என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் தேர் திருவிழா
- தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.
- நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ம் ஆண்டு திருத்தல தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை நேரங்களில், தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.
பின்னர் மாலை 7 மணியளவில், வண்ண விளக்குளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை அருட்திரு இருதயம் மந்திரித்து, தேர் பவனியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடாக மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்நது கொண்டனர்.






