என் மலர்
நீங்கள் தேடியது "RRR"
- 2022 - ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
- 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
2022 - ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.
இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் உருவான விதத்தை படக்குழு ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவண திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு RRR Behind & Beyond என தலைப்பிட்டுள்ளனர். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவுள்ளது. விரைவில் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் ,கோல்டன் குளோப் விருது வென்றது.
- ரூ.500 கோடியில் உருவான படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூலித்தது.
சமீப காலமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற படங்கள் தியேட்டர்களில் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மீண்டும் வசூல் அள்ளி குவித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்கள் கூட 'மீண்டும் ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2022 - ஆண்டு தியேட்டர்களில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் நடித்தனர்.
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இதனை இயக்கினார். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.
இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படம் மீண்டும் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு குழுவினர் நாளை மறுநாள் (10-ந் தேதி) தியேட்டர்களில் இப்படம் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்
- ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர் . இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் நடித்தார். RRR படம் மிகப் பெரிய படமாக அமைந்தது. அந்த படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ஜரகண்டி பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. எக்ஸ் பக்கத்தில் #ஜரகண்டி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
- இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது
ஆஸ்கார் விருதுகள் -2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ' 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.
பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் நாட்டு.. நாட்டு... பாடல் ஒளிபரப்பாகி ஆஸ்கார் விழாவை சிறப்பித்தது. ஏற்கனவே 2023- ம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு... பாடல் பெற்றிருந்தது.
இதன் மூலம் இந்திய பாடலுக்கு பெருமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆண்டும் ஆஸ்கார் விழாவில் இந்த பாடல் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது.
தற்போது இது தொடர்பான 'வீடியோ 'எக்ஸ்' இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
- ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், 'நாட்டு நாட்டு' பாடல் பாடிய பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கோஷமஹால் தொகுதியில் அவர் களமிறக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.
டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதோடு, ஆஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 'நாட்டு நாட்டு' பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு சில நாட்களில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ 6 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.
Сила твітеру: вже вийшла стаття у @timesofindia про ?? версію 'Naatu Naatu'
— Jane_fedotova?? (@jane_fedotova) May 30, 2023
'The clever adaptation of the lyrics to reflect the military context' - такими словами вкотре звернеться увага на те, що війна не закінчилася.
Стаття тут: https://t.co/1tGoCLd8lN https://t.co/NEKOz6eG7L
- இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)
'நாட்டு நாட்டு' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்ததற்கு அதன் நடனமும் ஒரு காரணமாகும். ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடிய இந்த பாடலுக்கு அதே ஸ்டெப்புகளை போட்டு ரீல்ஸ்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்தனர். 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தென்கொரியாவிலும் அதிக வரவேற்பு கிடைத்தது.

நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் ஜாங் ஜே போக், ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதாநாயகன் ராம் சரணுடன் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | J&K: Actor Ram Charan dances to the tunes of 'Naatu Naatu' song from RRR movie, in Srinagar. pic.twitter.com/9oZ8c9sYBY
— ANI (@ANI) May 22, 2023
- இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் ஆர்.ஆர்.ஆர்.
- இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கதாபாத்திரத்தில் ரே ஸ்டீவன்சன் நடித்திருந்தார்.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்.ஆர்.ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

ரே ஸ்டீவன்சன்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார். இவர் ஏற்று நடித்திருந்த சர் ஸ்காட் என்ற எதிர்மறையான ஆங்கில கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது மறைவு ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரே ஸ்டீவன்சன்
இந்நிலையில், ரே ஸ்டீவன்சன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவு ஒன்றை பகிந்துள்ளார். அதில், "நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. ரே மிகவும் துடிப்பான நபர். அவரது ஆற்றலை படப்பிடிப்பு தளம் முழுவதும் பரப்பிவிடுவார். அவருடன் பணிப்புரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
Shocking... Just can't believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.
— rajamouli ss (@ssrajamouli) May 23, 2023
My prayers are with his family. May his soul rest in peace. pic.twitter.com/HytFxHLyZD
- ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் இத்தாலியில் காலமானார்.
- இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர்.
வாஷிங்டன்:
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார். இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர். ஸ்டீவன்சன் ஆர்ஆர்ஆர் படத்தில் ஏற்று நடித்திருந்த எதிர்மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி! ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் சர் ஸ்காட் ஆக என்றென்றும் இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளது.
- ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியானது.
- ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது.
ஜப்பான் ரசிகர்கள் இந்திய படங்களை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்தின் முத்து படத்தை பார்த்த பிறகு அவருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றத்தையே தொடங்கி உள்ளனர். சமீப காலங்களில் திரைக்கு வந்த அனைத்து ரஜினி படங்களும் ஜப்பானிலும் திரையிடப்பட்டன.

ஆர்.ஆர்.ஆர்
சமீபத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய ஆர்.ஆர்.ஆர் படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றதும் ஜப்பானியர்கள் ஆர்வமாக படத்தை பார்த்தனர்.

ஆர்.ஆர்.ஆர்
ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் ஆர் ஆர் ஆர் படம் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இதன் மூலம் ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை ஆர்.ஆர்.ஆர் பெற்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் உலகம் முழுவதும் ரூ.1,235 கோடி வசூலித்து உள்ளது.
- 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

ஆர்.ஆர்.ஆர்
இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இதைத்தொடர்ந்து படக்குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் இயக்குனர் ராஜமவுலி ஆஸ்கர் விருது புரொமோஷனுக்காக ரூ.80 கோடி செலவு செய்ததாக தகவல் பரவி வந்தது.

ஆர்.ஆர்.ஆர். படக்குழு
இந்நிலையில், இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆஸ்கர் விருது புரொமோஷன் நிகழ்ச்சியை ரூ.5 கோடியில் முடிக்க திட்டமிட்டதாகவும் ஆனால், ரூ8.5 கோடி செலவானதாக கூறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திகேயா இப்படத்தின் புரொமோஷன் பணிகளை முன்னெடுத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.