search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்கொடி"

    • திருமங்கலத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
    • துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசுதினவிழா நடந்தது. திருமங்கலம் நகராட்சியில் தலைவர் ரம்யா முத்துக்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் தி.மு.க. நகரச்செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மையை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து தெற்குதெருவில் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முத்து, கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், பெல்ட்முருகன், காசிபாண்டி, சின்னசாமி, ரம்ஜான்பேகம் ஜாகீர், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் லதா ஜெகன் தேசியக் கொடியேற்றினார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்.
    • ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    தஞ்சாவூர்:

    நாட்டின் குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண கலரில் பலூன்களை பறக்க விட்டார்.

    தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 69 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவம னையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகள் 17 பேர், தாட்கோ மூலம் பயன்பெறும் பயனாளிகள் 17 பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பேர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என 672 பயனாளிகளுக்கு 5008965 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்த லைவர் முத்துச்செல்வன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், தாசில்தார சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றினார்.
    • கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் (ராஜன் தோட்டம்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா இன்று (26.01.2023) காலை 08.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    74-வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வருடாந்திர பராமரிப்பு தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.18,000 மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகையும், 40,பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித்தொகையும்,10 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஆண்களுக்கு திருமண உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும்,27 பயனாளிகளுக்கு தலா ரூ,2500 மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் 173 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 இலட்சம் மதிப்பில்;-

    காப்பீடு உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் மானியத்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 4480 மதிப்பில் விசை தெளிப்பானும், 1 பயனாளிக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பில் பண்ணை வேளாண் கருவிகளும், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனமொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர்ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சணா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, இணை இயக்குநர்(வேளாண்மை) சேகர், மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி, மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், முதன்மை கல்வி அலுவலர்ரேணுகா ,உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன் அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல்;-

    கண்காணிப்பாளர்த ங்க வேல், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர்காமாட்சி மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் அவர்கள், மயிலாடுதுறை வட்டாட்சியர்.மகேந்திரன், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    திருவாரூர்:

    இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

    அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் ஏழு பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 47 பேருக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 616 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கும் என பல்வேறு துறைகளில் சார்பில் 705 பேருக்கு ரூ 2,06,09,915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    • நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.
    • காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளி களுக்கு ரூ.90,89,347/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வளர்ச்சி முகமை, சிறப்பாக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊரக துறைகளில் நற்சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செல்வராஜ் எம்பிஅதிகாரிகள் பிரிதிவிராஜ் பானோத் ம்ருகேந்தர்லால்மாவட்ட வருவாய் அலுவலர் சஷிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் பொதுவாக வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவது பரவலாக தென்படவில்லை.
    • ஒரு அரசு பள்ளியில் தேசியக்கொடி இரவு நேரத்தில் பறந்திருப்பது சட்டப்படி இல்லாவிட்டாலும் மரபுப்படி தவறே.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால் விளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர் அணி வகுப்பில் தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது மாணவர்களும் ஆசிரியர்களும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் மாலை 6 மணிக்கு இறக்க வேண்டிய தேசியக்கொடி இறக்கப்படாமல் இரவு முழுவதும் பறந்து கொண்டிருந்ததாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்த பின்னர் கொடி இறக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேசியக்கொடி இரவில் பறப்பது அனுமதிக்கப்பட்டதா என்பது குறித்து உயர்நீதிமன்ற வக்கீல் அப்துல் கலாம்ஆசாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேசியக்கொடி திறந்த வெளியில் இருந்தால், பொதுமக்களால் ஏற்றப்பட்டால் அது இரவு முழுவதும் பறக்கலாம். ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் தேசியக்கொடியை இரவில் கூட பறக்க அனுமதிக்கும் வகையில் 2002-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் திருத்தியது. முன்னதாக, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இடையே மட்டுமே கொடியை ஏற்ற முடியும் என்ற சட்டம் இருந்தது.

    விமான நிலையம் ரெயில் நிலையம் போன்ற இடங்களில் பகலை போன்று இரவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் இருக்கும் பகுதியில் தேசியக்கொடி இரவிலும் பறக்கலாம் என்று அரசு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்தபோது இரவு நேரத்தில் கொடியை இறக்க வேண்டும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் அதில் இடம் பெறவில்லை. எனினும் பொதுமக்கள் பொதுவாக வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுவது பரவலாக தென்படவில்லை.

    ஆனால் ஒரு அரசு பள்ளியில் தேசியக்கொடி இரவு நேரத்தில் பறந்திருப்பது சட்டப்படி இல்லாவிட்டாலும் மரபுப்படி தவறே.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    சாயல்குடி

