என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தங்கம் கடத்தல்"
- துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
- சுமார் ரூ.85 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஆண் ஊழியர், தனது இரவு பணியை முடித்துவிட்டு நேற்று விமான நிலைய ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக வந்து கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர் அணிந்திருந்த ஷூவை கழற்றும்படி பாதுகாப்புப் படை வீரர்கள் கூறினர். அவர் ஷூவை கழற்ற மறுத்ததால் சந்தேகம் அடைந்த வீரர்கள் அவரை தனி அறைக்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் காலில் அணிந்திருந்த சாக்சுக்குள் 3 சிறிய பார்சல்கள் இருந்தன. அவைகளைப் பிரித்துப் பார்த்தபோது தங்கம்இருந்தது தெரியவந்தது. சுமார் 1.281 கிலோ எடையுடைய தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒப்பந்த ஊழியரையும், தங்கத்தையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Always alert & vigil to protect & secure!#CISF nabbed a housekeeping staff along with 1.281 kg gold (worth approximately Rs 85 lakh) concealed inside his socks @ Chennai Airport. The staff was handed over to Customs.#CISFTHEHONESTFORCE@HMOIndia @MoCA_GoI @JM_Scindia pic.twitter.com/pUPE5yHrdp
— CISF (@CISFHQrs) March 15, 2024
- சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
- சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கொண்டு வந்த செல்போன்களுக்கான சார்ஜிங் பிளக்குகளில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பிளக்குகளில் இருந்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 500 மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப காலமாக மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அரங்கேறி வருகிறது.
- ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1199 கிராம்.
கே.கே. நகர்:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏற்றப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பேட்டிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணம் செய்த பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி விமான நிலைய மத்தியவான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் தங்கள் கொண்டு வந்த லக்கேஜ் அட்டைப்பெட்டியில் தலா 40 கிராம் எடையுள்ள 30 தங்க நாணயங்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து தங்க நாணயங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1199 கிராம்.
அதன் இந்திய ரூபாயின் மதிப்பு 76 லட்சம் என தெரிய வருகிறது.
- விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் விமான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தனர்.
- வாலிபர் மீது கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு:
துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் விமான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது குடகு பகுதியை சேர்ந்த 24 வயது பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனர்,
அவரது பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த கருப்பு நிற ஜீன்ஸ் பேண்டை ஆய்வு செய்ததில் இடுப்புப் பகுதியில் தங்கத்தை பேஸ்டாக உருவாக்கி அதன் மேல் ஜீன்ஸ் துணியை வைத்து தைத்து கடத்தி கொண்டு வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேசில் சோதனை செய்யப்பட்டது. அதில் இருந்த உள்ளாடைகளில் இதுபோல் தங்கத்தை பேஸ்டாக மாற்றி ஒட்டி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 55 லட்சம் மதிப்புள்ள 907 கிராம் தங்க பேஸ்டை கைப்பற்றிய போலீசார் அவர் மீது கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள அண்டை நாடான இலங்கைக்கு இங்கிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து வரி ஏய்ப்பு செய்து தமிழகத்திற்கு தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கடத்தலும் வழக்கமான ஒன்றாகி விட்டது.
