search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் திருவிழா"

    • ஊர்வலமாக சென்று பக்தி பரவசத்துடன் ஸ்ரீ கங்கை குமரன் முருகபெருமானுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிப்பட்டனர்.
    • விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேத்தோட்டம் ஊராட்சி, போக்கம்பட்டி ஸ்ரீகங்கைகுமரன் கோவில் 42-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை தேர் திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் ஸ்ரீகங்கை குமரன் முருகபெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் மார்பு மீது மஞ்சல் இடித்தல், உடல் முழுவம் எழுமிச்சை பழம் கோர்த்தல், இழநீர் இழுத்தல், தேர் இழுத்தல், கரகம் எடுத்தல், சிலம்பாட்டம், மயிலாட்டம், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி ஆறுபடைக்காவடி அலகுத்துதல் ஆகியவைகள் அணி ஊர்வலமாக சென்று பக்தி பரவசத்துடன் ஸ்ரீ கங்கை குமரன் முருகபெருமானுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிப்பட்டனர்.

    இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட முருகபெருமானின் தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் விரதம் இருந்த பக்தர்கள் அருள் வந்த நிலையில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்க்கான ஏற்பாடுகளை பாளேத்தோட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா வேலாயுதம், நிதி நிறுவன உரிமையாளர் வேலு, செயலாளர் குமரவேல், கோவில் தர்மகர்த்தா தணிகாசலம், வைத்திய கவுண்டர், பொருளாளர் குணசேகரன், வார்டு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    விழாவில் விழா குழுவினரால் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் 100-மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • குமரக்குன்று ஸ்ரீ முருக பெருமானின் ரத உற்சவ அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழா குழுவினர் சார்பில் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம் பதிகமலாபுரம் ஆற்றங்கரை யில் குமரக்குன்று ஸ்ரீ முருகபெருமானின் 66-ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை தேர் திருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

    இத்தேர் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் மாதம்பதி, கமலாபுரம், ஒட்டப்பட்டி கவுண்டனூர், புளி யாண்டப்பட்டி, மேட்டுக் கொட்டாய் (கோணிக்கால்) உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புஷ்பக் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, ஆறுப்படை காவடி, பன்னிரெண்டு படைக் காவடி, அத்துடன் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும், புஷ்பரதம், முத்தரம், பவளரதம், கரம் எடுத்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும் எழுமிச்சை பழம் கோர்த்தும் பக்தி பரவசத்துடன் குமர குன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மூன்று பக்தர் தங்களது மார்பு மீது மஞ்சள் இடித்தும், அதேப்போல் ஸ்ரீ முருக பெருமான் ஆற்றங்கரையில் உள்ள தெப்ப தேர் விடுதலும், விமான செடல் மூலம் பக்தர் ஒருவர் தனது முதுகில் இரும்பு கொக்கியால் கோர்த்து தொங்கியவாறு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை காட்டுதல், பூ மாலையிடுதல், குழந்தைகளை தூக்கி கொண்டு ஆசிர்வாதம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    குமரக்குன்று ஸ்ரீ முருக பெருமானின் ரதஉற்சவ அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் மத்தூரில் உள்ள பெங்களுரு-திருவண்ணாமலை தேசிய நெடுச்சாலையில் செயல்பட்டு வரும் குரு மார்டன் வேபிரிட்ஜின் உரிமையாளர்களான அரிமா திருப்பதி, அரிமா பிரேமசுதா தம்பதியினர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.

    திருவிழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா குழுவினர் சார்பில் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாதம்பதி கமலாபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
    • மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.

    3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.

    4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

    6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

    8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.

    9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

    10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.

    11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

    12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.

    13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

    14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.

    15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

    16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

    17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

    அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

    18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.

    19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

    20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
    • வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி சிலைகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருவிழா நடத்திட ஊர் பெரியதனக்காரர்கள் முடிவு செய்தனர். முன்னோர்கள் வழக்கப்படி கிராமம் முழுவதும் வீடுகள் தோறும் கோயில் காளை அலங்கரித்து அழைத்துச் சென்று தேர்திருவிழா செலவுக்கு வரி வசூல் செய்தனர்.

    இதனையடுத்து நாளை சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்களும் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் பிறப்பு குறித்த இசைப்பாட்டு சொற்பொழிவு 2 வாரங்களாக நடந்து வருவதும், வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவில் இருந்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை விருந்துக்கு அழைத்துச் சென்று, மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து தினந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருவதும் குறிப்பிடதக்கதாகும்.

    • தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலய தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஆலயத்தில் தினந்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.

    தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலியை அருட்தந்தை.விக்டர் பால்ராஜ் நிறைவேற்றினர். பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைத்து தீர்த்தம் தெளித்து அர்ச்சிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தேர் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், அண்ணா மார்கெட், அண்ணாஜி ராவ் ரோடு, ஊட்டி ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஹென்றி லாரன்ஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 

    • ஆடம்பர தேர் பல ஆயிரக்கணக்கான பக்தர்க ளுக்கு மத்தியில் பொம்மி டியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன் தேர் தூக்கிச் செல்லப்பட்டது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருத்தலம் மிகவும் பிரபலமானது.

