என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக அமைச்சரவை"
- முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
- பூண்டி கலைவாணன் எனது நண்பர்.
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது குறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், "எங்கள் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ணங்களை, எதிர்பார்ப்புகளை மிக சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் நல்ல அமைச்சர் என்ற பெயரை டி.ஆர்.பி.ராஜா எடுக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" என்றார்.
அவரிடம் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் இருப்பதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டி.ஆர்.பாலு கூறுகையில், "பூண்டி கலைவாணன் எனது நண்பர். எங்கள் மாவட்ட செயலாளர். டி.ஆர்.பி. ராஜா அமைச்சர் ஆவதற்கு அவரும் ஒரு காரணம்" என்றார்.
- தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
- தங்கம் தென்னரசுக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.
சென்னை :
புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார்.
அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார்.
இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
செய்தித்துறை அமைச்சராக இருந்த சாமிநாதன் வசம் கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தகவல், பட தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனி செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை விலக்கப்பட்டுள்ளது. அவருக்கு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜனிடம் இருந்து அந்த துறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு பால்வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் பால்வளத்துறை அமைச்சராக அழைக்கப்படுவார்.
இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
- கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றது.
அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் பொறுப்பில் உள்ளனர்.
கடந்த ஆண்டு 2 தடவை அமைச்சரவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்தார். முதல் மாற்றத்தின்போது ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.
2-வது முறை அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
மேலும் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இது தவிர வீட்டு வசதி துறையில் இருந்து சி.எம்.டி.ஏ. பிரிக்கப்பட்டு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கொடுக்கப்பட்டது.
தி.மு.க. அரசு 3-வது ஆண்டை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அதேசமயத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வு மான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.
இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு 10.23 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சரியாக 10.29 மணிக்கு தர்பார் மாளிகைக்கு கவர்னர் வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு இருந்தனர். 10.31 மணிக்கு டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரை தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து டி.ஆர்.பி. ராஜா எழுந்து பதவியேற்க தயாரானார். 10.34 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-
டி.ஆர்.பி.ராஜா எனும் நான் சட்டப்படி அமைக்கப் பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பிற்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறி பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டார்.
இதையடுத்து அவர் கவர்னரிடமும், முதலமைச்சரிடமும் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்துகளை வழங்கி வணக்கம் தெரிவித்தார்.
பதிலுக்கு கவர்னரும், முதலமைச்சரும் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்கள். அதன்பிறகு கவர்னர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்தபடி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
10.38 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இறுதியில் தேசியகீதம் பாடப்பட்டது. 8 நிமிடங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அதன்பிறகு முதலமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., மேயர் பிரியா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயசந்திரன், கார்த்திகேயன், கிருஷ்ணன், டி.ஜி.பி.சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். புதிய அமைச்சராக பதவி ஏற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரன் இலாகா மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றம் செய்யப்படும் என பேசப்படுகிறது.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாளை பதவியேற்க உள்ள நிலையில் மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது. அமைச்சரவை எண்ணிக்கையும் 34-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.
234 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது என்பதால் யாரையாவது நீக்கினால்தான் புதிய மந்திரியை நியமிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில்தான் ஆவடி நாசர் நீக்கப்பட்டு டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
டி.ஆர்.பி.ராஜா தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச்செயலாளராக இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்துறை இலாகா அல்லது பால்வளத்துறை இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இலாகா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பால்வளத்துறை அல்லது சுற்றுலாத்துறை இலாகா கிடைக்கும் என தெரிகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரன் இலாகா மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சர் பெரியசாமிக்கு வருவாய்த்துறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி மாற்றப்பட்டால் அவரிடம் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வழங்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றம் செய்யப்படும் என பேசப்படுகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமரசம் ஆகிவிட்டதால் அவரது இலாகாவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.
- அமைச்சர் துரைமுருகன், கவர்னரை சந்தித்து பேசப் போவதாக தகவல் வெளியானது.
- அமைச்சராக டிஆர்பி ராஜா 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்று மதியம் மூத்த அமைச்சரான துரைமுருகன், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இதுபற்றி பேசப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அமைச்சர் துரைமுருகன் மறுத்தார்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 11ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு இலாகா மாற்றம் குறித்த தகவல் வெளியாகும்.
- கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார்.
- முன்னதாக 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது கூட அமைச்சர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆட்சியின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் நாளை வரை தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் முதலில் இடம் பெற்றிருந்தன. ஆனால் மதுரை சிம்மக்கல் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் நேற்று பொதுக்கூட்டத்தில் பேச செல்லவில்லை.
அவருக்கு பதில் திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்.
இதனால் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவருக்குப் பதில் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் பேசியதாக வெளியான ஆடியோ அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து விளக்கம் அளித்து விட்டு வந்திருந்தார்.
