search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே லாரி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    இரணியல் அருகே லாரி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • கடன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மூலச்சன்விளையை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது 60). இவர் சொந்தமாக லாரி ஓட்டி வந்தார். சிவதாஸிற்கு லாரி வாங்கியதிலும் வீடு கட்டியதிலும் கடன் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் சம்பவத்தன்று வீட்டு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் சிவதாஸ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×