search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுமனை பட்டா"

    • திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் உள்ள மணல் மேட்டு தெரு, சிவன் திருமஞ்சன வீதி, பனந்தோப்பு தெற்கு தெரு,மேல தெரு, சிவன் சன்னதி மேல மட விளாகம், கீழ மட விளாகம், தெற்கு மட விளாகம்,வடக்கு மட விளாகம், தோப்பு தெரு, நேதாஜி தெரு,எடத்தெரு, செட்டி தெரு, உப்பிலியப்பன் கோவில் திருமஞ்சன வீதி, சந்தன மாரியம்மன்கோவில் தெரு, பழைய செட்டி தெரு, புளியந்தோப்பு, பழைய சேச தெரு, பழைய குடியான தெரு, உப்பிலியப்பன்கோவில் நான்கு வீதிகள் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு இது வரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலவீதியில் அரசு பட்டா வழங்க வேண்டும் என கூறி, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன், திருவிடைமருதுார் போலீஸ் துணை சூப்பிரண்டு, ஜாபர் சித்திக் ஆகியோர் திருநாகேஸ்வரம் சன்னாபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, வரும் 20ம் தேதி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது

    வேலூர்:

    காட்பாடி அடுத்த வீரபத்திரபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தை சேர்ந்த 42 பேரின் வீட்டுமனை பட்டா ஜாப்ரா பேட்டையில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு தற்காலிக பட்டா வழங்கிய நபர் தற்போது அந்த இடத்தை கொடுக்க மறுக்கிறார்.

    இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது.

    எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.

    • மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி த்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 518 மனுக்கள் வரப்பெற்றன.
    • 6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி யும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவி த்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 518 மனுக்கள் வரப்பெற்றன.

    பாலக்கோடு வட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி கடந்த வாரம் 19.6.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு வழங்கி னார்கள். இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளமாறு சம்பந்த ப்பட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதனடிப்படையில், இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாலக்கோடு வட்டம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 6 இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • காங்கயம் வட்டார மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே சம்மந்தம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:- முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு மக்களின் மருத்துவ தேவையை அறிந்து 2 தலைமை மருத்துவமனை தந்திருக்கிறார். அதில் ஒன்று காங்கயம் வட்டார மருத்துவமனை தற்போது ரூ.12 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேவையாக புதிய கட்டிடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி நடைபெற்று கொண்டுள்ளது. படியூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார மையம் வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தாராபுரம் தாலுகா வடசின்னாரி பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 41 பேருக்கும், வருவாய்த் துறையின் சார்பில் வெள்ளகோவில் நகராட்சி பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், சின்னமுத்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 48 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காங்கயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சி, சென்னிமலை சாலை, நல்லிகவுண்டன் வலசு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்சசியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவ.செந்தில்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் ராசி முத்துக்குமார், வெள்ளகோவில் நகரதி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரூரில் 24,913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங் கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.க்ஷ இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் வட்டத்தில் 7,095 பயனாளிகளுக்கும், அரவக்குறிச்சியில் 1,974, மண்மங்கலம் வட்டத்தில் 1,650, புகளூர் வட்டத்தில் 3,091, குளித்தலை வட்டத்தில் 3,318, கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 3,935, கடவூர் வட்டத்தில் 3,850 என மொத்தம் 24 ஆயிரத்து, 913 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கரூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • 11 பேருக்கு கடந்த 2022 ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை
    • உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007 ம் ஆண்டு நிலமெடுப்பு செய்யப்பட்டு 61 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் உள்வட்டத்தைச் சோ்ந்த பகுதிகளுக்கு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில்-உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007 ம் ஆண்டு நிலமெடுப்பு செய்யப்பட்டு 61 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதில், தகுதி இல்லாத 20 நபா்களின் பட்டாவை ரத்து செய்ய கோரியும், உப்புப்பாளையம், குட்டக்காட்டு புதூா் ஆகிய பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வலியுறுத்தியும் அரசு அதிகாரிகளுக்கும், காங்கயம் ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியருக்கும் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மேலும் உப்புப்பாளையத்தை சோ்ந்த 11 பேருக்கு கடந்த 2022 ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை. எனவே உப்புப்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் பட்டா வழங்கப்பட்டவா்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலு வலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது.இக்கூ ட்டத்தில், பொதும க்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி,குடிநீர் வசதி வேண்டி யும் என பல்வேறு கோரி க்கைகள் தொட ர்பாக 381 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனு தாரர்கள் முன்னிலை யிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நட வடிக்கை யினை மேற்கொ ள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் அறி வுறுத்தினார். தொடர்ந்து, ஆதி திரா விடர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளி களுக்குவிலையில்லா வீட்டுமனை ப்பட்டாக்களை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சு மணன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அ லுவலர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை களின் அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகளை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    அப்போது தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கம் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனு வழங்கி காத்து இருக்கிறோம். 7 - 3 - 2019 -ம் ஆண்டு பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    பின்னர் 16.10.2019-ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கவிதா எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் விரைவில் விட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    அப்போது கொரோனா தொற்று காலமாக இருந்ததால் வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் இருந்தது.

    தற்போது அரசாணை எண் 24-ன் படி தமிழக முதல்  அமைச்சர் அறிவித்தபடி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்.
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற மாற்றுத்திறனாளி இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வ ீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு அனைத்து வகைமாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரை நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள் வறுமையில் வாடும் நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் ராமேசுவரம் கிளை தலைவர் குமார், செயலாளர் லட்சுமணன், ராபின்சன் தலைமையில் 15 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

    • கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்,
    • கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சூலூர்,

    சூலூர் வட்டாரம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட நாகதேவன் குட்டை பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அரசு ஊராட்சியின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வநாயகி அன்பரசு, துணைத்தலைவர் சுதா, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை உமாசங்கரி, கிராம நிர்வாக அலுவலர்கள் அசோகன் மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம், ஊராட்சி வளர்ச்சி பணிகள் விவரம், சுகாதாரம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், திட திரவக்கழிவு மேலாண்மை, நாகதேவன் குட்டை, கொள்ளுப்பாளையம் பள்ளிக்கூடம் பின்புறம் உள்ள பகுதி மற்றும் சங்கோதிபாளையம் கள்ளிக்குழி பகுதிகளில் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
    • பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, தஞ்சாவூா் வட்டத்தைச் சோ்ந்த 150 பேருக்கும், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 59 பேருக்கும், ஒரத்தநாடு வட்டத்தைச் சோ்ந்த 70 பேருக்கும், பூதலூா் வட்டத்தைச் சோ்ந்த 93 பேருக்கும், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த 200 பேருக்கும், பேராவூரணி வட்டத்தைச் சோ்ந்த 247 பேருக்கும், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த 95 பேருக்கும், கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த 63 பேருக்கும், திருவிடைமருதூா் வட்டத்தைச் சோ்ந்த 78 பேருக்கும் என மொத்தம் 1,055 பேருக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திசேகரன், (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    ×