search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரஞ்சீவி"

    • சிரஞ்சீவி பிறந்தநாளில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    • மெகா 157 படத்தினை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    தற்போதைக்கு "மெகா 157" என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் வசிஸ்தா இயக்குகிறார். இந்த படம் ஃபேன்டசி பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிரஞ்சீவி பிறந்தநாளில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    "மெகா 157" படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், பட அறிவிப்பிலேயே சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் "இந்த முறை, இது பிரபஞ்சத்தை மிஞ்சும் வகையில் மெகா மாஸ்-ஆக இருக்கும். ஐந்து சக்திகள் ஒன்றிணைந்து மெகாஸ்டார் ஆகிறது," என்று குறிப்பிட்டு இருக்கிறது.

    இத்துடன் வெளியிடப்பட்டு இருக்கும் போஸ்டரில் ஐந்து சக்திகள்- நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் உள்ளிட்டவை ஆகும். இவை ஐந்தும் நட்சத்திர வடிவில் ஒன்றிணைந்துள்ளன. "மெகா 157" பட அறிவிப்பு வெளியாகி இருப்பதை ஒட்டி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்த படம் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

    • அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’.
    • இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார்.

    சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015-ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு 'போலா ஷங்கர்' என பெயரிடப்பட்டு உள்ளது.


    இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. 'போலா ஷங்கர்' படத்தின் அதிகாலை ரசிகர் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆந்திர மாநில அரசுக்கு படக்குழு கோரிக்கை வைத்திருந்தனர். ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் 20 சதவீதம் அந்தந்த மாநிலத்தில் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே மாநில அரசின் சலுகைகள் வழங்க முடியும்.


    ஆனால் 'போலா ஷங்கர்' திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கானாவில் எடுக்கப்பட்டு உள்ளதால் சலுகைகள் வழங்க முடியாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. இதனையடுத்து ஆந்திராவில் உள்ள சினிமா தியேட்டர்களில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200-வது நாள் விழா நடைபெற்றது.
    • இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200-வது நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது, அரசியல்வாதிகள் தங்களது பெருமைகளை பேசுவதற்காக சினிமா துறையை விமர்சனம் செய்ய வேண்டாம்.

    மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது,மாநில வளர்ச்சி திட்டங்கள், வேலை வாய்ப்பு உருவாக்குவது, சாலைகள் அமைப்பது, உள்கட்டமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் தான் மக்கள் பாராட்டை பெறுவீர்கள். அதை விட்டுவிட்டு சினிமா துறை குறித்து தேவையற்ற விமர்சனம் செய்ய வேண்டாம் என்றார்.

    சிரஞ்சீவி பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் நடித்து வெளியான ப்ரோ திரைப்படம் குறித்தும், நடிகர் பவன் கல்யாண் குறித்தும்,அந்த படம் எடுப்பதற்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டது எனவும், அதன் வருவாய் குறித்தும் ஆந்திர மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் அம்படி ராம்பாபு மற்றும் அமைச்சர்கள் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சிரஞ்சீவி பேச்சு உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நடிகர் சிரஞ்சீவி தற்போது ‘போலா ஷங்கர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015-ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு 'போலா ஷங்கர்' என பெயரிடப்பட்டு உள்ளது.


    இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி, 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, எமோஷன் வேணுமா எமோஷன் இருக்கு' என தயாரிப்பாளர் தில் ராஜு பாணியில் படத்தை புரொமோஷன் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வாரிசு' திரைப்படத்தின் புரொமோஷனின் போது தயாரிப்பாளர் தில் ராஜு 'டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு' என இப்படத்தை புரொமோஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
    • திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடினர்.

    தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்ததையடுத்து ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.


    இந்நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். அதன்படி, குழந்தைக்கு 'க்ளின் காரா கொனிடேலா' என பெயர் வைத்துள்ளனர்.


    இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சிரஞ்சீவி இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது.
    • இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ராம் சரண்-உபாசனா

    இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா, ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தாத்தாவானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிரஞ்சீவி காரு. இதயத்தில் என்றும் இளமையாகவும் எப்போதும் ஆற்றல் மிக்க இந்த குடும்பத்தில் ஒரு அழகான மெகா இளவரசி ஆசீர்வதிக்கப்படுவது எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம்.

    அன்புள்ள ராம்சரண் நீ குழந்தையாக இருந்த போது உன்னை என் கைகளில் கட்டியணைத்த அந்த மறக்கமுடியாத நாட்களை நினைவு கூர்கிறேன், இப்போது உனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியான செய்தியை கேட்பது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சிரஞ்சீவி காரு தாத்தா பட்டம் பெற்றாலும் நீங்கள் எவர்கிரீன் ஹீரோ தான். உபாசனா மற்றும் குட்டி மகாலட்சுமிக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.



    • வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நேற்று ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழில் சசிகுமாருடன் 'பிரம்மன்', சந்தீப் கிஷனுடன் 'மாயவன்' படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜும் லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.


    வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன். வருணும் லாவண்யாவும் மிஸ்டர், அந்தரிஷம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இதை லாவண்யா திரிபாதி மறுத்திருந்தார்.


    இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இத்தகவல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


    இந்நிலையில், வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் சிறந்த ஜோடியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் பொழியும்" என்று தெரிவித்துள்ளார்.


    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தசரா’.
    • ‘தசரா’ திரைப்படம் இதுவரை ரூ.110 கோடி வசூல் செய்துள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    சிரஞ்சீவி பதிவு

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.110 கோடியை வசூல் செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், 'தசரா' திரைப்படம் பார்த்த நடிகர் சிரஞ்சீவி படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தசரா திரைப்படம் பார்த்தேன். என்ன ஒரு அருமையான படம். இது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் முதல் படம் என்பதை அறிந்து வியந்தேன். எங்களது 'மகாநடி' கீர்த்தி சுரேஷின் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணன் இசையில் அசத்திவிட்டார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்.)

    இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ராம் சரண் -அமித்ஷா- சிரஞ்சீவி

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் 'இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
    • இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

    புதுடெல்லி:

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படம், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

    இதற்கிடையே, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.

    இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை ராகுல் மற்றும் கால பைரவா பாடினர்.

    ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில் நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலில் நடனமாடிய ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் ராம் சரணை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது ராம் சரணுடன் அவரது தந்தை சிரஞ்சீவி உடன் இருந்தார்.

    • நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருந்தார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்.


    வால்டேர் வீரய்யா போஸ்டர்

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'வால்டேர் வீரய்யா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இந்த படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

     

    வால்டேர் வீரய்யா

    வால்டேர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    வால்டேர் வீரய்யா

    வால்டேர் வீரய்யா

    இந்நிலையில் இப்பட்த்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு, விரைவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×