என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
- இன்று ரத உற்சவம் நடக்கிறது
- மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சியில் கிராம தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று 13-ந் தேதி காலை தொடங்கியது.
முன்னதாக கடந்த 30-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டி தினமும் பாலாபிஷேகம் நடைபெற்றது. 6-ந் தேதி அப்பனூர் மாரியம்மனுக்கு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ரத உற்சவம் தொடங்கியது. இன்று அப்பனூர் மாரியம்மனுக்கு ரத உற்சவம் நடக்கிறது.
இரவு 10 மணி அளவில் நாடகமும், வாணவேடிக்கையும், மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.
Next Story