    இந்த ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகம், கோவா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவ பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் போப்பாண்டவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இந்தியாவின் பிரதிநிதி ஆண்டனி புலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சி தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நாடகம், கலை நிகழ்ச்சி, திருப்பலி, ஆன்மீக பணி என கொண்டாடப்பட்டது.

    விழாவின் முடிவு நாளான நேற்று தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இறுதி நிகழ்ச்சியாக மாலை 7 மணி அளவில் ஆலங்கரிக் கப்பட்ட ஆடம்பர தேர் பல ஆயிரக்கணக்கான பக்தர்க ளுக்கு மத்தியில் பொம்மி டியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன் தேர் தூக்கிச் செல்லப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ், ஊர் தலைவர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • இன்று ரத உற்சவம் நடக்கிறது
    • மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சியில் கிராம தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று 13-ந் தேதி காலை தொடங்கியது.

    முன்னதாக கடந்த 30-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டி தினமும் பாலாபிஷேகம் நடைபெற்றது. 6-ந் தேதி அப்பனூர் மாரியம்மனுக்கு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ரத உற்சவம் தொடங்கியது. இன்று அப்பனூர் மாரியம்மனுக்கு ரத உற்சவம் நடக்கிறது.

    இரவு 10 மணி அளவில் நாடகமும், வாணவேடிக்கையும், மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.

    • வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவிலில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது.
    • திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவி லில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடே சன், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வாழ்த்தி பேசினார். அவர் பேசுகை யில், தி.மு.க. ஆட்சியில் திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி கோட்டம் அமைய உள்ளது. இங்கு அடுத்த வருடம் அர்த்தநாரீஸ்வரர் புதிய தேரில் வலம் வர உள்ளார் என்றார்.

    விழாவில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அனி தாவேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் வரவேற்று பேசினார். நகர செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

    • நாளை மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    • 2-ந் தேதி மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    திருப்பூர்  :

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி இன்று 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு கிராமசாந்தி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. நாளை 27-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் 1-ந்தேதி வரை காலை 10 மணி மற்றும் மாலை 6-30மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

    நாளை 27-ந்தேதி கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ம் நாளான 28-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பூத வாகனம், அன்ன வாகனத்திலும், 3-ம் நாளான 29-ந்தேதி(திங்கட்கிழமை) ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு, சேஷ வாகனத்திலும், 4-ம் நாளான 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கற்பக விருட்சம், அதிகார வாகனம், யாழி வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 5-ம் நாளான 31-ந்தேதி(புதன்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவை புறப்பாடு நடக்கிறது.

    6-ம் நாளான 1-ந்தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் நாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3-30மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 5மணியில் இருந்து 6மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    8-ம்நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 3-30மணிக்கு பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 9-ம் நாளான 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிவேட்ைட, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 10-ம்நாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) தெப்பத்திருவிழா (பெருமாள் கோவில் ) நடக்கிறது.

    11-ம்நாளான 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தரிசனம் , 12-ம்நாளான 7-ந்தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீரரட்டு விழா, மலர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 13-ம் நாளான 8-ந்தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை காலை 10மணி, மாலை 7மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    விழாவையொட்டி நாளை 27-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை மாைல 6மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி நாளை 27-ந்தேதி மாலை 6மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி ஜெயந்தி ஸ்ரீதரின் தெய்வீக பாடல் நிகழ்ச்சி,29-ந்தேதி திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம், 30-ந்தேதி சவிதா ஸ்ரீராமின் நாம சங்கீர்த்தனம், 31-ந்தேதி நவீன் பிரபஞ்ச நடன குழுவின் கொங்கு நாட்டு பாரம்பரிய ஒயில் கும்மி நடனம் நிகழ்ச்சி, 1-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 2-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 3-ந்தேதி நரசிம்மர் தரண்டகம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம், 4-ந்தேதி வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, 5-ந்தேதி மணிகண்டனின் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ,6-ந்தேதி தெய்வீக பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    • தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.
    • நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ம் ஆண்டு திருத்தல தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாலை நேரங்களில், தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.

    பின்னர் மாலை 7 மணியளவில், வண்ண விளக்குளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை அருட்திரு இருதயம் மந்திரித்து, தேர் பவனியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடாக மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்நது கொண்டனர்.

    • இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
    • உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    கடலூ:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இந்த தேர் திருவிழாவின் போது, நாள்தோரும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இவ்விழாவின் இறுதிநாளில் திருத்தேர் பவணி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜையுடன் புது நன்மை மற்றும் உறுதிபூசூதல் ஆகிய அருட்கொடைகள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் வழங்கப்பட்டது.

    பின்னர், புனித மலர்மலை மாதாவின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவணியை, மறைவட்ட முதன்மைக்குரு . ஜார்ஜ் புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடக்கி வைத்தார். பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

    இந்த திருவிழாவில், கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிருஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    ×