search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சூடு"

    • போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன.
    • படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    பெரியபாளைம் அருகே உள்ள கன்னிகைபேர் காலனி பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம்(வயது36). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு சித்தாமூர் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக தணிகாசலம் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த தணிகாவை போலீசார் தேடி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ரவுடி தணிகா உள்பட தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உத்தரவின்படி செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பிரதாப் ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை எஸ்.ஆர்.எம்.சி. ஆஸ்பத்திரி அருகே பதுங்கி இருந்த ரவுடி தணிகாவை தனிப்டை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் மேல் விசாரணைக்காக சித்தாமூர் போலீஸ்நிலையத்துக்கு போலீசார் அவரை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

    செங்கல்பட்டு அருகே லாரல் மால் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ரவுடி தணிகா திடீரென பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை தாக்கி விட்டு ஓடும் வாகனத்தில் இருந்து கீழே குதித்து இருட்டான பகுதிக்கு தப்பி ஓடமுயன்றார்.

    அவரை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ் தனது கைத்துப்பாக்கியால் 2 ரவுண்டு ரவுடி தணிகாவை சுட்டார். இதில் வலது கால் முழங்கால் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்தார்.

    அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கை, காலில் பலத்த காயத்துடன் ரவுடி தணிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி மாவ ட்டங்களில் வெடிபொருட்கள் பயன்படுத்தி 8 கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆயுதம் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்திய ஒரு கலவர வழக்கும், 2 கொள்ளை வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழவரம் அருகே 2 ரவுடிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அருகே ரவுடி தணிகா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பல்கலைக் கழகத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நிலைமை குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.

    • போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார்.
    • யாசர் நசீர் கைது செய்யப்பட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர், ஒரு நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதை கவனித்தனர். சரண் அடையுமாறு உத்தரவிட்டனர்.

    ஆனால் அந்த நபர், எல்லை கட்டுப்பாட்டு கோடு நோக்கி ஓடத்தொடங்கினர். அவரை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.

    அவர் பெயர் யாசர் நசீர் என்றும், உள்ளூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார். கடத்துவதற்காக அவர் வைத்திருந்த ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. யாசர் நசீர் கைது செய்யப்பட்டார். குண்டடிபட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன். முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். மேலும் மணவாளநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இளையராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் மணவாளநல்லூரில் இளையராஜாவுக்கு சொந்தமான விளை நிலத்தில் வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்வதற்காக இளையராஜா நேற்று மாலை 4 மணிக்கு தனது விளை நிலத்திற்கு சென்றார். அப்போது அவர், அங்கு வந்த வேளாண்மைத்துறை அதிகாரியுடன், பயிற்சி கூட்டம் தொடர்பாக பேசினார்.

    கூட்டம் முடிந்து மாலை 5.30 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களை பார்த்ததும், இளையராஜா தனது காரை நோக்கி ஓடினார். உடனே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால், இளையராஜாவை நோக்கி சுட்டார்.

    இதில் துப்பாக்கி குண்டு, அவரது இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, தனது காரில் ஏறி கதவை பூட்டிக் கொண்டு, தப்பிச் செல்ல காரை இயக்க முயன்றார். அப்போது அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் இளையராஜாவை நோக்கி சுட்டார்.

    அந்த குண்டு கார் கண்ணாடியை துளைத்துக்கொண்டு, அவரது கழுத்தில் பாய்ந்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. மேலும் அந்தகும்பல் 2 முறை கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து இளையராஜா, காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். ரத்தக்கறையுடன் வந்த அவரை மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய ராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் தலைமையிலான விருத்தாசலம் போலீசார், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து இளையராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான் வேளாண்மைத்துறை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பார்வையிட சென்றேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் வந்தனர். அதில் 2 பேர் துப்பாக்கியால் என்னை சுட்டனர். இதில் இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்றார். இதனிடையே இளையராஜா மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஆடலரசன், புகழேந்திராஜா, சூர்யா, வெங்கடேசன், சதீஷ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கள்ள துப்பாக்கி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

    • இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.
    • மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மைதேயி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பல நாட்கள் அமைதிக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடந்தது. இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். மணிப்பூர் காவல்துறை இதை தெரிவித்து உள்ளது. 7 பேருக்கு குண்டு காயம் அல்லது பிற காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    கொய்ரென்டாக் பகுதியுள்ள கிராமத்தில் 30 வயதான ஜங்மின் லுன் காங்டே என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். அவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார். மற்றொரு சம்பவத்தில் தினுங்கே பகுதியை சேர்ந்த 40 வயதான விவசாயி சலாம் ஜோதின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.

