search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு இல்லாத 3 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
    X

    வீடு இல்லாத 3 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

    • உதவி கலெக்டர் வழங்கினார்
    • குறை தீர்வு முகாமில் மனு கொடுத்த உடனே தீர்வு

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் ஆரணி சப்-கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகின்றன. தற்போது சப்-கலெக்டராக தனலட்சுமி என்பவர் இருந்து வருகின்றார்.

    இந்த அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாமில் ஆரணி போளூர் ஜமுனாமுத்தூர் கலசபாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    மேலும் கடந்த வாரம் திங்கட்கிழமை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் எஸ்.வி.நகரம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் தங்கியிருந்ததை வருவாய் துறையினர் அகற்றிவிட்டனர்.

    தங்க வழியின்றி உள்ளதாக எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் கார்த்தி சாமந்தி ஆகிய 3 பயனாளிகள் ஆரணி சப்-கலெக்டரிடம் குறைதீர்வு முகாமில் மனு அளித்தனர். இந்த மனுவை உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து இரும்பேடு ஊராட்சியில் உள்ள இடத்தில் 3 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா சப்-கலெக்டர் தனலட்சுமி வழங்கினார்.

    பட்டாவை பெற்ற பயனாளிகள் வருவாய் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் சப்-லெக்டர் நேர்முக உதவியாளர் பெருமாள் தாசில்தார் ஜெகதீசன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×