search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கைகள்"

    • திருநங்கைகள், திருநம்பிகளை சமமாக நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
    • பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கண்டாங்கிபட்டி ஊராட்சி கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மனித கடத்தில் மற்றும் வணிக ரீதியில் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் நபர்களுக்கான இழப்பீடு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.

    இதில் அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குடும்ப பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். திருநங்கை கள், திருநம்பிகள் ஆகியோர் சமமாக நடத்தப்பட்ட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார்.

    இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பேசினர். இந்த முகாமில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கலெக்டர் அரவிந்த் தகவல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநங்கை கள் நலன் சார்ந்த திட்டங் கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. 55 திருநங்கைகள் இணைய தளத்தில் பதிவு மேற் கொண்டு தமிழ்நாடு அரசால் இணையவழி அடையாள அட்டை வழங் கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கும் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 31 திருநங் கைகள் அந்தந்த தாலுகா அலுவ லகத்தின் மூலமாக சிறப்பு ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை 49 நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள திருநங்கை களுக்கு 2021-2022 நிதி யாண்டிற்கு சொந்த தொழில் செய்வதற்கு மானியம் வழங்கிட தேர்வு குழு அமைத்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட தைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத்தொ கையினை வழங்கப்பட்டது. இவற்றில், துணி வியாபரம் செய்திட 17 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவும், மாடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலுள்ள கால்நடைகள் கொள்முதல் செய்யவும், ரூ.15 ஆயிரத் திற்கு தீவனம் மற்றும் மேற்கூரை அமைத்தல் என 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மானியமாகவும். மீன் வியாபாரம் செய்துவரும் 4 நபர்களுக்கு தொழில் விரிவு படுப்படுத்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக காய்கறி வியாபாரம் மற்றும் கிராமிய கலை மற்றும் பூ கட்டுதல் செய்திட தலா ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 2 நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் என மொத்தம் 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள், சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வெம்பக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 21 திருநங்கைகள், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 27 சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியாக திருநங்கைகளுக்கும், சிறுபான்மையர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அவர்களுக்கு குடும்ப அட்டைகள், குடியிருப்பு வீடுகள், உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 6 திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

    தமிழகத்திலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் 1 திருநங்கைக்கு மாவட்ட அளவிலான ஊராட்சி களுக்கான வளமையத்தின் தலைமையாளராக பணி நியமன ஆணையும், 1 திருநங்கைக்கு வள மையத்தின் உதவியாளர் கணினி இயக்குபவராக பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளன.

    இது போன்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், வருவாய் கோட்டாட்சியர்கள் விசுவநாதன்(சிவகாசி), அனிதா(சாத்தூர்), விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கநாதன், வத்திராருப்பு வட்டாட்சியர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே டிரைவரை தாக்கி ரூ.1½ லட்சம் வழிப்பறி வழிப்பறி நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டி திருமலாபுரம் தெரு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 43), லாரி டிரைவர்.

    இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சுரண்டை, பாவூர்சத்திரம் பகுதியில் சப்ளை செய்துள்ளார். அதில் கிடைத்த பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துடன் ராஜபாளையம் நோக்கி திரும்பி வந்துள்ளார்.

    அப்போது இயற்கை உபாதைக்காக சாலை யோரம் லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அந்த பகுதியில் நின்றிருந்த திருநங்கைகள் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக ராம்குமார், முகவூர் பாம்பலம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவஞ்சி (21) உள்ளிட்ட 3 திருநங்கைகள் மீது ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
    • 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 50 திருநங்கைகளுக்கு கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    கவுரவமான தொழிலில் ஈடுபடும் வகையில், 50 திருநங்கைகளுக்கு சகோதரன் அமைப்பு, அரிமா சங்கம் இணைந்து கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்களில், மிகக்குறைந்த அளவினர் மட்டுமே, சுயதொழில் செய்கின்றனர். பெரும்பாலானோர் ரெயில்களிலும், கடைகளிலும் காசு பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருநங்கையர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, சகோதரன் அமைப்பு சார்பில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை நகரில் வசிக்கும், 50 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கார், ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அரிமா சங்க உதவியுடன் 50 திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சகோதரன் அமைப்பு தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் வாகனம் தொகுதி தி.மு.க., எம். எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முதல் கட்டமாக, 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி முடித்தவர்கள் ஆட்டோ, கார் ஓட்டுனராக வலம் வர உள்ளனர். எதிர்காலத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சொந்த வாகனம் வாங்க அமைப்பின் வாயிலாக ஏற்பாடு செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது
    • கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திருநங்கையர்கள் சொந்த தொழில் துவங்கிட 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ. 50,000- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது, விருப்பமுள்ள திருநங்கைகள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    சொந்த தொழில் துவங்க விருப்பமுள்ள திருநங்கைகள் தாங்கள் துவங்க உள்ள தொழில் தொடர்பான கருத்துரு மற்றும் உரிய விலைப்புள்ளிகளுடன் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு 25.11.2022-க்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்,

    மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ஆதரவற்ற பெண்கள்

    இதைப் போல் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி,

    சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    மேற்காணும் வாரியத்திற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளதால்,

    தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் 14.11.2022 க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் : 0431-2413796 என்ற எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

    • சுவரில் ஓவியம் வரையும் பணியை ‘திருநங்கை தூரிகை குழு’ என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர்.
    • திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெளிப்புற சுவற்றை வர்ணம் தீட்டி அழகுபடுத்த முடிவு செய்தனர்.