    கொய்ரெண்டாக் மற்றும் தினுங்கே பகுதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதால் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்த பாடில்லை.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தான். அவன் அங்கிருந்த பேராசிரியரை துப்பாக்கியால் சுட்டான்.

    இதில் பேராசிரியர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    இதையடுத்து துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மர்ம நபர் குறித்து விசாரணை நடத்திய போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவனை தீவிரமாக தேடினர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் மர்ம நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவன் மீது வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    போர்ட்-ஓ-பிரின்ஸ்:

    ஹைதி நாட்டு தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியில் பாதிரியார் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர்.

    அப்போது கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

    • ஒரு பெண் உள்பட 3 கறுப்பினத்தவர்கள் பலியானார்கள்.
    • தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    புளோரிடா:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் கறுப்பினத்தவர்களை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்த படி ஒடினார்கள்.

    இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 கறுப்பினத்தவர்கள் பலியானார்கள். இவர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இனவெறி காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இனவெறி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக ஜாக்சன் வில்லே போலீஸ் அதிகாரி வாட்டர்ஸ் கூறியதாவது:-

    இந்த தாக்குதல் இன வெறி காரணமாக நடந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர், கறுப்பின மக்களை வெறுத்து வந்துள்ளார். அவர் 20 வயதான வாலிபர் ஆவார்.

    அவர் தாக்குதலுக்கு கைத்துப்பாக்கி மற்றும் ஏ.ஆர்-15 வகை தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தினார். அவர் வெறுப்பு சித்தாந்தத்தை கொண்டிருந்தார். அந்த வாலிபர் ஒரு பெரிய குழுவை சேர்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் முற்றிலும் தனியாக செயல்பட்டுள்ளார் என்றார்.

    ஆனால் தாக்குதல் நடத்தியவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதேபோல் ஓக்லஹோ மாவில் உள்ள உயர் நிலைப்பபள்ளியில் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர்.

    மேலும் பாஸ்டன் நகரில் கரீபியன் திருவிழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடியே உள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்ம நபர், பள்ளிக்குள் செல்ல விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • மர்ம நபர் யார் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.

    அமெரிக்காவின் மெம்பிசில் நகரில் யூதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றனர். அவர் துப்பாக்கியால் பல முறை சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்ம நபர், பள்ளிக்குள் செல்ல விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    உடனே அந்த மர்ம நபர் காரில் ஏறி தப்பி சென்றார். இதனால் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் காயமின்றி தப்பினர். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடினர். அப்போது அவரை துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர். காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர் யார் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.

    • முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.
    • முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கின்சாகா:

    காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
    • புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது.

    இந்த நிலையில் பிரேசிலில் பொதுமக்கள் துப்பாக்கிகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதற்கான உத்தரவுகளை அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா பிறப்பித்துள்ளார்.

    அதன்படி பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருக்கக் கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கை நான்கில் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகள் 200-ல் இருந்து 50 ஆக குறைகிறது. மேலும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள், 9 மி.மீ. பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிபர் லுலாடா சில்வா கூறும் போது, குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை அவர்கள் வைத்திருக்கட்டும். ஆனால் துப்பாக்கிகள் மக்களின் கைகளில் அதிகமாக இருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

    ஆயுதமற்ற நாட்டிற்காக தொடர்ந்து போராடுவோம். பிரேசில் காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகள்தான் துப்பாக்கிகளை கையாள்வதில் நன்கு பொருந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.

    புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது. முன்பு இது ராணுவம் வசம் இருந்தது. கடந்த மே மாதம் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் துறையில் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    துப்பாக்கி பயிற்சி மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் இருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையின் சகோதரியான ஒரு வயது குழந்தை தலையில் காயம் அடைந்து உயிரிழந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற வகையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளனர் என்றும் அதை குழந்தை எடுத்த போது தவறுதலாக வெடித்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் சான்டியாகோ கவுண்டியில் உள்ள பால்ப்ரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளது.

    அப்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டது. இதில் அந்த குழந்தையின் சகோதரியான ஒரு வயது குழந்தை தலையில் காயம் அடைந்து உயிரிழந்தது.

    வீட்டில் பாதுகாப்பற்ற வகையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளனர் என்றும் அதை குழந்தை எடுத்த போது தவறுதலாக வெடித்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×