search icon
என் மலர்tooltip icon

    காங்கோ

    • உள்ளூர் ஆயுத குழுக்களிடையே மோதல் நடந்து வருகிறது.
    • ஒரு குண்டுதான் தற்போது சிறுவர்கள் எடுத்து விளையாடி வெடித்தது தெரிய வந்தது.

    ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் கிவு மாகாணம் கியாங்கிட்சி பகுதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மர்மப்பொருள் ஒன்று கிடந்தது. வித்தியாசமான அந்த பொருளை சிறுவர்கள் தங்களது வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்குள்ள பெரியவர்கள் அது என்னவென்று கண்டுபிடிக்க முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் சிறுவர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். கடந்த இரு வாரங்களாக கியாங்கிட்சி பகுதியில் உள்ளூர் ஆயுத குழுக்களிடையே மோதல் நடந்து வருகிறது. இவர்களிடையே நடந்த மோதலின்போது வீசப்பட்ட ஏராளமான குண்டுகள் வீசப்பட்டன. அதில் ஒரு குண்டுதான் தற்போது சிறுவர்கள் எடுத்து விளையாடி வெடித்தது தெரிய வந்தது.

    • முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.
    • முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கின்சாகா:

    காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கோவில் கனமழை பெய்து வருகிறது.
    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 175க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கின்சாஹா:

    ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு காங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை பெய்தது. அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர்.

    அப்பகுதியில் உள்ள சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில், காங்கோவில் வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதைந்தும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாயமான 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

    வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    • காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகினர்.
    • கனமழை வெள்ளத்தால், வீடுகள், சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.

    கின்ஷாசா:

    காங்கோ நாட்டின் மசிசி மாகாணத்தின் பொலொவா கிராமத்தில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை தேடி வருகிறோம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் மசிசி மாகாணத்தின் பிஹாம்ப்வே கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
    • இதில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கோவின் கிழக்கில் உள்ள இடுரி மற்றும் ட்ஜிகு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மாகாணங்களில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியது. இந்த சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த டிரைவர் உள்பட பொதுமக்கள் 17 பேர் கிளர்ச்சியாளர்கள் குழுவால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • கனமழை வெள்ளத்தால், வீடுகள், சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன
    • தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு.

     கின்ஷாசா:

    காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன. சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    • ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர்.
    • நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் பிரபல பாடகர் பாலி இபுபாவின் இசைக்கச்சேரி நடந்தது. இதையொட்டி அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் திரண்டனர். 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானத்தில் அதற்கும் அதிகமாக கூட்டம் திரண்டது.

    ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதை மீறியும் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் காங்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த திங்கட்கிழமை போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 3 அமைதி காப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
    • இச்சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    கின்ஷாசா:

    காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தொடர் வன்முறைக்கு மக்கள் இலக்காகி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி மக்களைப் பாதுகாக்க ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழு தவறிவிட்டது எனக்கூறி பெரும் போராட்டம் வெடித்தது.

    கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 3 அமைதி காப்பாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    இந்நிலையில், கிழக்கு காங்கோ எல்லை பகுதியில் விடுமுறைக்கு சென்றுவிட்டு பணிக்குத் திரும்பிய ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழுவை சேர்ந்த ராணுவ வீரர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

    கசிந்தி என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சந்தேகத்திற்குரிய வீரர்கள் கைது செய்யப்பட்டு, எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அவர்கள் என விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று காங்கோவில் உள்ள ஐ.நா.வுக்கான பொது செயலாளரின் சிறப்பு பிரதிநிதி பின்டவ் கெய்டா கூறியுள்ளார்

    வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
    • இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்.

    காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த படையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள புடெம்போ நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்கார்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய பிஎஸ்எப் படை வீரர்கள் இருந்த பகுதியை சுற்றி வைத்த போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தனர். இதற்கு காங்கோ அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

    ×