search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா விமான நிலையம்"

    • கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

    விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர்.

    அதில் 1.4 கிலோ எடையுள்ள கால் கொலுசுகள், செயின்கள், மோதிரம், வளையல் உள்ளிட்ட வெளிநாட்டு தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஜயவாடா வருவதற்கு முன்பு கோவாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து தங்க நகைகளை கடத்தி வந்ததக தெரிவித்தனர்.

    ×