என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி வயது54. கூலி வேலை செய்யும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தக்கலை அருகே சாரோடு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாள்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வேலைக்கு செல்லவில்லை.
இதனால் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேனில் தூக்கு மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டுக்கு உள் வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குமாரசாமியை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். டாக்டர் இவரை பரிசோதனை செய்து கொண்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக மனைவி பிறேமபுனிதா தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்ய உடலை மருத்துவ மனையில் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்