என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய வருவாய் புலனாய்வு"
- திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை:
வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் தங்கத்தை மறைத்து கடத்தி எடுத்து வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரையில் சுமார் 100 கிலோ அளவுக்கு கடத்தல் தங்கம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை ஐகோர்ட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரில் கடத்தப்பட்ட 11 கிலோ தங்கம் மற்றும் ரூ.2லட்சத்து 30 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செயப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டை பகுதியில் நகை பட்டறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அட்டை பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ கிலோ தங்க கட்டிகள் பிடிபட்டன.
திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அன்று சென்னை விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் மலேசிய பயணிகளிடம் இருந்து 3 கிலோ தங்கம் பிடிப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.73 கோடியாகும்.
இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்படி இந்த ஆண்டு இதுவரையில் 100 கிலோ சென்னையில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்