என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழக அமைச்சரவையில் கூடுதலாக பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும்- சீமான் கோரிக்கை
- பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும்.
- முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது. பேனா சின்னம் அமைக்கக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு அதற்கு 4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்