search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கரம்"

    • பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார்.
    • இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில் இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார். வேளூரில் தொடங்கிய பேரணி புதிய, பழைய பேருந்து நிலையம், ரெயிலடி மன்னை சாலை, அண்ணா சிலை, வேதை சாலை, அண்ணா நகர் என முக்கிய வீதிகள் வழியாக வந்து நெடும்பலத்தில் முடிவுற்றது. இதில் மாவட்ட பொருளாளர் தமிழ்பால் சிவக்குமார், மாவட்ட செயலாளர் வினோத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராகவன், டி ஆர் கணேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகுமாரன், ஒன்றிய தலைவர் பூபதி, இளைஞர் அணி பொறுப்பாளர் மணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×