search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சுவர்"

    • கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு
    • உச்சினி மாகாளி அம்மன் கோவில் ஆதிதிராவிட சமுதாயத்துக்குரியது

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வந்து கலெக்டர் அரவிந்திடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு குமாரபுரம் பகுதியில் ஆதிதிராவிட சமுதாயத்துக்குரிய உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, சுற்றுச்சுவரும் கட் டப்பட்டது. இந்த நிலையில் தனிநபர் ஒருவர் சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை என்றும் அதை அடைத்து விட்டதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து கோவிலின் சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறி அவ்விடத்தை சம்பந் தப்பட்ட துறை அலுவலர்கள் போலீசார் துணையுடன் இடிக்க முற்பட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சுற்றுச்சுவரை இடிக்க கூடாது என தெரி வித்தார்கள். இதுபற்றி என்னிடமும் முறையிட்டனர்.எனவே கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்படாமல் மக்களின் விருப்பம் போல் அந்த பகுதியில் ரோலிங் கேட் அமைக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அப்போது அவருடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட்டாட்சியர், போலீஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    • சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர்.

    எனவே அந்த சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    அத்துடன் இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
    • புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். கட்டட வசதி இல்லாத நிலையில் கொழுமம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வந்தது.

    இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு கலைக்கல்லூரி எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு வகுப்பறைகள், ஆய்வகம் ,தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் விஷமிகள் சிலர் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்கின்றனர். பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்பவும் பாதுகாவலரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளி, திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    புதிய வகுப்பறை கட்டடங்கள் வேண்டுமென்று பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். புதிய கட்டங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    மேலும், பரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதையும் விரைந்து நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், விசிக ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.
    • மாணவர்களின் கவனத்தையும் திசை திருப்பும் வகையில் இது உள்ளது.

    குனியமுத்தூர்

    கோவை சுந்தராபுரம் சாரதாமில் ரோட்டில் செங்கோட்டையன் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளி சுவர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்ட–ப்பட்டு, பள்ளிக்கூடமா? இல்லை சாதாரண கட்டிடமா? என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான அரசியல் கட்சி சுவரொட்டிகள், சினிமா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    சமீபத்தில் கோவை கலெக்டர் சுவர்களில் சுவரொட்டி ஒட்டக்கூடாது என்று தெரிவித்து இருந்தார். அதன்படி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவ–டிக்கையும் எடுக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அந்த விதிமுறைகள் இருக்கிறதா? இல்லையா என்பது தெரியவில்லை. ஏனென்றால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சுவரொட்டியாகவே காணப்படுகிறது.

    பாலத்தின் தூண்கள், சுவர்கள் என எல்லா இடங்களிலும் சுவரொட்டி ஒட்டி மாநகரின் அழகை குறைத்து வருகின்றனர். தூண்கள், சுவர்களில் ஒட்டியவர்கள் தற்போது பள்ளிக்கூட சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

    பள்ளிக்குள் கல்வி பயில நுழையும் மாணவர்கள், இத்தகைய சுவரொட்டிகளை காணும்போது அவர்களின் கவனம் படிப்பில் இருந்து சிதறகூடிய நிலை காணப்படுகிறது.

    பாலக்காடு ரோடு குனியமுத்தூர் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியின் சுற்று சுவரில் வர்ணம் தீட்டப்பட்டு திருக்குறள் எழுதப்பட்டு இருக்கிறது. அதை பார்த்துக் கொண்டு உள்ளே செல்லும் மாணவனுக்கு மனநிலை கல்வி பயில ஏற்றதாக அமைந்திருக்கும்.

    ஆனால் கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவரில் சுவரொட்டிகளை ஒட்டி பள்ளி சுவற்றின் அழகை குலைப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் கவன–த்தையும் திசைதிருப்பும் வகையில் இது உள்ளது.

    எனவே கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இணைந்து, பள்ளி சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து நிறுத்தி, ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குனியமுத்தூர் பள்ளியை போன்று அனைத்து பள்ளிகளும் தங்கள் சுற்றுச்சுவரில் திருக்குள் உள்ளிட்டவற்றை எழுதினால் மாணவர்களின் கல்விநிலை இன்னும் மேம்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ எதிரே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • மேலும் இப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ எதிரே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மேட்டுப்பாளையம், சிக்கதாசம்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் விளையாட்டு மைதானமும் உள்ளது. ஆனால் அந்த மைதானம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.

    மேலும் பள்ளியில் மாணவர்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உணவு இடைவெளி நேரத்திலும், மற்ற நேரங்களிலும் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் இப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதுமட்டுமல்லாமல் சுமார் 6 ஏக்கர் பரபப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பான முறையில் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் பள்ளியின் வளாகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி நிர்வாக அதிகாரிகள் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகையில், இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டன.

    சுற்றுச்சுவர்கள் 5-க்கு மேற்பட்ட இடங்களில் இடிந்த நிலையில் உள்ளது. இதனால் விடுமுறை தினங்களில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் சமுக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

    • குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் அதனை உயர்த்தி கட்டி, மாணவியரின் சங்கடத்தை போக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நகர மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுப்பணித்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினார்.

    இதற்கு நாமக்கல் செயற்பொறியாளர் அருள் பதில் அனுப்பிய கடிதத்தில், இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் பணி செயலாக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது பற்றி சித்ரா கூறுகையில், மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து என்னை நிதி பெற்று தர சொல்வது, பொதுநல ஆர்வலர்களை இழிவு படுத்துவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அங்காடி முதல் 8ம் வகுப்பு வரை அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • மேல்நிலைத் தொட்டியை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரன் மூலம் இடித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு குப்பாண்டம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது .இங்கு அங்காடி முதல் 8ம் வகுப்பு வரை அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள்.இந்த நிலையில் 7மாதங்களுக்கு முன் பள்ளியின் அருகே பயன்படாமல் இருந்த மேல்நிலைத் தொட்டியை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரன் மூலம் இடித்துள்ளனர்.அப்பொழுது பள்ளியின் சுவர் மீது விழுந்து சுவர் முழுவதும் சேதமடைந்தது.

    மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி சுவரை கட்டித் தருவதாக உறுதியளித்தார்கள். ஆனால் இதுவரைக்கும் சுவர் கட்டித்தரவில்லை.தற்பொழுது பள்ளி சுவர் உடைக்கப்பட்டு இருப்பதால் அதனை பயன்படுத்தி பலரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உள்ளே உடைத்துவிட்டு செல்கின்றார்கள்.இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.மேலும் இதுகுறித்து பள்ளி சார்பாகவும் மாவட்ட நிர்வாகித்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் தற்பொழுது பள்ளி தொடங்கப்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டும் பள்ளியின் பாதுகாப்பு சுவரை உடனடியாக கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
    • புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கட்டிடங்கள், சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதன் அடிப்படையில் பல்வேறு பள்ளி களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த தொடக்கப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

    பள்ளிக்கு மிக அருகில் பிரதான சாலை அமைந்துள்ளதால் எந்த நேரமும் பயணிகள் பஸ்கள, இரண்டு சக்கர வாகனங்கள், அதிகளவில் சென்று கொண்டிருக்கும் இதனால் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி நூல் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு கொடுத்தனர்.அப்போது அவர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டது விரைவில் கட்டப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின ரிடம்உறுதியளித்தார்.

    இரண்டு மாதங்கள் ஆன பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் இதுவரை சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க பள்ளியில் சத்துணவு சமைப்பதற்கான சமையல் கூடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவ தற்கான பணிகள் துவங்கப்படவில்லை. நாளை பள்ளிகள் திறக்கப்படும் போது சத்துணவு திறந்தவெளியில் சமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இது பெற்றோர்கள் மனதில் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்பாதுகாப்பாக வந்து செல்வதற்கும், மாற்று ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பான முறையில் சத்துணவு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×