search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rwanda"

    தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். #PMModi #BRICSSummit
    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனையின் போது இந்தியாவுக்கும் மேற்கண்ட இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், இந்த நாடுகளின் தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறுதியாக, நேற்று மாலை துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி.

    விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். #PMModi #BRICSSummit #Johannesburg
    20 கோடி டாலர் கடன் உதவியுடன் இந்தியா - ருவாண்டா இடையே இன்று 8 ஒப்பந்தங்கள் கையொப்பமானதுடன் ருவாண்டா மக்களுக்கு 200 பசுக்களை நினைவுப்பரிசாக அளித்தார் மோடி. #IndiaRwanda #signpacts
    கிகாலி:

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக ருவாண்டா நாட்டுக்கு சென்ற இந்திய தலைவர் என்ற வகையில் அந்நாட்டின் தலைநகர் கிகாலி-ல் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று ருவாண்டா அதிபர் பால் ககாமே - நரேந்திர மோடி தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ருவாண்டாவில் 3 விவசாய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவும், தலைநகர் கிகாலியில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழிற்பூங்காக்களை உருவாக்கவும் 20 கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க மோடி ஒப்புதல் அளித்தார்.


    மேலும், இருநாடுகளுக்கு இடையிலான 8 புதிய ஒப்பந்தங்களும் இன்று கையொப்பமாகின. பின்னர், அங்கு வாழும் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ருவாண்டில் இந்திய தலைமை தூதரகம் விரைவில் திறக்கப்படும் என குறிப்பிட்டார்.

    இந்தியாவின் அன்பளிப்பாக கிராமப்புறங்களில் வாழும் விவசாய மக்களுக்கு 200 பசு மாடுகளையும் மோடி வழங்கினார்.



    இன்று மாலை உகாண்டா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் தொடங்கும் ’பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். #IndiaRwanda #signpacts
    ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தில் முதல் பயணமாக ருவாண்டா சென்றடைந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பால் ககமேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #Rwanda, #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார்.   5 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். ருவாண்டா தலைநகர் கிகாலி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த மோடியை அந்நாட்டின் அதிபர் பால் ககமே நேரில் சென்று வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து, பால் ககமே மற்றும் மோடி இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர், இருவரும்  கூட்டாக பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, ’தன்னை அதிபர் ககமே விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். ருகாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளது. இதனால், பாஸ்போர்ட் மற்றும் விசா பெருவதற்கான வசதிகள் உருவாக்கப்படும். ருகாண்டாவின் பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பது பெருமை அளிக்கிறது’ என குறிப்பிட்டார்.

    மேலும், இருநாடுகளுக்கும் இடையே தோல் மற்றும் விவசாயம் ஆராய்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்திய பிரதமர் ஒருவர் ருவாண்டாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. #Rwanda #PMModi
    அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்லும் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Modi #BRICSSummit
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். ஜூலை 23ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும் அவர் ஜூலை 27ம் தேதி அங்கிருந்து இந்தியா திரும்புகிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். அங்கு எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, வரும் 25-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்ற உள்ளார். #Modi #BRICSSummit
    ×