அளவில் சாதனை படைத்துள்ளது,
    • இப்பள்ளியில் பிளஸ்-2 மேனகா என்ற மாணவி 584 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 584 மதிப்பெண் பெற்று திருவெண்ணெ நல்லூர் வட்டார அளவில் சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் பிளஸ்-2 மேனகா என்ற மாணவி 584 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார்.கமலீஸ்வரி என்ற மாணவி 563 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், ரேவதி என்ற மாணவி 557 மதிப்பெண்களை பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.பள்ளியில் பிளஸ்-2 தேர்வெழுதிய 44 பேரில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதமாகும். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் வாசுதேவன், மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • மாநில அளவில் கோவை 4-ம் ரேங்க் பட்டியலில் உள்ளது.
    • 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை ெவறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதியதில், 339 பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்கு பின் முழுமையாக பள்ளிகளை இயக்கி நடத்தப்பட்ட முதல் தேர்வு என்பதால் பிளஸ்-2 தேர்வு முடிவில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதில், ஆப்சென்ட் பட்டியல் நீண்டதோடு முக்கிய பாடங்களில், கடின வகை கேள்விகளே அதிகம் இடம்பெற்றிருந்தது.

    அரசுப்பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவும் குறைந்ததால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுமோ என்ற கருத்து எழுந்தது. ஆனால் தேர்வு முடிவு மாணவர்களுக்கு சாதகமாகவே இருந்ததோடு, தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது. கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியதில் 97.57 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றது.

    மாநில அளவில் 4-ம் ரேங்க் பட்டியலில் இருந்தாலும், 0.28 சதவீதத்தில் தான், முதலிடத்தை தவற விட்டது. ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் இப்படியிருக்க, 90 சதவீதத்திற்கும் மேல், தேர்ச்சி அடைந்த பள்ளிகள் மட்டுமே 339 என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை ெவறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

    இதன்மூலம், மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்ததற்கு, கை மேல் பலன் கிடைத்ததாக, ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கும் இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பி நடத்தப்பட்டது. இதில் கேள்விகள் சிந்தித்து எழுதும் படியாக இருந்தது.

    பொது வினாத்தாள் முறையில் பதிலளிக்க, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது பொதுத் தேர்வு முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் வினாத்தாளை பிரிண்ட் அவுட் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்தால் இத்திட்டம் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் என்றனர்.

    • பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • பள்ளியில் படித்த சென்னகேசவன் என்ற மாணவர் 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை.

    மத்தூர்,

    தருமபுரி மாவட்டம், இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2022-2023-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இந்த பள்ளியில் படித்த சென்னகேசவன் என்ற மாணவர் 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், அறிவுக்கரசி என்ற மாணவி 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடமும், மாணவர் பிரத்திஷ் 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

    மேலும் பள்ளியில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்களும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 47 மாணவர்களும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 55 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவரும், தாளாளருமான கோவிந்தராஜ், பொருளாளர் விஜயலட்சுமி கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்தி வெங்கடேசன், முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் அசோக் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

    • பிளஸ்-2 தேர்வில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
    • செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் கிளப் மூலமாக 1979-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டு +2 தேர்வில் தேர்வு எழுதிய 201 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பொன் அஜித் குமார் 593 மதிப்பெண்களும், மாணவிகள் பூஜாஸ்ரீ 587 மதிப்பெண்களும், விஜயமதி 585 மதிப்பெண்களும், யுவஸ்ரீ 585 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்றனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    பல்வேறு பாடங்களில் மொத்தம் 53 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 3 இடங்கள் பெற்றவர்களை பாராட்டும் வகையில் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதில் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அரிமா உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பிரி கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் வகையில் மாறுபட்ட நடைமுறைகளில் செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    • மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஊட்டி,

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.31 சதவீதம் அதிகம்.

    தமிழகம் முழுவதும் பிளஸ் -2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்ச்சி விகிதத்தில் நீலகிரி மாவட்டம் 93.85 சதவீதம் பெற்று, மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 3246 மாணவர்கள், 3743 மாணவியர்கள் என மொத்தம் 6989 பேர் எழுதினர்.

    இதில், 2945 மாணவர்கள், 3614 மாணவிகள் என மொத்தம் 6559 பேர் தேர்ச்சிடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.85 சதவீதம் ஆகும். மாணவர்கள் 90.73 சதவீதமும், மாணவிகள் 96.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட 1.31 சதவீத தேர்ச்சி அதிகம்.

    மாவட்டத்திலுள்ள 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசு மாதிரி பள்ளி, கக்குச்சி, மேலூர் ஒசஹட்டி, சோலூர், தாவணி, எமரால்டு ஆகிய 6 அரசு பள்ளிகள், குஞ்சப்பணை பழங்குடியின நலப்பள்ளியும் அடங்கும். குஞ்சப்பணை பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளியில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள், 19 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் பலர் தங்களின் பள்ளிகளுக்கு சென்று மதிப்பெண்களை பார்த்து, ஆசிரியர்களிடம் ஆசி வாங்கி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    • செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர். நெகனூர் அரசு பள்ளியில் 42 மாணவர்கள் 51 மாணவிகள் என 93 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 41 மாணவர்கள் 34 மாணவிகள் என 75 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தனர். அரசு பள்ளியில் பயின்று நூறு சதவீதம் சாதனை பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    மேலும் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செஞ்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் செந்தமிழ், ஜெயாஷாலினி, கோபிகிருஷ்ணன், குருநாத், உள்ளிட்டவர்களை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ×