search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளா ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர்கள் விவரங்கள் சேகரிப்பு
    X

    கேரளா ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர்கள் விவரங்கள் சேகரிப்பு

    • திருட்டை தடுக்க போலீசார் புது வியூகம்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசருக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்டி-விசனுக்கு உட்பட்ட 400 போலீசார் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தொடங்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன் குமார், ராஜா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், வடம் இழுத்தல், பேட்மிண்டன், கிரிக்கெட் உட்பட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியை தொடங்கி வைத்து மாவட்ட போலீஞஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட போலீசாரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கடந்த 2 நாட்களாக மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இன்று தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் ஊர்க்காவல் படையினர், போலீசார் கலந்து கொண்டு உள்ளனர், 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் வெற்றி பெறுவதற்கான இறுதி போட்டிகள் வருகிற 9-ந் தேதி நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அன்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஜெயிலிலிருந்து வெளியே வரும் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு குற்றவாளிகள் யாராவது வெளியே வந்து உள்ளார்களா? என்பது குறித்த விவரங்களை சேகரித்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளில் சி.சி.டி.வி. காமிராவை கண்டிப்பாக பொருத்த வேண்டும் இதன் மூலமாக குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் நாகர்கோவில் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    வருகிற 6 மாத காலத்திற்குள் ஒவ்வொரு சப் -டிவிசனிலும் தலா 200 காமிராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபி ஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் தென் மண்டலத்தைச் சேர்ந்த போலீசார் ஏராளமானோர் வருகை தர உள்ளனர்.

    3 எஸ்.பி.க்கள் 4 ஏ.எஸ்.பி.க்கள் 20 டி.எஸ்.பி.க்கள் 57 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர் காவல் படையினர் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்,

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவிலுக்குள் கம்புகள் மூலமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கூட்டம் குறைந்த பிறகே அந்த இடத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மருத்துவ வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளது தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×