search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு"

    • கடன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மூலச்சன்விளையை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது 60). இவர் சொந்தமாக லாரி ஓட்டி வந்தார். சிவதாஸிற்கு லாரி வாங்கியதிலும் வீடு கட்டியதிலும் கடன் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் சம்பவத்தன்று வீட்டு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் சிவதாஸ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி ஜெயா ( வயது 48). இவர்கள் மகள் சிவரஞ்சினி (20).

    ஜெயா முந்திரி ஆலையில் பணி செய்கிறார். சிவரஞ்சனி தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் மகள் சிவரஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து, வரன் பார்க்க துவங்கியுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவதினம் இது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சிவரஞ்சனி தாய் தந்தையர் வேலைக்கு போன பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளர்.

    இது தொடர்பாக தாய் ஜெயா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகர் சிவரஞ்சனி தற்கொலை செய்தது காதல் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என விசாரித்து வருகிறார்.

    • வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வீடியோ கால் மூலம் பேசியதில் ஏற்பட்ட தகராறில் பரிதாப முடிவு
    • கன்னியாகுமரி போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஞானபாக்கியபாய் (வயது 33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள தனது கணவர் செந்திலுடன் நேற்று வாட்ஸ்-அப் வீடியோகால் மூலம் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த ஞானபாக்கியபாய் தனது 2 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்துஅவரது கணவர் செந்தில் அருகில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது ஞான பாக்கியபாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

    உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நன்னிகுப்பத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மகள் சுகப்பிரியா (வயது 16). இவர், உளுந்தூ ர்பேட்டையில் உள்ள தனியார்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் இவரது தாயாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகமன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டி யம் பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புவனகிரி அருகே மனைவியை மிரட்ட தூக்கிட்டு வீடியோ பதிவிட்டவர் மருத்துவமனையில் இறந்தார்.
    • ரமேஷ் என்பவரின் மகள் சுவேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணியரசன்,(வயது25. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சுவேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் புவனகிரியில் வாடகை வீட்டில் வசித்தனர். அவர்களுக்கு2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மணியரசன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதை சுவேதா கண்டித்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு மணியரசன் குடித்துவிட்டு வந்ததால் சுவேதா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். குடி போதையில் இருந்த மணியரசன், தன் மனைவியை மிரட்ட துாக்குப் போட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வதாகவீடியோவை 'வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மணியரசன் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி வயது54. கூலி வேலை செய்யும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தக்கலை அருகே சாரோடு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாள்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வேலைக்கு செல்லவில்லை.

    இதனால் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேனில் தூக்கு மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டுக்கு உள் வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குமாரசாமியை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். டாக்டர் இவரை பரிசோதனை செய்து கொண்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக மனைவி பிறேமபுனிதா தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்ய உடலை மருத்துவ மனையில் ஒப்படைத்தனர்.

    • நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் மெது கும்மல் பகுதியை சேர்ந்த வர் ராஜன், தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர்.

    மெதுகும்மல் பகுதியில் வசித்து வந்த ராஜன் கடந்த சில மாத காலமாக நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் சென்னை யில் வசிக்கும் ராஜனின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே மகள் மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக ராஜனின் மனைவி சென்னை சென்று உள்ளார்.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜன் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். காலையில் வேலைக்கு செல்வதற்கு பக்கத்தில் உள்ளவர்கள் ராஜன் வீட்டில் வந்து கூப்பிட்டுள்ளனர்.

    ராஜனிடம் இருந்து எந்த பதிலும் வராததினால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் தூக்கீல் பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை க்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷ்ராஜ் ஒரு விபத்தில் சிக்கியதில் கால் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டார்
    • சொந்தமாக வீடு, நிலம் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ் (வயது 34). மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்த இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கடை பகுதி மாராயபுரத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கொத்தனார் வேலை செய்து வந்த சுரேஷ்ராஜ் ஒரு விபத்தில் சிக்கியதில் கால் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் சொந்தமாக வீடு, நிலம் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் வாழ்க்கையில் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக சுரேஷ்ராஜ் மனைவி ரெம்யா கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் ராஜேஷ்குமார் மனச்சோர்வுடன் வாழ்ந்து வந்ததார்
    • மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    குழிக்கோடு அருகே உள்ள செருக்குத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் பெயிண்டர். இவரது மனைவி பிரீதாகுமாரி ஆலத்தட்டை அம்மன் கோவிலில் பணி செய்து வருகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் ராஜேஷ்குமார் மனச்சோர்வுடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

    நேற்று வழக்கம் போல் பிரீதாகுமாரி கோவில் பணிக்கு வந்தார். அவரை கணவர் ராஜேஷ்குமார் காலை 9:30 மணியளவில் கோவிலில் சென்று பார்த்ததாக தெரிகிறது. இந்நிலையில் பகல் 11:30 மணியளவில் பிரீதாகுமாரி வீட்டிற்கு சென்றார். அங்கு படுக்கையறை பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு ராஜேஷ்குமார் தற்கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து உடலை உடல்கூறு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×