    கடலாடி மற்றும் சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா துணை சேர்மன் ஆத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்ஒன்றிய மேலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை, செய்யது ராவியா, சேதுபாண்டி, குஞ்சரம் முருகன், ராமலட்சுமி ,அதிமுக கடலாடிஒன்றிய விவசாய அணி தலைவர் சண்முக போஸ் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர் சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார் துணை சேர்மன்மணிமேகலை பாக்கியராஜ் இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாயல்குடி பேரூராட்சிதலைவர் மாரியப்பன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் சாயல்குடி காவல் நிலையத்தில் எஸ்ஐ சல்மோன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் கடுகு சந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் காளிமுத்து தேசிய கொடி ஏற்றினார் எஸ். வாகைக் குளம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி வடமலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கண்டிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம் தேசிய கொடி ஏற்றினார் காணிக்கூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் இதம் பாடல்ஊராட்சியில் தலைவர் மங்களசாமி மேலச் செலவனூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மகர ஜோதி கோபாலகிருஷ்ணன் கொத்தங்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கணேசன் கடலாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ராஜபாணிக்கம் லிங்கம் சிக்கல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன் மேலச்சிறுபோது ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சம்சாத் பேகம் முகம்மது ரபிக்,ஓரிவயல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் மலர்மதி திருப்பதி வேப்பங்குளம் ஊராட்சி மில் ஊராட்சி தலைவர் முருகன் பிள்ளையார் குளம் வளர்ச்சி ஊராட்சி தலைவர் வீரபாண்டியன் செஞ்சடைநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லிங்கராஜ் எஸ் தரைக்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முனியசாமி கன்னிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் செவல்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சொரிமுத்து நரிப்பையூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் நாராயணன் எஸ். கிரந்தை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பீ.கீரந்தை ஊராட்சியில் ஊராட்சித் தலைவர்ஆனந்தம்மாள் அற்புதராஜ் கீழச்செல்வனூர் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் முகம்மது இக்பால் வாலிநோக்கம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பீர் முகம்மது, மேலக் கிடாரம்ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கவிதா அய்யனார் பெரியகுளம் ஊராட்சி ஊராட்சி தலைவர் முத்துமாரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவீந்திர நாதன் மாரியூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் ஒப்பிலான் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் அப்துல் ஹக்கீம் கீழக்கிடாரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மீனாள்தங்கையா ஏனாதி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாரதிராஜா பொதிகுளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் லட்சுமி திருவாப்பு ஒருவானேந்தல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    • 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் தேசியக்கொடிைய ஏற்றி, ரூ.1 கோடியே 55 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • றப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்கள் 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்
    • வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்

    திருவண்ணாமலை:

    75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் வணிக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மத்திய மாநில அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெருக்கள் தேசிய கொடிகளாக காட்சியளிக்கின்றன.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக போற்றப்படும் அண்ணாமலை உச்சியின் மீது ஏறி சென்று சிலர் தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி பஸ் நிலையத்தில் சுமார் 100 அடி நீளத்துக்கு தேசிய கொடி கட்டப்பட்டுள்ளது.

    • பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார்.
    • இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில் இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார். வேளூரில் தொடங்கிய பேரணி புதிய, பழைய பேருந்து நிலையம், ரெயிலடி மன்னை சாலை, அண்ணா சிலை, வேதை சாலை, அண்ணா நகர் என முக்கிய வீதிகள் வழியாக வந்து நெடும்பலத்தில் முடிவுற்றது. இதில் மாவட்ட பொருளாளர் தமிழ்பால் சிவக்குமார், மாவட்ட செயலாளர் வினோத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராகவன், டி ஆர் கணேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகுமாரன், ஒன்றிய தலைவர் பூபதி, இளைஞர் அணி பொறுப்பாளர் மணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.
    • மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சி சார்பில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கு களைகட்டி வருகின்றன. இதைப்போல் நேற்று நாகப்பட்டினம் பால்பண்ணைசேரி இ.ஜி.எஸ் பிள்ளை சர்வதேச பள்ளி சார்பில் சுதந்திர தின விழாவின் மகத்துவத்தை மக்கள் அறிந்திடும் வகையில் 75 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாகப்பட்டினம் அவுரித்திடலில் துவங்கிய கொடி ஊர்வல பேரணி தொடங்கி தொடர்ந்து பள்ளி மழலைகள் 75 அடி நீளம் கொண்ட மூவர்ண தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பால் பண்ணைச்சேரியில் அமைந்துள்ள இஜிஎஸ் பிள்ளை சர்வதேச பள்ளி வரை பேரணியாக சென்றனர்.

    அப்போது மழலைகள் சுமந்து சென்ற மூவர்ண தேசிய கொடியின் ஊர்வலத்தை வழி நெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள் கண்டு வியந்தனர். பின்னர் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மூவர்ண தேசியக்கொடி ஊர்வலத்தை பார்வையிட்டு மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார்.

    • தேசியக்கொடியின் சிறப்பு அதை பயன்படுத்தும் முறைகளை விளக்கி 75 வது சுதந்திரநாள்விழா தொடங்கி வைக்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கி அனைவருக்கும் தேசிய கொடிகளை ஆசிரியர் தாமோதரன் வழங்கினார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் 120 மாணவர்களுக்கும் வீடுகளில் தேசியக்கொடியேற்ற கொடி வழங்கப்பட்டது.

    தேசியக்கொடியின் சிறப்பு அதை பயன்படுத்தும் முறைகளை விளக்கி 75 வது சுதந்திரநாள்விழா தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கி அனைவருக்கும் தேசிய கொடிகளை ஆசிரியர் தாமோதரன் வழங்கினார்.

    விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜவஹர், ஜான்மா, சுரேஷ், ரமேஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி புஷ்பராணி, சத்துணவுப் பணியாளர்கள் சின்னபாப்பா, ஜெமினி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ×