search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#ஜெயில்"

    • கடந்த ஜூலை மாதம் சுங்கான்கடை பகுதியில் கொலை
    • குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை

    நாகர்கோவில்:

    களியக்காவிளை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ரீகன் (வயது 35). பிரபல ரவுடி. இவர் கடந்த ஜூலை மாதம் சுங்கான்கடை பகுதியில் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரீகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து குருந்தன்கோடு முக்கலாம்பாட்டைச் சேர்ந்த அசோக் (25), அஜின் ஜோஸ் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான அஜின் ஜோஸ் மீது ஏற்கனவே இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்தது. இதையடுத்து போலீசார் அஜின் ஜோஸ், அசோக் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அஜின்ஜோஸ், அசோக் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.ஏற்கனவே குமரி மாவட் டத்தில் குட்கா, கஞ்சா வழக்குகள் மற்றும் தொடர்ந்து குற்றச் செயல்கள் ஈடுபடுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

    • சென்னையில் இருந்து வாங்கி வந்து சப்ளை செய்தது அம்பலம்
    • கைது செய்யப்பட்ட 5 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்க போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை யிலான போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்படும் கஞ்சாக்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சிக்கியது.

    மேலும் மாவட்டம் முழு வதும் கஞ்சா விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோட்டார் போலீசார் ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தே கப்படும்படியாக நின்ற 5 பேரை பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் கள் இடலாக்குடியைச் சேர்ந்த இர்பான் (வயது 20), சாபிக் (21), ஆஸ்லாம் (25), முகமது முசரப் (20) வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த விமல் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 800 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது கஞ்சாவை சென்னையிலிருந்து வாங்கி வந்து குமரி மாவட்டத்தில் சிறு சிறு பொட்டலங்களாக சப்ளை செய்வதாக கூறினார்கள்.

    கைது செய்யப்பட்ட 5 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • அவர் நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • அமெரிக்காவிடம் குடியேற நிரந்தரமாக குடியுரிமை பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்காக விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

    இதனால் ஓட்டல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். மேலும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதிகாரமிக்க பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே ஒரு அறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார். ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் உள்ளது போல் இருப்பதாக அவர் உணர்கிறார். அவர் நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கி இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் கோத்தபய ராஜபக்சே அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    முன்பு அவர் ஆகஸ்டு 24-ந்தேதி (நாளை) நாடு திரும்ப உள்ளதாக கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவிடம் குடியேற நிரந்தரமாக குடியுரிமை பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவுக்கு வந்தால், அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்குமூலம் கைது செய்யப்படலாம் என்று புலப்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, 2019-ம் ஆண்டு கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக லிபோர்னியா நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்து இருந்தேன். நான் இலங்கையில் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக இந்த வழக்கை தாக்கல் செய்தேன். கோத்தபய ராஜபக்சே மீண்டும் அமெரிக்கா திரும்பினால் வழக்கு தொடர்பான செயற்பாடுகள் தொடங்கும் என்றார்.

    • சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்தனர்.
    • இதனையடுத்து மேச்சேரி போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 10 மணிக்கு மர்மநபர் ஒருவர் போனில் பேசினார். அப்போது அவர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனையடுத்து எச்சரிக்கையான காவல்துறையினர், சேலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மேட்டூர் சென்று, அணையின் மதகு, வலதுகரை, இடதுகரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 57) என்பவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து மேச்சேரி போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், மகாலிங்கத்தை ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து, மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • மதுரை மத்திய ஜெயிலில் இட பற்றாக்குறை காரணமாக கைதிகள் தங்குவதில் சிரமமாக உள்ளது.
    • இடையப்பட்டிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்பட 9 நகரங்களில் மத்திய ஜெயில்கள் உள்ளன. இவற்றில் மதுரை மத்திய ஜெயில் குறிப்பிடத்தக்க ஒன்று. இது 31 ஏக்கர் பரப்பளவு உடையது. மதுரை கரிமேடு பகுதியில் கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 157 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலையில் தென்மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.

    இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சிறைச்சாலைகள் உள்ளன. தடுப்புக் காவல், விசாரணை, தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் தினந்தோறும் 30 முதல் 50 கைதிகள் புதிதாக அடைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வெளியே செல்வோரின் தினசரி எண்ணிக்கை 5-க்கும் கீழ் என்ற நிலையில் தான் உள்ளது.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிகபட்சமாக 1,252 பேரை அடைத்து வைக்க முடியும். ஆனால் இங்கு தற்போது 2000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். எனவே மதுரை மத்திய ஜெயிலில் இடபற்றாக்குறை நிலவி வருகிறது. ஒரே அறையில் அதிகமானவர்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக தொற்று நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிறிய வகை நோய்கள் மற்றும் காயங்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அதுவும் தவிர இங்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது.எனவே கடுமையான நோயால் பாதிக்கப்படும் கைதிகளில் பெரும்பாலானோருக்கு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மதுரை மத்திய ஜெயில் டி.ஐ.ஜி.யாக பழனி, போலீஸ் சூப்பிரண்டாக வசந்த கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய ஜெயில் இடப்பற்றாக்குறை தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது;-

    மதுரை மத்திய ஜெயிலில் இடப்பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அதே வேளையில் கைதிகளை ஒழுங்குபடுத்தி அவர்களின் தூங்குமிடம் உள்பட அடிப்படை வசதிகளை குறைவின்றி செய்து வருகிறோம். இங்குள்ள ஆஸ்பத்திரியில் மருந்து மாத்திரைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. ஊழியர்கள் தேவைக்கேற்ப உள்ளனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளின் உடல் நலன் மட்டு மின்றி மனநலமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்கும் வகையில், தொழில் பயிற்சிகள் தரப்படுகின்றன. மதுரை மத்திய ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.

    ஏனென்றால் மதுரை மாவட்டத்தை பொருத்தவரை சிறிய வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுவோருக்கு, ஒரு வாரத்தில் ஜாமீன் கிடைத்து விடும். ஆனால் மதுரையை பொருத்தவரை கஞ்சா போன்ற குற்ற வழக்குகளின் ஈடுபடுபவரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவும் தவிர ஒரு சில கைதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். அடுத்தபடியாக கூலிப்படை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் பெயில் கிடைப்பது இல்லை. இதன் காரணமாக மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மதுரை புதிய மத்திய ஜெயில் கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், அங்கு கட்டுமான பணிகள் மிக விரைவில் தொடங்கும். இடையப்பட்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜெயில் அமைய உள்ளதால், அங்கு புழல் ஜெயிலுக்கு இணையாக பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்து வைக்க முடியும்" என்று தெரிவித்து உள்ளனர்.

    • தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வசந்த பாலன்.
    • இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜெயில்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது, "தமிழ் சினிமா ஒரே ஒரு விஷயத்தில் தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாததுதான். தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம்.

    மலையாள திரை உலகில் கதாசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவு செய்த பின்பு தான், மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை தேடி செல்கிறார்கள். அதுபோல இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும்.


    வசந்த பாலன்

    எப்போது சினிமாவிற்கான புரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் உருவாக்கப்படுகிறார்களோ, அப்பொழுது வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறும். ரசிகர்களால் கொண்டாடப்படும்.

    நான் ஒரு தயாரிப்பாளராக, கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள்" என்று கூறினார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகையும் கொள்ளையடிக்கப்பட்டது
    • இதுவரை குண்டச்சத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 50 ஆனது.

    நாகர்கோவில் :

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ரோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48).

    இவரது தாயார் தெரசம்மாள். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக கடியபட்டணத்தைச் சேர்ந்த அமல சுமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமல சுமன் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அமல சுமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

    கலெக்டர் உத்தரவை தொடர்ந்து அமல சுமன்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட அமல சுமனை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குண்டச்சத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 50 ஆனது.

    • திருட்டை தடுக்க போலீசார் புது வியூகம்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசருக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்டி-விசனுக்கு உட்பட்ட 400 போலீசார் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தொடங்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன் குமார், ராஜா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், வடம் இழுத்தல், பேட்மிண்டன், கிரிக்கெட் உட்பட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியை தொடங்கி வைத்து மாவட்ட போலீஞஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட போலீசாரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கடந்த 2 நாட்களாக மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இன்று தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் ஊர்க்காவல் படையினர், போலீசார் கலந்து கொண்டு உள்ளனர், 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் வெற்றி பெறுவதற்கான இறுதி போட்டிகள் வருகிற 9-ந் தேதி நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அன்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஜெயிலிலிருந்து வெளியே வரும் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு குற்றவாளிகள் யாராவது வெளியே வந்து உள்ளார்களா? என்பது குறித்த விவரங்களை சேகரித்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளில் சி.சி.டி.வி. காமிராவை கண்டிப்பாக பொருத்த வேண்டும் இதன் மூலமாக குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் நாகர்கோவில் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    வருகிற 6 மாத காலத்திற்குள் ஒவ்வொரு சப் -டிவிசனிலும் தலா 200 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபி ஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் தென் மண்டலத்தைச் சேர்ந்த போலீசார் ஏராளமானோர் வருகை தர உள்ளனர்.

    3 எஸ்.பி.க்கள் 4 ஏ.எஸ்.பி.க்கள் 20 டி.எஸ்.பி.க்கள் 57 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர் காவல் படையினர் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்,

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவிலுக்குள் கம்புகள் மூலமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கூட்டம் குறைந்த பிறகே அந்த இடத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மருத்துவ வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்
    • கோவை உப்பிலி பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரவு பகலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்(வயது72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் கோவை மத்திய ஜெயியில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் கைதான–வர்களை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

    தொடர்ந்து அவர்களிடம் கோவை உப்பிலி பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரவு பகலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் போலீசார் ஆஸ்பத்திரி விவகாரம் தொடர்பாக கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

    அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் போலீசார் மேலும் சிலரிடம் விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களிடம் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 5 பேரையும் மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

    • வேலூர் ஜெயிலில் கைதிகள் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகள் கஞ்சா செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர்.

    சிறைக்காவலர்கள் சோதனையில் கைதிகளின் கழிவறைகள் மற்றும் பூங்கா பகுதியில் மறைத்து வைக்கப்படும் கஞ்சா செல்போன் பறிமுதல் செய்யபடுகிறது.

    இந்த நிலையில் ஜெயிலில் தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தி வருவது தெரியவந்தது. நேற்று கைதிகள் அறையில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பேட்டரி ஆகியவற்றை ஜெயில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    வேலூர் ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனையும் மீறி கஞ்சா செல்போன் ஆகியவை எப்படி வந்தது என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    சிறையில் காவலர்கள் உதவி இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே வர முடியாது என்பதால் இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது வேலூர் ஜெயிலில் பணியாற்றிவரும் முதன்மை ஏட்டு விஜயகுமார் என்பவர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஏட்டு விஜயகுமாரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு உத்தரவிட்டார். ஏட்டு விஜயகுமார் இதுவரை எவ்வளவு கஞ்சா சப்ளை செய்துள்ளார்.செல்போன் சப்ளை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×