இதனை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படை, கடற்படை போலீசார், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகுகள், சுங்கத்துறை உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தபோதிலும் அதனையும் மீறி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் இரண்டு முறை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலும், அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல் கும்பல் தங்க கட்டிகளை கடலில் வீசி எறிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் ரவி அற்புதராஜ் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று நள்ளிரவில் பாம்பன் முந்தல்முனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவர்களை வருவதை பார்த்ததும் அந்த படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
இதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த தங்கத்தை கைப்பற்றியதோடு, தங்கம் கடத்தி வந்த நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து பாம்பன் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
தங்கம் கடத்தி வந்த மர்மநபர்கள் யார், எங்கு தங்கியிருக்கிறார்கள், யாருக்காக இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
60 பேர் கொண்ட படையினர் 4 குழுக்களாக பிரிந்து 180 கிலோ மீட்டர் கடல் பரப்பில் நேற்று சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில் மறுநாளான இன்று இலங்கையில் இருந்து துணிச்சலாக தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது கடலோர காவல் படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
- மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் கடத்தல் கும்பல் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் ஊழியர்கள் சிலரது உதவியுடன் தங்கத்தை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு செல்வது தெரிந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் இருந்து சென்னை விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது விமான நிலையத்தில் ஓப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வரும் பல்லாவரம், குரோம்பேட்டையை சேர்ந்த சினேகா, சங்கீதா ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பணிமுடிந்து வீட்டுக்கு சென்ற பெண் ஊழியர்களை பின் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் பெண் ஊழியர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சினேகா, சங்கீதா ஆகியோரது வீடுகளில் கழிவறை மற்றும், பீரோக்களில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர். மொத்தம் 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவர்கள், விமானங்களில் தங்கம் கடத்தி வரும் கும்பலிடம் தங்கத்தை ரகசியமாக வாங்கி, தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, சுங்க அதிகாரிகளின் சோதனை இல்லாமல், வீடுகளுக்கு கொண்டு வந்து உள்ளனர். பின்னர் கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகள் பெண் ஊழியர்களின் வீட்டுக்கு வந்து கடத்தல் தங்கத்தை வாங்கிச் செல்வது விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் படி நேற்று அதிகாலை மண்ணடியில் தங்கம் கடத்தலில் குருவியாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹர்ஷத் என்பவர் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்திய போது 1½ கிலோ தங்கம், ரூ. 45 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் என்வரது வீட்டில் தங்கியிருந்தது தெரிந்தது. மேலும் கலையரசன் தங்கம் கடத்தும் ஆசாமிகளை பெண் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 2 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரையும் மத்திய வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கே.கே.நகர்:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த சுங்கத்துறை டிரைவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தங்கம் கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் புருனே நாட்டில் பணியாற்றி வந்த மீமிசல் பகுதியைச் சேர்ந்த முஸ்தமி (வயது22), அதே பகுதியைச் அசாருதீன்( 24) ஆகிய 2 பேர் மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்தனர்.
அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தார்கள்.
அப்போது முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் தனது உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.84.02 லட்சம் ஆகும்.
- அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது
- விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்த மொய்தீன் என்பவரது நடத்தை சந்தேகப்படும் வகையில் இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், கார்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சுருள் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. ரூ.18.79 லட்சம் மதிப்பிலான 352.40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- வெளிநாடுகளில் இருந்து கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
- தங்கம் கடத்தியது தொடர்பாக இந்திய பயணி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி :
தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 4 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை பரிசோதனை செய்ததில் தங்கத்தை கட்டியாக வைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாகும். இது தொடர்பாக பாங்காங்கில் இருந்து திரும்பிய இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
- இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா துறையினர் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவர் தான் கொண்டு வந்த டிராலி பேக்கில் பல்வேறு வடிவங்களில் மறைத்து முலாம் பூசி தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மொத்தம் 322 கிராம் எடைகொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 17 ஆயிரத்து 718 ஆகும்.
இதேபோல் ஏர் இந்தியா விமானம் ஒன்று துபாயில் இருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது ஒரு பயணி கொண்டு வந்த உடமைகளுக்கு நடுவே கார் ஸ்பீக்கர், இரும்பு ராடுகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 857 கிராம் எடை உள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.51 லட்சத்து 84 ஆயிரத்து 850 ஆகும். 2 கடத்தல் சம்பவங்களிலும் தொடர்புடைய பயணிகளிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- தங்கத்தை குடுவைக்குள் மறைத்து கடத்தியது தெரிய வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றை சுங்க இலாகாவினர் தடுத்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்க இலாகாவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்த கைதபரம்பில் சுஹைப் என்ற பயணி மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த லுங்கிகள் சந்தேகப்படும்படி இருந்தன. அவற்றை ரசாயன சோதனைக்குட்படுத்திய போது அந்த லுங்கிகள் தங்கத்தில் தோய்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 10 லுங்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.
தங்கத்தை முழுமையாக பிரித்து எடுத்த பிறகுதான் லுங்கியில் எவ்வளவு தங்கம் கொண்டு வரப்பட்டது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் சுமார் ஒரு கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி இருக்கலாம் என தெரிகிறது.
இதற்கிடையே மற்றொரு பயணி சுமார் 2,201.6 கிராம் எடை உள்ள தங்கத்தை குடுவைக்குள் மறைத்து கடத்தியது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்தும் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்