என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போக்கம்பட்டி கங்கை குமரன் கோவில் 42-ம் ஆண்டு தேர் திருவிழா
- ஊர்வலமாக சென்று பக்தி பரவசத்துடன் ஸ்ரீ கங்கை குமரன் முருகபெருமானுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிப்பட்டனர்.
- விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேத்தோட்டம் ஊராட்சி, போக்கம்பட்டி ஸ்ரீகங்கைகுமரன் கோவில் 42-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை தேர் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஸ்ரீகங்கை குமரன் முருகபெருமானுக்கு விரதம் இருந்த பக்தர்கள் மார்பு மீது மஞ்சல் இடித்தல், உடல் முழுவம் எழுமிச்சை பழம் கோர்த்தல், இழநீர் இழுத்தல், தேர் இழுத்தல், கரகம் எடுத்தல், சிலம்பாட்டம், மயிலாட்டம், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி ஆறுபடைக்காவடி அலகுத்துதல் ஆகியவைகள் அணி ஊர்வலமாக சென்று பக்தி பரவசத்துடன் ஸ்ரீ கங்கை குமரன் முருகபெருமானுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிப்பட்டனர்.
இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட முருகபெருமானின் தேர் பவனியை பக்தர்களால் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் விரதம் இருந்த பக்தர்கள் அருள் வந்த நிலையில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்க்கான ஏற்பாடுகளை பாளேத்தோட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா வேலாயுதம், நிதி நிறுவன உரிமையாளர் வேலு, செயலாளர் குமரவேல், கோவில் தர்மகர்த்தா தணிகாசலம், வைத்திய கவுண்டர், பொருளாளர் குணசேகரன், வார்டு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
விழாவில் விழா குழுவினரால் காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் 100-மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்