என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கடை அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை
- தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி ஜெயா ( வயது 48). இவர்கள் மகள் சிவரஞ்சினி (20).
ஜெயா முந்திரி ஆலையில் பணி செய்கிறார். சிவரஞ்சனி தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மகள் சிவரஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து, வரன் பார்க்க துவங்கியுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவதினம் இது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சிவரஞ்சனி தாய் தந்தையர் வேலைக்கு போன பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளர்.
இது தொடர்பாக தாய் ஜெயா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகர் சிவரஞ்சனி தற்கொலை செய்தது காதல் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்