    இதையடுத்து, சுவரில் ஓவியம் வரையும் பணியை 'திருநங்கை தூரிகை குழு' என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து திருநங்கைகள் ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா, ஆகியோர் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் சுவரில் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து திருநங்கை அபிமுக்தா கூறும்போது,

    எண்ணூர் மக்கள் நல சங்கத்தினர் மூலம் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது யாசகம் பெறுபவர்கள் என்ற எண்ணம் பரவி உள்ளது. அதனை மாற்றும் நோக்கத்துடனேயே இவ்வாறு தாங்கள் தொடங்கிய திருநங்கை தூரிகை அமைப்பு மூலம் ஓவியங்கள் வரைவதாக கூறினார். மேலும், பள்ளியின் வெளிப்புற சுவற்றில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு கலை, திருவள்ளுவர், அவ்வைபாட்டி, பாண்டியர், சேரர், சோழர், தஞ்சை பெரிய கோவில் சித்திரம், கோவில் யானை போன்ற தமிழர்களின் கலாசார இலக்கிய பண்பாடு குறித்த ஓவியங்களை சுவரில் வரைவதன் மூலம் வரும் தலைமுறையினருக்கும் நமது பாரம்பரியத்தை கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்தார். திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.

    • காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
    • 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மகேஷ், இவரது தோழி தென்காசி மாவட்டம் கே. ஆலங்குளத்தினை சேர்ந்த அனன்யா.

    திருநங்கையான இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7-ந்தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த நோவாபூபன் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகள் இருவரையும் கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.

    பின்னர் அங்கு வைத்து அவர்களை தாக்கியதோடு அனன்யாவின் தலைமுடியை அறுத்துள்ளனர். மேலும் அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர்.

    இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அப்போது நோவாபூபன், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்கக்கூடாது என்று திருநங்கைகளை அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

    இந்நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இதைத்தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் திருநங்கைகளை தாக்கிய நோவாபூபன், விஜய் இருவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல், திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர்.
    • கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது. இன்று காலை 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கைகளாக இருந்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை இருப்பிடம் இல்லை. மேலும் வேலை வசதி இல்லாததால் மிகுந்த அவதியடைந்து வருகின்றோம்.

    இது மட்டுமின்றி எங்கும் வேலை தர மறுப்பதால் மன உளைச்சலில் இருந்து வருகிறோம். ஆகையால் எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்‌. இதனை தொடர்ந்து போலீசார், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தனர். அதன் பேரில் திருநங்கைகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
    • அடித்தட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது.

    திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வகை செய்யும் புதிய ஒப்பந்தம், தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர். 


    அவர்கள் முன்னிலையில், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சை பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார். 


    திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அடிப்படை சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான தினமாக இது அமைகிறது என்றும், இந்த நடவடிக்கை பாலியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார், சமூகத்தில் அடித்தட்டு மக்கள், கல்வி, கண்ணியத்துடன் வாழ்தல், சுகாதார உதவி, வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

    • ராமநாதபுரம் அருகே பால்குடம் எடுத்து திருநங்கைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • முத்துமாரி அம்மனுக்கு முதன் முறையாக முளைக்கொட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லை நாயகபுரம் கிராமத்தில் முன் மும்தாஜ் என்ற திருநங்கை வீடு உள்ளது. இந்த வீட்டில் 15 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மன் கோவில் அமைத்து முளைப்பாரித் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி முதலாம் ஆண்டாக முளைப்பாரித் திருவிழாவை நடத்தினர். இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோவில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் மாடக்கொட்டான் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முளைப்பாரி களை ஊர்வலமாக சுமந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனையடுத்து முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனை நடத்தி முத்துமாரி அம்மனுக்கு முதன் முறை யாக முளைக்கொட்டு திரு விழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர் ஐவராஜா (வயது28). அவர் கடையநல்லூரை சேர்ந்த திருநங்கை ஹன்சிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஐவராஜா சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ஹன்சிகா மற்றும் திருநங்கைகள் பிருந்தா, முகிலா, செல்லா, தீபா ஆகியோர் சோலைசேரிக்கு வந்தனர்.

    அப்போது ஐவராஜாவின் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சேத்தூர் புறக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×