search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடி கொலை வழக்கில் கைதான 2 பேர்  குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு
    X

    ரவுடி கொலை வழக்கில் கைதான 2 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு

    • கடந்த ஜூலை மாதம் சுங்கான்கடை பகுதியில் கொலை
    • குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை

    நாகர்கோவில்:

    களியக்காவிளை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ரீகன் (வயது 35). பிரபல ரவுடி. இவர் கடந்த ஜூலை மாதம் சுங்கான்கடை பகுதியில் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரீகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து குருந்தன்கோடு முக்கலாம்பாட்டைச் சேர்ந்த அசோக் (25), அஜின் ஜோஸ் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைதான அஜின் ஜோஸ் மீது ஏற்கனவே இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்தது. இதையடுத்து போலீசார் அஜின் ஜோஸ், அசோக் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அஜின்ஜோஸ், அசோக் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.ஏற்கனவே குமரி மாவட் டத்தில் குட்கா, கஞ்சா வழக்குகள் மற்றும் தொடர்ந்து குற்றச் செயல்கள் ஈடுபடுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×