search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  பிளஸ்-1 மாணவி தூக்கு  போட்டு தற்கொலை
    X

    பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    • பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நன்னிகுப்பத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மகள் சுகப்பிரியா (வயது 16). இவர், உளுந்தூ ர்பேட்டையில் உள்ள தனியார்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் இவரது தாயாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகமன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டி யம் பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×