search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முடியை அறுத்து கொடுமை: திருநங்கைகளை கடத்தி தாக்கிய 2 வாலிபர்கள் கைது
    X

    முடியை அறுத்து கொடுமை: திருநங்கைகளை கடத்தி தாக்கிய 2 வாலிபர்கள் கைது

    • காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
    • 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மகேஷ், இவரது தோழி தென்காசி மாவட்டம் கே. ஆலங்குளத்தினை சேர்ந்த அனன்யா.

    திருநங்கையான இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7-ந்தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த நோவாபூபன் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகள் இருவரையும் கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.

    பின்னர் அங்கு வைத்து அவர்களை தாக்கியதோடு அனன்யாவின் தலைமுடியை அறுத்துள்ளனர். மேலும் அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர்.

    இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அப்போது நோவாபூபன், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்கக்கூடாது என்று திருநங்கைகளை அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

    இந்நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இதைத்தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் திருநங்கைகளை தாக்கிய நோவாபூபன், விஜய் இருவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல், திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×