search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் கடத்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாடுகளில் இருந்து கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
    • தங்கம் கடத்தியது தொடர்பாக இந்திய பயணி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுடெல்லி :

    தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 4 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை பரிசோதனை செய்ததில் தங்கத்தை கட்டியாக வைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இப்படி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாகும். இது தொடர்பாக பாங்காங்கில் இருந்து திரும்பிய இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
    • இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவர் தான் கொண்டு வந்த டிராலி பேக்கில் பல்வேறு வடிவங்களில் மறைத்து முலாம் பூசி தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மொத்தம் 322 கிராம் எடைகொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 17 ஆயிரத்து 718 ஆகும்.

    இதேபோல் ஏர் இந்தியா விமானம் ஒன்று துபாயில் இருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது ஒரு பயணி கொண்டு வந்த உடமைகளுக்கு நடுவே கார் ஸ்பீக்கர், இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 857 கிராம் எடை உள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.51 லட்சத்து 84 ஆயிரத்து 850 ஆகும். 2 கடத்தல் சம்பவங்களிலும் தொடர்புடைய பயணிகளிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • தங்கத்தை குடுவைக்குள் மறைத்து கடத்தியது தெரிய வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

    இவற்றை சுங்க இலாகாவினர் தடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்த கைதபரம்பில் சுஹைப் என்ற பயணி மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அவர் வைத்திருந்த லுங்கிகள் சந்தேகப்படும்படி இருந்தன. அவற்றை ரசாயன சோதனைக்குட்படுத்திய போது அந்த லுங்கிகள் தங்கத்தில் தோய்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 10 லுங்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.

    தங்கத்தை முழுமையாக பிரித்து எடுத்த பிறகுதான் லுங்கியில் எவ்வளவு தங்கம் கொண்டு வரப்பட்டது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் சுமார் ஒரு கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கலாம் என தெரிகிறது.

    இதற்கிடையே மற்றொரு பயணி சுமார் 2,201.6 கிராம் எடை உள்ள தங்கத்தை குடுவைக்குள் மறைத்து கடத்தியது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்தும் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகின்றனர்.
    • சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது . இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகின்றனர்.

    இதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய வருவாய் நுண்ணறிவு அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கம் கடத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் தங்கத்தின் தேவை ஏற்பட்டுள்ள காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் தங்க நகைகளை வாங்குவதிலும் நகை கடைகளை அதிக அளவில் பொதுமக்கள் நாடிவந்தனர்.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவில் 995 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 67.42 லட்சம் என தெரிய வருகிறது.

    இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது இவரை அழைத்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் நகை வடிவில் மறைத்து எடுத்து வந்த 94 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூபாய் 47.75 லட்சம் ஆகும். இதையடுத்து அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூபாய்1.08 கோடி மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் வரி ஏய்ப்புக்காக தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் சுங்கா இலாகாவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (வயது 42) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சல்லடை போட்டு சோதித்தனர். இதில் கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 930 மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள்.
    • ஒட்டுமொத்தமாக 3 கிலோ 200 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு அருகே தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது எந்த பயணிகளிடமும் தங்கம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் மாலத்தீவில் இருந்து வந்த ஒரு விமானத்தின் கழிவறையில் தங்கம் கிடப்பதை ஊழியர்கள் பார்த்தனர்.

    இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அங்கு சென்று கழிவறையில் கிடந்த தங்கத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஒட்டு மொத்தமாக 3 கிலோ 200 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    அவற்றின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்து கழிவறையிலேயே மர்மநபர்கள் விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் தங்கத்தை மறைத்து கடத்தி எடுத்து வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரையில் சுமார் 100 கிலோ அளவுக்கு கடத்தல் தங்கம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை ஐகோர்ட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரில் கடத்தப்பட்ட 11 கிலோ தங்கம் மற்றும் ரூ.2லட்சத்து 30 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செயப்பட்டன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டை பகுதியில் நகை பட்டறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அட்டை பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ கிலோ தங்க கட்டிகள் பிடிபட்டன.

    திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அன்று சென்னை விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் மலேசிய பயணிகளிடம் இருந்து 3 கிலோ தங்கம் பிடிப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.73 கோடியாகும்.

    இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதன்படி இந்த ஆண்டு இதுவரையில் 100 கிலோ சென்னையில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

    விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர்.

    அதில் 1.4 கிலோ எடையுள்ள கால் கொலுசுகள், செயின்கள், மோதிரம், வளையல் உள்ளிட்ட வெளிநாட்டு தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஜயவாடா வருவதற்கு முன்பு கோவாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து தங்க நகைகளை கடத்தி வந்ததக தெரிவித்தனர்.

    • தங்கத்தை கடத்திச் செல்வதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவில் இருந்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் படோகி மாவட்டத்தில் கடத்தல்காரர்கள் சிலர் பெருமளவிலான தங்கத்தை கடத்திச் செல்வதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவில் இருந்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாருடன், வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதையடுத்து உஷாரான கடத்தல்காரர்கள், ராஜ்புரா என்ற இடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். மோரா நதியையொட்டிய காட்டுக்குள் அவர்கள் புகுந்து விட்டனர்.

    இந்த நிலையில் கடத்தல்காரர்களின் வாகனத்தில் இருந்து ரூ.8.45 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். காட்டுக்குள் புகுந்த கடத்தல்காரர்களில் 2 பேரை போலீஸ், வருவாய் நுண்ணறிவுப் பிரிவு கூட்டுப் படையினர் நேற்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் இருவரும் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வங்காளதேசத்தில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு தங்கத்தை கடத்திச் செல்லும்போது பிடிபட்டுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு ரெயிலில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கசிந்தது. அதையடுத்து நேற்று அங்கு சோதனை மேற்கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படையினரும், வருவாய் நுண்ணறிவுப் பிரிவினரும் 2 பேரை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்த சுமார் 9 கிலோ தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர்.

    அதன் மதிப்பு ரூ.5 கோடியே 40 லட்சம் என போலீசார் கூறினர்.

    • வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது.

    இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.

    நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    • கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக அரபு நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கண்ணூர் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், தனியாக அழைத்துச் சென்று உடமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் தாள் பெட்டிக்குள் ஓட்டி வைத்து 973.5 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.56 லட்சத்து 32 ஆயிரம் ஆகும்.

    அதனை மீட்ட போலீசார், தம்ஜித்தையும் கைது செய்தனர். அவர் அபுதாபியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இதே விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து மட்டனூரைச் சேர்ந்த முசாபிர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ..49½ லட்சம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொச்சி நெடும்பசேரி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அடிக்கடி கைப்பற்றி தங்கம் கடத்துவோரை கைது செய்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் கொச்சி நெடும்பசேரி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது கனரக உடமைகள் இல்லாத 2 பெண்கள், கிரீன் சேனல் வழியாக வேகமாக செல்ல முயன்றனர்.

    அவர்களை சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். ஆனால் 2 பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்த பெண் ஆயிரத்து 266 கிராம் எடை உள்ள 4 தங்க கேப்சூல்களை துபாயில் இருந்து கடத்தி வந்துள்ளார். அவரை கைது செய்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மலப்புரத்தை சேர்ந்த உமைபா என்ற பெண், தனது உள்ளாடையில் (காமிசோல்) உள்ள அடுக்குகளுக்கு இடையே 763 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் வைத்து தைத்து கடத்தி வந்துள்ளார். அதனையும் சுங்க இலாகாவினர் கைப்பற்றினர். தொடர்ந்து உமைபா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 80 கிராம் தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×