என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவி சுவாதி.
மாநில அளவில் தேர்ச்சி பெற்ற பண்ருட்டி மாணவி சுவாதி பேட்டி
- மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.
- மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும் என சுவாதி கூறினார்.
கடலூர்:
பண்ருட்டிஒன்றியம் கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில்முதலிடமும் பெற்றுள்ளார். மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும். படிப்பதை எழுதி பார்த்தால் மனதில் நன்கு பதியும். நாம் படிப்பதை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். தேர்வை நல்ல முறையில் எழுத வேண்டும். பாடத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் அதனை ஆசிரியர்களிடம் உடனே தீர்த்து கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனக்கு நன்கு ஊக்கம் அளித்தனர்.நீட் தேர்வு எழுதி உள்ளேன். அதன் பிறகு டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