இதன் பிறகு இப்போது கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பரபரப்பாக பேசப்படுவதால் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்தும் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவருகின்றன.
வருகிற புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைக்க கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்படலாம் என்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது கூட அமைச்சர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.
அந்த சமயத்தில் பட்டியலின அரசு அலுவலர் ஒருவரை சாதி பெயரை சொல்லி விமர்சித்ததாக எழுந்த புகாரில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டது.
அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, முத்துசாமி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், காந்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகிய 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டதே தவிர யாரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை.
ஆனால் இப்போது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் கட்சித் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லாத நிலையில் பால்வளத்துறை அமைச்சராக உள்ள ஆவடி நாசர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதில் 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அப்போது புதுமுகங்கள் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- டெல்டா பகுதி எம்.எல்.ஏ.க்களில் மேலும் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
- திருவிடைமருதூர் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் கோவி.செழியனை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியபடி உள்ளது.
அமைச்சரவை மாற்றத்தில் யார்-யாருக்கு வாய்ப்பு கிடைக்கும், யார்-யார் மாற்றப்படுவார்கள் என்றெல்லாம் உறுதி செய்யப்படாத தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் உலாவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் உறுதியாக நடைபெறும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாற்றத்தின்போது சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 3 அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகிய 3 பேரும் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த 3 பேருக்கு பதில் அமைச்சரவையில் 3 பேர் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். அவர்கள் 3 பேரும் புதுமுகங்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த 3 பேர் யார் என்பதில்தான் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சில இளைஞர்கள் முதல் தடவையாக எம்.எல்.ஏ.வாகி தகுதியும் திறமையுடனும் உள்ளனர்.
அவர்கள் பற்றிய தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கயல்விழிக்கு பதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே அதே இலாகாவை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்டகால எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார். அவர் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக கடந்த பல தடவை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமின்றி அவருக்கு சற்று வலுவான இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
டி.ஆர்.ராஜா போலவே சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எழிலனுக்கும் அமைச்சராக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை நாகநாதன் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர். பல புரட்சி திட்டங்களை வடிவமைத்து கொடுத்தவர்.
எனவே எழிலன் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான நல்ல எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொகுதி மேம்பாட்டு பணிகளில் எழிலன் சிறப்பான முறையில் செயல்படுவதால் அவரை அமைச்சராக்கும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருப்பதாக தி.மு.க. மூத்த தலைவர்களில் பலரும் உறுதிப்படுத்தினார்கள்.
டெல்டா பகுதி எம்.எல்.ஏ.க்களில் மேலும் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு திருவிடைமருதூர் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் கோவி.செழியனை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
கோவி.செழியன் தற்போது சட்டசபை தி.மு.க. கொறடாவாக உள்ளார். அவர் அமைச்சராகும் பட்சத்தில் தி.மு.க. கொறடா பதவி வேறு ஒருவருக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
சில அமைச்சர்கள் தங்களது இலாகாவை மாற்ற வேண்டும் என்று முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளன.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோரது இலாகாக்கள் மாற வாய்ப்புள்ளது. அதுபோல கல்வித்துறையை கவனிக்கும் பொன்முடி அல்லது அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரில் ஒருவரது இலாகா மாறும் என்று பேச்சு அடிப்படுகிறது.
சில அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களாகவும் இருக்கிறார்கள். செயல்பாடுகள் அடிப்படையில் அவர்களது அமைச்சர் பதவியும் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான 2 ஆடியோக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின. எனவே அமைச்சர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் நீக்கப்படலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. தற்போதைக்கு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்படக்கூடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனவே துணை முதலமைச்சர் பற்றி அமைச்சரவை மாற்றத்தின் போது எந்த தகவலும் இருக்காது என்று கூறப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
- நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, அதற்கேற்ப பணியாற்றும் வகையில், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
- வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு பயணம் செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக கொண்டு வந்த தனித்தீர்மானம், ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த 12 மணி நேர வேலை திருத்த சட்டம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை மே 2-ந்தேதி கூடுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வெளிநாடு பயணம் செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்.
- ஒவ்வொன்றுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதில் உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் வரிசையில் துரை முருகன், ஐ.பெரியசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார்.
அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரலை பட்டியலிட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் ஒவ்வொன்றுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதில் பல்வேறு தொழில் கொள்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிகிறது. தமிழக சட்டசபை அடுத்த வாரம் 9-ந்தேதி கூடும் நிலையில் அரசின் திட்டங்கள், புதிய கொள்கை முடிவுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள், அரசின் நிலைப்பாடுகள் சட்டசபையில் கவர்னர் உரையில் இடம்பெறும் என்பதால் இன்றைய அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும்.
- முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது. பேனா சின்னம் அமைக்கக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு அதற்கு 4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
- தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்